Advertisement
பசுவுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி: பத்திரிக்கை அடித்த விவசாயியால் பரபரப்பு
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
ஆல்பம்
பதிவு செய்த நாள் : ஜனவரி 12,2013,00:16 IST
மாற்றம் செய்த நாள் : ஜனவரி 13,2013,15:22 IST

ஆலங்குடி: புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடியைச் சேர்ந்தவர், சன்னாசி. இவர், ஸ்ரீகோமாதா எனும் செல்லப்பொண்ணு என்ற பெயருடைய தன் பசுவுக்கு, மழை மாரியம்மன் கோவிலில், வளைகாப்பு நடத்தினார். முன்னதாக அவர் அனுப்பிய அழைப்பிதழ் ஏற்று திரளானவர்கள் கலந்து கொண்டனர். மொத்தம், 500 பத்திரிக்கைகள் அச்சிட்டு, தன் சொந்த பந்தங்கள், நண்பர்கள், வி.ஐ.பி.,க்களுக்கும் வழங்கியிருக்கிறார்.

வளைகாப்பு நிகழ்ச்சிக்கு தலைமை வகிக்கும், அறந்தாங்கி யூனியன் தலைவர் மெய்யநாதன் கூறியதாவது:வளைகாப்பு நடத்த இருக்கும் சன்னாசி மீது, கடும் கோபமாகத்தான் இருந்தேன். அழைப்பிதழைப் பார்த்த பிறகு கூட, கோபம் குறையாமல் இருந்தேன். என்னை பார்க்க அவர் வந்தார். அப்போது, வளைகாப்புக்கு அவர் சொன்ன காரணங்களை கேட்டதும், நிச்சயம் அந்த நிகழ்ச்சியில் பங்கேற்று, வளைகாப்பு நடத்த விருப்பம் தெரிவித்துள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.

சன்னாசி சொந்தமாக பசுமாடுகள் வளர்த்து பராமரித்து, பால் கறந்து விற்று ஜீவனம் நடத்துகிறார். அவர் வெளியில் சென்று, மற்றவர்களின் மாடுகளுக்கும் பால் கறந்து, அதற்கு கூலி பெற்று வருகிறார். அதனால் பசுக்களின் மீது, அவருக்கு ஈடுபாடும், பாசமும் என்றைக்கும் உண்டு. அதனால் தான் வளர்க்கும் பசுக்களுக்கு, ராசாத்தி, ராணி, செல்லப்பொண்ணு என்றும் பெயர் சூட்டி அழைத்து வருகிறார்.

இதுகுறித்து சன்னாசி கூறியதாவது:கடந்த, 50 ஆண்டுகளுக்கும் மேல், பசுக்கள் வளர்க்கிறேன். இதுவரை, பசுக்களுக்கென்று ஏதும் செய்யாததால், இப்போது வளைகாப்பு நடத்துகிறேன். பசுக்களை அனைவரும், பால் தரும் ஒரு விலங்கு என்ற கோணத்தில் தான் பார்க்கின்றனர்; நான் அவற்றை தெய்வமாக மதிக்கிறேன்.விவசாயத்தின் மீதும், கால்நடைகள் வளர்ப்பிலும் ஆர்வம் குறைந்து வரும் இக்காலத்தில், கால்நடைகள் மீது இத்தனை அக்கறை கொண்டிருப்பது, மற்றவர்களுக்கும் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தும்.
வளைகாப்பு அன்று காலை, பசுவை குளிப்பாட்டி, மேற்பனைக்காடு மழை மாரியம்மன் கோவிலில் கட்டி, அதற்கு தேவையான அளவுக்கு தீனியும் போட்டு, பொங்கல் வைத்து, அதற்கு ஊட்ட ஏற்பாடு செய்துள்ளேன். விழாவுக்கு வருபவர்கள், வளைகாப்புப் பெண்ணுக்கு சந்தனம், குங்குமம், விபூதி பூசுவதைப் போல், பசுவுக்கு பூசி, வணங்க வேண்டும் என்பது, என் விருப்பம். அன்றைக்கு பசுவின் காலில் பூட்ட, வெள்ளியில் காப்பு ஒன்றை தயாரித்து வைத்திருக்கிறேன்.

நிகழ்ச்சிக்கு வருபவர்களுக்கு டீ, கேசரி, வடை போன்ற சிற்றுண்டி மட்டும் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. நிகழ்ச்சிக்காக, 25 ஆயிரம் ரூபாய் வரை, சன்னாசி செலவு செய்ய திட்டமிட்டு, அதற்கான ஏற்பாடுகளில் தீவிரமாக உள்ளார்.




வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து (21)
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
17-ஜன-201300:51:40 IST Report Abuse
தமிழவேல் ஒருவகையில் நன்றி செலுத்துகின்றார்... 25000 செலவு செய்பவர் கொசுவலைகள் நல்ல தீவனம் சுகாதாரமான மாட்டுத் தொழுவம் போன்ற வசதிகள் செய்து தரலாம்...
Rate this:
0 members
0 members
1 members
Share this comment
KaNaGaRaJ. S... - chennai -33,இந்தியா
18-ஜன-201320:25:10 IST Report Abuse
KaNaGaRaJ. S... பசுவை பலர் தெய்வமாக வணங்குவர் பசு கோமாதா என்று பசுவின் கோமியத்தை வீட்டில் தெளித்தால் நோய்கள் அண்டாது என்பர்...
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
KaNaGaRaJ. S... - chennai -33,இந்தியா
18-ஜன-201320:28:46 IST Report Abuse
KaNaGaRaJ. S... இந்த காலத்தில் பெத்த பிள்ளைக்கு 10000 செலவு செய்து வளைகாப்பு நடத்த யோசிக்கும் பெற்றோர்கள் காலத்தில் பசுவுக்கு 25000ள் வளைகாப்பு நடத்திய சன்னாசி பாராட்டுக்குரியவர்...
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
ganesan - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
13-ஜன-201315:47:52 IST Report Abuse
ganesan சூப்பர் , வாழ்த்துக்கள் திரு . சந்யாசி அவர்களை , பசுவை கொடுமை படுதுபவர்க்களுக்கு இது ஒரு விழிப்புனர்வு . வாழ்க வளமுடன் ...
Rate this:
0 members
0 members
7 members
Share this comment
SENTHIL KUMAR - MADURAI,இந்தியா
13-ஜன-201309:31:07 IST Report Abuse
SENTHIL KUMAR நன்றி கடனை திருப்பி செலுத்துவதில் தமிழனுக்கு நிகர் தமிழனே பென்னிகுக் முதல் இந்த பெண் பசுவரை "நன்றி மறப்பது நன்றன்று நன்றல்ல அன்றே மறப்பது நன்று"
Rate this:
0 members
0 members
8 members
Share this comment
மதுரை விருமாண்டி - சான் ஹோஸே, கலிபோர்னியா ,யூ.எஸ்.ஏ
13-ஜன-201305:41:34 IST Report Abuse
மதுரை விருமாண்டி எனக்கு இது சரியாப் படல்லை... இவரு வளைகாப்புக்கு பத்திரிகை வச்சாரே, பசுவுக்கு பாவாடை கட்டி கல்யாணம் பண்றதுக்கு பத்திரிகை போட்டாரா ??
Rate this:
14 members
0 members
9 members
Share this comment
raj - sivagangai,இந்தியா
12-ஜன-201319:14:34 IST Report Abuse
raj இது ஒன்றும் தப்பாக தெரியவில்லை அவரை வாழவைக்கும் கடவுளாக நினைத்து மரியாதையை செய்கிறார்
Rate this:
0 members
0 members
12 members
Share this comment
Gilbert karunagaran - Istres ,பிரான்ஸ்
12-ஜன-201318:30:22 IST Report Abuse
Gilbert karunagaran வளைகாப்புக்கு அழைக்கப் பட்டவர்கள், பரிசு பொருட்களுடன் (கழுத்துக்கு மணி, மற்றும் தவிடு, பிண்ணாக்கு...) வருவார்களா ?
Rate this:
0 members
0 members
3 members
Share this comment
sundar iyer - chennai,இந்தியா
12-ஜன-201313:02:49 IST Report Abuse
sundar iyer இதில் ஒன்றும் தவறு இருப்பதாகத் தெரியவில்லை.
Rate this:
3 members
1 members
14 members
Share this comment
Er. S. ARJUNAN - Jeddah,சவுதி அரேபியா
12-ஜன-201312:54:34 IST Report Abuse
Er. S. ARJUNAN அவரை வாழ்த்துவோம், மேனகா காந்திக்கு தெரிய வந்தால் தமிழனுக்கு உயர்வு கிட்டும். இது போன்ற நல்ல செய்திகளை வெளியிடும் தினமலருக்கும் வாழ்த்துக்கள்.
Rate this:
1 members
0 members
18 members
Share this comment
Aravamudhan Raman - Baton Rouge,யூ.எஸ்.ஏ
12-ஜன-201309:55:49 IST Report Abuse
Aravamudhan Raman நான் ஒரு முறை குற்றாலத்தில் மௌனசாமியார் மடத்தில் மாட்டு பூஜை பார்த்தேன். மடத்தில் மட்டும் தானா வீட்டிலும் செய்யலாம் என்று காட்டுஹிறார் இவர். பசு நம்மை காக்கிறது. அதை பூஜிப்பது மடத்தனம் அல்ல. நம் முன்னோர் நல்லவழி காட்டி சென்றிருக்கிறார்கள். பாராட்டுகிறேன். ஆ. ராமன், அமெரிக்கா
Rate this:
3 members
1 members
24 members
Share this comment
vayalum vazhvum-saravanakumar - doha,கத்தார்
12-ஜன-201309:39:42 IST Report Abuse
vayalum vazhvum-saravanakumar இதுகுறித்து சன்னாசி கூறியதாவது: கடந்த, 50 ஆண்டுகளுக்கும் மேல், பசுக்கள் வளர்க்கிறேன். இதுவரை, பசுக்களுக்கென்று ஏதும் செய்யாததால், இப்போது வளைகாப்பு நடத்துகிறேன். பசுக்களை அனைவரும், பால் தரும் ஒரு விலங்கு என்ற கோணத்தில் தான் பார்க்கின்றனர் நான் அவற்றை தெய்வமாக மதிக்கிறேன், நானும் எங்கள் வீட்டில் உள்ள எனது பாசமிகு வெள்ளகுட்டி என்கிற கோமாதாவுக்கு பூஜை செய்ய போகிறேன். நன்றி திருமிகு சன்னாசி அவர்களே
Rate this:
1 members
0 members
18 members
Share this comment

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

அன்புள்ள வாசகர்களே!,

நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.