Advertisement
பிரான்ஸ் நாட்டில் "தமிழ்' பேசுவதில் ஆர்வம்; 2.50 லட்சம் பேருக்கு எழுத, படிக்க தெரியும்
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
Bookmark and Share  
ஆல்பம்
பதிவு செய்த நாள் : ஜனவரி 13,2013,00:20 IST
மாற்றம் செய்த நாள் : ஜனவரி 13,2013,01:34 IST

மூணாறு: தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை, உலகம் முழுவதும் தமிழர்களால் சிறப்பாக கொண்டாடப்படுவதை, உறுதி செய்கிறார், பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த டேவிட். அவர் கூறுகையில் பிரான்ஸ் நாட்டினர் தமிழ் பேச ஆர்வமாக இருப்பதாகவும், அங்கு 2.50 லட்சம் பேருக்கு நன்றாக தமிழில் பேசவும், எழுதவும் தெரியும், எனக்கூறியது, வியப்பை ஏற்படுத்தியது.

பிரான்சில்"மசாஜ்' சென்டர் நடத்தி வரும் டேவிட்,32,இந்தியாவுக்கு சுற்றுலா வந்துள்ளார். கடந்த வாரம் மூணாறுக்கு வந்தார். தோற்றத்தில் ஆங்கிலேயரான இவர் தமிழை, தெளிவாகவும், சரளமாகவும், இலக்கணத்துடனும் பேசிய விதம் அனைவரையும் வியப்படையச் செய்ததுடன், பெருமையாகவும் இருந்தது.



டேவிட் கூறியதாவது:பிரான்சில் தமிழ் மொழியை கற்க, பள்ளிக் கூடங்கள் உள்ளன. இவற்றின் மூலம் 2.50 லட்சத்திற்கும் அதிகமானோர், தமிழ் மொழியை பேசவும், எழுதவும் கற்றுள்ளனர். தமிழின் மீது ஏற்பட்ட பற்றுதலும், தமிழர்களின் கலாச்சாரமும், என்னை கவர்ந்ததால், தமிழ் மொழியை பேசவும், எழுதவும் கற்றுக்கொண்டேன், என்றார். இவர் அணிந்திருந்த பனியனிலும் "தமிழன்' என எழுதப்பட்டு இருந்தது. நம்மில் பலர் படிப்பு, கலாச்சாரம், வாழ்க்கை முறை போன்ற வற்றில், வெளி நாட்டினரை பின் பற்றி வரும் நிலையில், வெளிநாட்டினர் ஒருவர், தமிழனின் கலாச்சாரத்தை பின் பற்றி, தமிழர்களுடன் பகிர்ந்து கொள்ளும் உணர்வு பாராட்டுக்குறியதே.




வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து (25)
NAVANEETHAM GOPALAKRISHNAN - Kolkata,இந்தியா
16-ஜன-201312:50:53 IST Report Abuse
NAVANEETHAM GOPALAKRISHNAN பெருமைக்கு உரிய விசயம்.தமிழ் தமிழ் என்றுறேன்றும் நீடித்து வாழும் என்பதில் ஐயம் இல்லை.புதுச்சேரியும் ஒரூ காரணம்.்
Rate this:
0 members
0 members
1 members
Share this comment
S T Rajan - Ettayapuram ,இந்தியா
13-ஜன-201319:29:38 IST Report Abuse
S  T Rajan நம்ம ஊர்லதான் தமிழை வைத்து அரசியல் பண்ணுகிறார்கள் , அரசியல்வாதிகளின் குழந்தைகள் ஆங்கிலத்தில் படிக்கின்றனர் , ஆனால் அவர்கள் தமிழை மேடைக்கு மேடை காப்பாற்றுவதாக கூறி ஏமாற்றுகின்றனர் , அங்காவது நம்முடைய மொழி பெருமை அடைவதை பார்க்கும் பொது பெருமையாக இருக்கிறது. " வாழ்க தமிழன் , வளர்க தமிழ் "
Rate this:
0 members
0 members
44 members
Share this comment
P. Kannan - Bodinayakkanur,இந்தியா
13-ஜன-201317:10:35 IST Report Abuse
P. Kannan இது புதுவை மக்களின் கைங்கரியம். அவர்களும் தமிழுக்கு மிகப்பெரிய தொண்டாற்றி உள்ளனர் எல்லாம் திட்டமிட்டு மறைக்கப்படுகிறது.
Rate this:
1 members
0 members
39 members
Share this comment
Ramadurai Azhagirisamy - Bisha,சவுதி அரேபியா
13-ஜன-201317:07:50 IST Report Abuse
Ramadurai Azhagirisamy கேட்கவே மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது
Rate this:
0 members
0 members
39 members
Share this comment
MUTHUKUMARAN - Paris,பிரான்ஸ்
13-ஜன-201315:51:52 IST Report Abuse
MUTHUKUMARAN எல்லோருக்கும் வணக்கம் இந்த செய்தியை மகிழ்ச்சிய்டன் படிக்கும் இந்த சமயத்தில் மற்றும் ஒரு செய்தியை உங்களுக்கு கூற விரும்புகிறேன், செக் நாட்டில் பிறந்த ஒருவருக்கு பிரான்சில் "அருந்தமிழ்" என்ற பட்டம் வழங்கப்பட்டது அவரின் தமிழ் ஆற்றலுக்கும் தொண்டிற்கும், மேலும் இதைப்பற்றி அறியவிருப்புள்ளவர்கள் தினமலரில் உலகத் தமிழர் செய்தி பகுதிக்கு சென்று பார்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன். முத்துகுமரன்
Rate this:
0 members
0 members
30 members
Share this comment
M.P.MADASAMY - Trivandrum,இந்தியா
13-ஜன-201315:47:57 IST Report Abuse
M.P.MADASAMY பாரெங்கும் தமழ் மணம் கமழச்செய்வோம்.
Rate this:
0 members
0 members
16 members
Share this comment
Vadivel Gvl - johur ,மலேஷியா
13-ஜன-201314:49:45 IST Report Abuse
Vadivel Gvl இதை படிக்கும் போது தமிழின் பெருமையை உலக அளவிற்கு பெருமை ஏற்படுத்திய நம் முன்னோர்க்கு பாராட்டுக்கள் ....ஆனால் நம் தமிழ் நாட்டில் இன்னும் அதிக விற்பனை அங்காடிகளில் தமிழ் பெயர்களையே கானமுடிய வில்லை என்பது மிகவும் வேதனைக்கு உடையதாக உள்ளது .... நன்றி க.வடிவேல்
Rate this:
0 members
0 members
34 members
Share this comment
Dhanabal - Thoothukudi,இந்தியா
13-ஜன-201313:42:27 IST Report Abuse
Dhanabal வெளிநாட்டவர்கள் தமிழை ஆர்வமுடன் படிக்கும் போது தமிழ் நாட்டில் உள்ள தமிழன் மட்டும் ஆங்கில மோகத்தில் மிதப்பது வெட்கக்கேடானது....
Rate this:
1 members
0 members
25 members
Share this comment
Abdul Khader - Riyadh,சவுதி அரேபியா
13-ஜன-201312:26:15 IST Report Abuse
Abdul Khader At this situation, it is very important to inform everyone about the practice which our societies are performing. That is, if any one whether muslim or non-muslim living in Pondichery address wants to go to France for residence / work permit, they are most welcome by France Government provided they make affidavit that they are converted to Christianity. In this way, we can say, a mini tamil speaking population is residing/working at France.
Rate this:
3 members
0 members
4 members
Share this comment
vasanthakumar - chennai,இந்தியா
13-ஜன-201310:44:49 IST Report Abuse
vasanthakumar பிரான்ஸ் நாட்டில் தமிழ் பேசுறாங்க ..... ஆனா நம்ம தமிழ் அம்மாக்கள் தன் குழந்தை மம்மி என்று அழைப்பதையே பெருமையாக நினைகிறார்கள் ..... அவர்கள் எல்லோரிடமும் பெருமையாக சொல்லும் இன்னொரு சொல் " என் குழந்தைக்கு தமிழ் அவ்வளவா வராது " தமிழ் மொழி யோட பெருமையை தமிழ் மக்கள் புரிந்து கொண்டால் நல்லது ...
Rate this:
0 members
0 members
36 members
Share this comment
Vishnu - Bangalore,இந்தியா
13-ஜன-201317:25:25 IST Report Abuse
Vishnuபிரான்சுக்காரன் தமிழ் பேசுறது தப்பு கிடையாது..............ஆனா நம்ம குழந்தைங்க பிரஞ்சோ, இங்கில்ஷோ, ஹிந்தியோ கத்துகிட்டா தான் மொழி போராட்டம் பண்ணுவோம் ...
Rate this:
3 members
0 members
35 members
Share this comment

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

அன்புள்ள வாசகர்களே!,

நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.