Advertisement
மடத்தின் தலைவரானார் ஐ.ஐ.டி.,யில் தங்கம் பெற்றவர்
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
ஆல்பம்
பதிவு செய்த நாள் : ஜனவரி 16,2013,00:07 IST
மாற்றம் செய்த நாள் : ஜனவரி 16,2013,01:54 IST

பெங்களூரு:கர்நாடகாவில், செல்வாக்கு மிக்க மடத்தின் தலைவராக, ஐ.ஐ.டி.,யில் தங்க பதக்கம் பெற்றவர் நியமிக்கப்பட்டார்.ஒக்கலிகா சமுதாயம், கர்நாடக மாநிலத்தின் பெரும்பான்மை சமுதாயங்களில் ஒன்று. இந்த சமுதாயத்தின் தலைவராக விளங்கியவர், ஆதிசுஞ்சனகிரி மடத்தின் தலைவர், பாலகங்காதரநாத சுவாமி. கடந்த ஞாயிறன்று, சுவாமி பாலகங்காதரநாதர் திடீரென இறந்தார்.

பல மாநிலங்களில், 5,000 கோடி ரூபாய்க்கும் அதிகமான சொத்துகளை கொண்டுள்ள ஆதிசுஞ்சனகிரி மடத்தின் அடுத்த தலைவராக, நிர்மலானந்தர், 43, என்பவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். மடத்தின் தலைவர், மறைந்த, பாலகங்காதர சுவாமி எழுதி வைத்த, உயில், தனியார் வங்கியின், லாக்கரில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தது. அதை பார்த்த போது, நிர்மலாந்தா தான், அடுத்த தலைவராக நியமிக்கப்பட வேண்டும் என, பாலகங்காதரநாத சுவாமி எழுதி வைத்திருந்தார்.

இதையடுத்து, மடத்தின் அடுத்த தலைவராக நியமிக்கப்பட்ட சுவாமி நிர்மலானந்தர், தன் ஆயுள் காலம் வரை, மடத்தின் தலைமை பொறுப்பையும், கோடிக்கணக்கான ரூபாய் சொத்துகளையும்
நிர்வகிப்பார்.இவர், தும்கூர் மாவட்டத்தின், சீர்னஹள்ளி என்ற இடத்தில், நடுத்தர வசதி கொண்ட குடும்பத்தில், 1969ம் ஆண்டு பிறந்தவர். நாட்டின் உயரிய கல்வி நிறுவனங்களில் ஒன்றான, சென்னை, ஐ.ஐ.டி.,யில் படித்து, தங்க பதக்கம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.




வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து (13)
Natarajan Iyer - chennai,இந்தியா
16-ஜன-201317:13:45 IST Report Abuse
Natarajan Iyer விஞ்ஞானமும் மெய்ஞானமும் சேர்வது நல்லதுதான்...........வாழத்துக்கள்.
Rate this:
1 members
0 members
11 members
Share this comment
Peria Samy - chennai,இந்தியா
16-ஜன-201316:44:35 IST Report Abuse
Peria Samy அறிவியலும் ஆன்மீகமும் இணைந்து செயல்பட்டால் அளப்பரிய ஆச்சரியங்களை நிகழ்த்தலாம்.நிர்மலானந்தா சாதிப்பாரா?,சாதிக்கவேண்டும் நித்யானந்தா போல சர்ச்சையில் சிக்கிக்கொள்ளக்கூடாது.,வாழ்த்துக்கள்.
Rate this:
2 members
0 members
12 members
Share this comment
Er. S. ARJUNAN - Jeddah,சவுதி அரேபியா
16-ஜன-201315:52:42 IST Report Abuse
Er. S. ARJUNAN ஆன்மீகத்தை ஆராய்து பார்த்தல் தெரியும் அனைத்தும் விஞ்ஞானமே.
Rate this:
6 members
1 members
11 members
Share this comment
GIRAMANI THIYAGARAJAN - CHENNAI,இந்தியா
17-ஜன-201313:45:27 IST Report Abuse
GIRAMANI THIYAGARAJANஆன்மிகம் ஆரம்பிக்கும் இடமே விஞ்ஞானத்தின் முடிவில் தானே .......... யாரோ சொன்னது ...
Rate this:
0 members
0 members
1 members
Share this comment
S. ரெகுநாதன் - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
16-ஜன-201315:43:34 IST Report Abuse
S. ரெகுநாதன் உயர்கல்வி படிப்பால் பணத்தையும், இகபர சுகத்தையும் பெறலாம்...ஆனால் மடாதிபதி ஆவதால் அக்யனத்தை அழித்து.. பரம்பொருளை அறியும் ஞானத்தையும், பேரின்ப வாழ்வும் பெறலாம்...சுவாமி நிர்மளானன்தரை வணங்குவோம்.(வாழ்த்தமுடியாது..)
Rate this:
1 members
0 members
13 members
Share this comment
Vishnu - Bangalore,இந்தியா
16-ஜன-201311:36:46 IST Report Abuse
Vishnu முற்றும் துறந்த முனிவர்களுக்கு ஜாதிகள் எதற்கு ??
Rate this:
5 members
1 members
21 members
Share this comment
சுலைமான் - தோஹா,கத்தார்
16-ஜன-201311:24:47 IST Report Abuse
சுலைமான் IIT யில் தங்கபதக்கம் பெற்றவர் ஒரு மடத்தின் தலைவர் ஆனதன் மூலம் இவரது அறிவியல் ஞானம் ஒரு மடத்துக்குள் முடக்கப்பட்டுள்ளது வேதனையான விஷயம்.
Rate this:
43 members
1 members
25 members
Share this comment
16-ஜன-201312:12:58 IST Report Abuse
அறிவாலயம் c / o போயஸ் ஒன்றும் முடக்கப்படவில்லை. விஞ்ஞானமும் மெய்ஞானமும் வளர படித்தவர்கள் கையில் மத நிறுவனங்கள் வருவது நல்லது வெறும் மதக் கல்வி மட்டும் கற்றவர்கள் தலைவர்களாக உள்ள இயக்கங்கள் பெரும்பாலும் தவறான பாதைக்கும், பழைய வாதத்துக்கும் மட்டுமே வழி வகுத்துவிட்டன விஞ்ஞானியான அப்துல் கலாம், பொருளியல் பேராசிரியர் முரளி மனோகர் ஜோஷி ,ஐ ஐ டி பட்டதாரி அரவிந் கேஜ்ரிவால் ஆகியோர் சமூக சேவையாற்றவில்லையா? பொது சேவைக்கு படித்தவர்கள் வரத் தயங்குவதால்தான் நித்தி, மஞ்சத்துண்டு ,சோனியா போன்றவர்கள் கையில் மக்கள் சிக்கித் தவிக்கின்றனர்.இந்த மடம் பற்பல அறிவியல் தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களை நடத்துகிறது இப்படிப்பட்டவர்களை வரவேற்ப்போம்...
Rate this:
6 members
0 members
57 members
Share this comment
manokaran - kanchipuram,இந்தியா
16-ஜன-201317:00:32 IST Report Abuse
manokaran பிற்பட்த்தப்பட்ட சமுதாயத்தில் ஒருவர்கூட கிடைக்கவில்லையா?அல்லது இது ஒரு அரசியல் தந்திரமா? இன்று இந்த நாட்டில் மேல்தட்டு மக்கல் மட்டுமே பெரிய பதவிக்கு வர தகுதி என்ன என்பதை அவர்களே நிர்ணயித்து விடுகிறார்களே இது நியாயமா?மடம் என்பது பொது மக்களுக்கு சேவை செய்வதற்காக பலதரப்பு மக்கள் கொடுத்த சொதுக்லகளை இன்று ஒரு குறிப்பிட்ட சமுதாயம் மட்டுமே பயன்பெறும் வகையில் நடக்கிறேதே இதை என்ன செய்ய? கந்தன்.சென்னை ...
Rate this:
24 members
1 members
7 members
Share this comment
Nethaji - Muthuvai, Mukavai Dist.,இந்தியா
16-ஜன-201309:51:06 IST Report Abuse
Nethaji அறிவாளி இந்த மடத்தையும் பணத்தையும் ஆக்க பூர்வமாக பயன் படுத்தினால் இது இந்தியாவிற்கு உதாரணமாக இருக்கும். என் அறிவுரை இலவச கல்வி கொடுக்க இவர் முயற்சிக்கலாம். நேர்மையான மனிதர்களை அதன் மூலம் உருவாக்கலாம்.
Rate this:
2 members
0 members
26 members
Share this comment
Nagan Srinivasan - Houston,யூ.எஸ்.ஏ
16-ஜன-201309:12:38 IST Report Abuse
Nagan Srinivasan நிர்மலாந்தாவுக்கு வாழ்த்துக்கள் 5000 கோடியும் ஆண்மீகத்துக்கா பயன் பெறட்டுமே
Rate this:
5 members
1 members
26 members
Share this comment
Krishnamoorthy Srinivasa Rao - delhi,இந்தியா
16-ஜன-201308:28:34 IST Report Abuse
Krishnamoorthy Srinivasa Rao பெற்ற கல்வியை மடத்தின் வளர்ச்சிக்கு மட்டுமிற்றி ஒட்டு மொத மக்கள் சமுதாய வளர்ச்சிக்கு பயன்படுத்துவர் என்று வாழ்த்துவோம் ..
Rate this:
2 members
0 members
31 members
Share this comment
Indian from Mumbai - Mumbai,இந்தியா
16-ஜன-201308:12:41 IST Report Abuse
Indian from Mumbai வாழத்துக்கள்.
Rate this:
2 members
0 members
20 members
Share this comment

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

அன்புள்ள வாசகர்களே!,

நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.