Advertisement
தொழிலதிபர் மாநாட்டில் பாட்டு பாட சொல்லி மம்தா அலம்பல்
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
ஆல்பம்
பதிவு செய்த நாள் : ஜனவரி 16,2013,23:10 IST
மாற்றம் செய்த நாள் : ஜனவரி 18,2013,00:32 IST

ஹால்டியா: மேற்கு வங்க மாநிலத்திற்கு முதலீடு திரட்டுவதற்காக, முதல்வர், மம்தா பானர்ஜி கூட்டிய, தொழிலதிபர்கள், முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்து கொண்டவர்களை, பெயர் சொல்லி அழைத்தும், பாட்டு பாட சொல்லி வற்புறுத்தியும், மம்தா செய்த அலம்பல்கள் அம்பலத்திற்கு வந்துள்ளன.

குஜராத் முதல்வர், நரேந்திர மோடியின் வழியை பின்பற்றி, பல மாநில முதல்வர்களும், தங்கள் மாநிலத்திற்கு தேவையான நிதியை, முதலீட்டை திரட்டுவதற்காக, தொழிலதிபர்கள் மாநாடுகளை கூட்டுவது, சமீப காலத்திய வழக்கமாக உள்ளது.மேற்கு வங்க முதல்வரும், திரிணமுல் காங்கிரஸ் தலைவருமான, மம்தா பானர்ஜிக்கும், தொழிலதிபர் மாநாட்டை நடத்தி, நிதி திரட்ட வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது. இதற்காக, மாநிலத்தின் துறைமுக நகரமான ஹால்டியாவின், நட்சத்திர ஓட்டலில் ஏற்பாடு செய்யப்பட்டது.நாட்டின் முன்னணி தொழிலதிபர்களுக்கு அழைப்பு அனுப் பப்பட்டிருந்தது; மாநாட் டிற்கு, "பெங்கால் லீட்ஸ்' என, பெயரும் வைக்கப்பட்டிருந்தது. மாநிலத்தின் தொழில் வளம், தொழில்களுக்கான வாய்ப்பு, மாநில அரசு வழங்கும் சலுகைகள் போன்றவற்றை பட்டியலிடுவதற்கு பதிலாக, "மம்தா பானர்ஜியின், "பந்தா'வை காட்டும் நிகழ்ச்சியாகவே அது அமைந்திருந்தது' என, தொழிலதிபர்கள் சிலர் குறைபட்டு கொண்டனர்.
"வயலின் வாசிங்க'
துன்சேரி பெட்ரோகெமிக்கல் நிறுவனத்தின் தலைவர், தனுகாவை மேடைக்கு அழைத்து, வயலின் கருவியை இசைக்குமாறு கேட்டு கொண்டார். அவரும், சங்கோஜத்துடன் வயலின் இசைத்து, முதல்வரின் அன்பை பெற்றார்.
ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர்களில் ஒருவரான, சஞ்சீவ் கோயங்கா கையில், "மைக்'கை கொடுத்து, இந்தி பட பாடல் ஒன்றை பாடுமாறு உத்தரவிட்டார், மம்தா. அதை அவர் அரையும் குறையுமாக பாடினார். கூடுதலாக, ரவீந்திரநாத் தாகூரின் பாடல் ஒன்றின் சில வரிகளையும் பாடி, முதல்வரை புல்லரிக்க வைத்தார் அவர்.
"தேவேஸ்வர்... வாங்க...'
ஐ.டி.சி., நிறுவன தலைவர், தேவேஸ்வர் வந்திருக்கிறார் என, தவறாக நினைத்த மம்தா, "ஐ.டி.சி., தேவேஸ்வர் இங்கே வாங்க...' என அழைத்தார். கூட்டத்திற்கு தேவேஸ்வர் வரவில்லை; நிறுவனத்தின் உயரதிகாரி, குருஷ் கிரான்ட் மேடையேறினார்.அவரை பிற தொழிலதிபர்களிடம், "இதே, தேவேஸ்வர், உங்களிடம் சில வார்த்தைகளை பேசுவார்...' என கூறி, "மைக்'கை கொடுத்தார். "மேடம் நான் தேவேஸ்வர் இல்லை; கிரான்ட்...' என, அந்த அதிகாரி கூற, அதை பற்றி கவலைப்படாமல், தேவேஸ்வர் பெயரையே பல முறை, திரும்ப திரும்ப உச்சரித்தார் மம்தா.குரூப் போட்டோ எடுப்பதற்காக, ஒவ்வொரு தொழிலதிபர்களையும் பெயர் சொல்லி அழைத்த மம்தா, "நீங்க இங்கே வாங்க... நீங்க பின்னால் போய் நில்லுங்க...' என, கட்டளைகளை இட்டு, அதிர வைத்தார்."செயில்' நிறுவன தலைவரை அழைக்க, "செயில் எங்கே... இங்கே வாங்க' என உத்தரவிட்டார். என்.டி.பி.சி., நிறுவன தலைவரை அழைக்க, "என்.டி.பி.சி., எங்கே இருக்கிறீங்க...' என, "அன்புடன்' அழைத்தார்.இப்படி மம்தாவின் அலம்பல் அதிகமாக இருந்த கூட்டத்தில் போதுமான முதலீடு திரண்டதாக செய்திகள் இல்லை.




வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து (30)
p.mohamed rafik,kuruvadi - hafar al batin,இந்தியா
17-ஜன-201321:26:02 IST Report Abuse
p.mohamed rafik,kuruvadi குஜராத் முதல்வர் நரேந்திர மோடியைப் பின்பற்றி என்று கூறியிருப்பது உங்களது அறியாமையை தான் காட்டி இருக்கிறது.ஆந்திரா முன்னால் முதல்வர் சந்திர பாபு நாய்டு அவர்கள் தான் அவர் ஆட்சி காலத்தில் தொழில் அதிபர்கள் கூட்டத்தை கூட்டி மாநில வளர்ச்சிக்கு பெரிதும் உதவினார்.இன்னும் அவருடைய வழிமுறையைப் பின்பற்ற நிறைய விஷயங்கள் உள்ளன.அவரால் தான் dr .அபுல் கலாம் என்ற விஞ்ஞானி நமது நாட்டின் ஜனாதிபதி ஆக முடிந்தது.நம் தமிழ்நாடும் இவரது திட்டங்களை பின்பற்றினால் பெரிதும் வளர்ச்சி அடையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
santhosh - chinnasalem,இந்தியா
17-ஜன-201321:14:20 IST Report Abuse
santhosh don't take this negatively, because these things are very common in corporate peoples. she is following corporate trs........
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Rajesh - Chennai,இந்தியா
17-ஜன-201319:15:53 IST Report Abuse
Rajesh யார் என்ன சொன்னாலும் நாட்டை பற்றியும், நாட்டு மக்களை பற்றியும் மிகவும் கவலை படுபவர். நம் தமிழ்நாட்டு அரசியல் வாதிகளைபோல் சென்ட்ரல் கவர்மெண்டுக்கு சலாம் போடுபவர் அல்ல . மிக நல்ல தலைவர்.
Rate this:
4 members
0 members
7 members
Share this comment
MJA Mayuram - chennai,இந்தியா
17-ஜன-201316:58:22 IST Report Abuse
MJA Mayuram இம்சைகளை தமிழ்நாடு மட்டுமே அனுபவிக்கவேண்டுமா என்ன ...கொஞ்ச நாள் கல்கத்தாவும் அனுபவிக்கட்டும்
Rate this:
2 members
0 members
11 members
Share this comment
Giri Srinivasan - chennai ,இந்தியா
17-ஜன-201316:42:48 IST Report Abuse
Giri Srinivasan இங்கெல்லாம் கதைதான், அதுவும் நாங்க சொல்ற நீதிக்கதைகள் தான் . மற்றவருக்கு மட்டும் தான் ????????????
Rate this:
0 members
0 members
4 members
Share this comment
Guru - Batam,இந்தோனேசியா
17-ஜன-201315:36:23 IST Report Abuse
Guru ஒரே பொழுதுபோக்குதான்
Rate this:
0 members
0 members
7 members
Share this comment
Er. S. ARJUNAN - Jeddah,சவுதி அரேபியா
17-ஜன-201314:20:06 IST Report Abuse
Er. S. ARJUNAN குத்தாட்டம் போட்டவர்களுக்கு கொத்துக்கொத்தாக பணம் கொடுத்த கட்சியின் தலைவராச்சே.
Rate this:
3 members
0 members
8 members
Share this comment
PRAKASH - chennai,இந்தியா
17-ஜன-201313:46:10 IST Report Abuse
PRAKASH இப்ப தான் நிம்மதியா இருக்கு மேற்கு வங்கமும் பின்னோக்கி செல்கிறது என்பதை நினைத்து
Rate this:
4 members
1 members
15 members
Share this comment
umarfarook - dindigul,இந்தியா
17-ஜன-201313:35:08 IST Report Abuse
umarfarook மேற்கு வங்க ஜெ என நிருபித்து விட்டார்
Rate this:
8 members
0 members
32 members
Share this comment
Pugal - Kovai ,இந்தியா
17-ஜன-201313:16:21 IST Report Abuse
Pugal கொஞ்ச நாள் முன்பு, இந்த அம்மையாரை தைரியமானவர், இது போல கலைஞரால் முடியுமா என்று எழுதியவர்கள் முகத்தில் கரி பூசி விட்டாரே, பாவம். இவரின் இது போன்ற கோமாளித் தனமான செயல்களைப் பற்றிப் பேசும்போதும், சிலர் கலைஞர் பெயரை இணைத்ததால், நானும் கலைஞரை சம்பந்தப்படுத்தி எழுதியிருக்கிறேன்.
Rate this:
4 members
1 members
25 members
Share this comment
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
17-ஜன-201315:32:31 IST Report Abuse
Nallavan Nallavanஅண்ணா -வின் பிறந்த நாளன்று கொடும் கைதிகளை விடுவித்தல்,,,, கனவில் இறந்த தலைவர்கள் வந்ததாகவும்,,,, சத்தியம் பெற்றுக்கொண்டதாகவும் கூறுதல்,,,, எப்போதோ இறந்த தலைவர்கள் "என்னிடம் அதைப்பெசினார்கள்....இவ்வாறு அறிவுறுத்தினார்கள் என்று அடிக்கடி காமெடி பண்ணுவது,,,, பகுத்தறிவு பேசிக்கொண்டே "எல்லாம் என் ஜாதகம்" என்று புலம்புதல்,,,, பகுத்தறிவு பேசிக்கொண்டே சொந்த ஊர் அம்மனை வழிபடுதல்,,,, "ராஜீவ் உயிருடன் வந்தால் கூட தனது கொலையாளிகளை மன்னிப்பார்" என்று கூறுதல் இதெல்லாம் கோமாளித்தனங்கள் இல்லை என்றால் நண்பர் திரு. புகழ் அடிக்கடி கூறுவது போல வாசகர்கள் கலைஞரை அபாண்டமாக வம்புக்கு இழுப்பதாகத்தான் அர்த்தம்...
Rate this:
4 members
1 members
13 members
Share this comment

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

அன்புள்ள வாசகர்களே!,

நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.