Advertisement
பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க கேரளா புது சட்டம்
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
ஆல்பம்
பதிவு செய்த நாள் : ஜனவரி 16,2013,23:28 IST
மாற்றம் செய்த நாள் : ஜனவரி 18,2013,00:32 IST

திருவனந்தபுரம்: பாலியல் பலாத்காரத்தால், பாதிக்கப்பட்ட பெண் தற்கொலை செய்தால், அதற்கு காரணமான குற்றவாளிக்கு மரண தண்டனை விதிக்க வகை செய்யும், புது சட்டம், கேரளாவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.கேரளாவில், பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுவோரை தண்டிக்கும் வகையில், சட்டத்தை கடுமையாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்படி, பொது இடங்களில், பெண்களை கேலி செய்தல்; வாகனங்களிலோ, நிகழ்ச்சிகளிலோ, அருகே அமர்ந்துள்ள பெண்ணை தொடுவது; சில்மிஷம், அவமரியாதை செய்வது போன்றவை, இனிமேல் குற்றச்செயல்களாக கருதப்படும்.இவற்றிற்கு, ஏழு ஆண்டுகள் வரை, கடுங்காவல் தண்டனை அளிக்கும் வகையில், புதிய சட்ட மசோதா தயாரிக்கப்பட்டு உள்ளது. மேலும், உடல் ரீதியாகவோ, மன ரீதியாகவோ, பெண் பாதிக்கப்பட்டு, தற்கொலை செய்து கொண்டாலோ, இறக்க நேரிட்டாலோ, குற்றவாளிக்கு, அதிகபட்சமாக தூக்கு தண்டனை விதிக்கப்படும்.மேலும், மொபைல்போனை பயன்படுத்தி, பெண்களை அவமானப்படுத்துதல், தொந்தரவு செய்தல், ஆபாச, எஸ்.எம்.எஸ்., அனுப்புதல், படமெடுத்தல் போன்றவற்றிற்கும், அதிகபட்சமாக, ஆயுள் தண்டனை விதிக்கும் வகையில், சட்டம் கொண்டு வரப்பட உள்ளது.இதற்கான மசோதா, கேரள மாநில சட்டசபையின், அடுத்த கூட்டத்தில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.




வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து (15)
Guru - Batam,இந்தோனேசியா
17-ஜன-201320:30:16 IST Report Abuse
Guru சபாஷ்
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Magesu - Thanjavur  ( Posted via: Dinamalar Android App )
17-ஜன-201317:23:43 IST Report Abuse
Magesu மலையாளிகள் ஏமாறாமல் இருந்தால் சரி
Rate this:
2 members
0 members
2 members
Share this comment
G. BALASUBRAMANIAN - New Delhi,இந்தியா
17-ஜன-201317:10:15 IST Report Abuse
G. BALASUBRAMANIAN அடி சக்க சபாஷ் இம்மாதிரி ஒவ்வொரு ராஜ்யமும் கருத்துக்களை மத்திய அரசுக்கு அனுப்பி முடிவு எடுக்க வேண்டியதுதான், எல்லாத்துக்கும் மேல் சட்டத்தை காக்கவேண்டிய காவல் துறையும் தன் ஆக்க பூர்வமான செயல்களை செய்தால் பெண்கள் ச்வதந்திரமாக எங்கு எப்பொழுது வேண்டுமானாலும் சஞ்சரிக்க முடியும்.
Rate this:
0 members
0 members
3 members
Share this comment
dhas - Trivandrum,இந்தியா
17-ஜன-201315:55:33 IST Report Abuse
dhas முதலில் சினிமா காட்சிகளில் பெண்ணை ஆண் தொடுவதையும் நிறுத்த வேண்டும்
Rate this:
0 members
0 members
4 members
Share this comment
Er. S. ARJUNAN - Jeddah,சவுதி அரேபியா
17-ஜன-201314:22:00 IST Report Abuse
Er. S. ARJUNAN நல்ல சட்டம்தான், ஆனால் சட்டத்தின் முன் எல்லோரும் சமமாக கருதப்படுவார்களா?
Rate this:
0 members
0 members
6 members
Share this comment
vayalum vazhvum-saravanakumar - doha,கத்தார்
17-ஜன-201310:21:26 IST Report Abuse
vayalum vazhvum-saravanakumar அப்படியே முறையற்ற செக்ஸ் மற்றும் பெண் கடத்தல் இதற்கும் மரண தண்டனை அறிவிக்கவேனும்
Rate this:
0 members
0 members
12 members
Share this comment
P. Kannan - Bodinayakkanur,இந்தியா
17-ஜன-201309:41:31 IST Report Abuse
P. Kannan கேரளா பெண்கள் more adjus and very briliant. இது போல் சட்டங்கள் தேவையில்லை ஆனால் தமிழக பெண் குழந்தைகள் கேரளாவில் வீட்டு வேலைக்காக கடத்தப்படும் போது இந்த சட்டம் நடவடிக்கை எடுக்க உதவியாக இருக்கும்.
Rate this:
3 members
0 members
12 members
Share this comment
KaNaGaRaJ. S... - chennai -33,இந்தியா
17-ஜன-201309:39:46 IST Report Abuse
KaNaGaRaJ. S... அப்பாவி ஆண்களுக்கு பாதிப்பு ஏற்படா வண்ணம் குற்றத்தை உறுதி படுத்தி தண்டனை வழங்க செய்ய வேண்டும் பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு கடுமையான தண்டனை வழங்கினால் இது போன்ற தவறுகள் நடை பெறாமல் பெண்களை காக்கலாம்
Rate this:
0 members
0 members
9 members
Share this comment
Indian from Mumbai - Mumbai,இந்தியா
17-ஜன-201302:37:06 IST Report Abuse
Indian from Mumbai எல்லாத்துலேயும் கேரளா முன்னாடிதான்.
Rate this:
4 members
0 members
9 members
Share this comment
vaaimai - Appleton, WI ,யூ.எஸ்.ஏ
17-ஜன-201302:01:29 IST Report Abuse
vaaimai வாழ்க சேர நாடு
Rate this:
4 members
0 members
16 members
Share this comment

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

அன்புள்ள வாசகர்களே!,

நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.