Advertisement
டீசல் விலை - எரிவாயு சிலிண்டர் எண்ணிக்கை: கருணாநிதி தனது நிலையை விளக்குவாரா?: முதல்வர் கேள்வி
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
ஆல்பம்
பதிவு செய்த நாள் : ஜனவரி 17,2013,19:24 IST
மாற்றம் செய்த நாள் : ஜனவரி 17,2013,19:33 IST

சென்னை: டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயித்துக்கொள்ள அனுமதி அளித்திருப்பது ஆரோக்கியமான பெருளாதாரத்திற்கு வழிவகுக்காது எனமுதல்வர் ஜெயலலிதா மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இந்த விஷயத்தில் தி.மு.க.தலைவர் கருணாநிதி நிலை என்ன என கேள்வியெழுப்பியுள்ளார்.

சமையல் எரிவாயு சிலிண்டர்கள் எண்ணிக்கையை 9 ஆக உயர்த்தியும், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயித்து கொள்ள அனுமதியளித்தும்மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.இது தொடர்பாக இன்று நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதற்கு நாடு முழுவதும் கடும் கண்டனம் எழுந்துள்ளது.


கருணாநிதி தனது நிலையை விளக்க வேண்டும்


இது குறித்து தமிழக முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள கண்டன அறிக்கை, டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயிப்பதால் விலைவாசி தான் உயரும், மேலும சமையல் எரிவாயு சிலிண்டர் எண்ணிக்கையை 9 ஆக உயர்த்தியதுசரியல்ல. உச்சவரம்பின்றி விநியோகிக்க வேண்டும். இது ஏமாற்றமளிக்கும் செயல், ஆரோக்கியமான பொருளாதாரத்திற்கு வழிவகுப்பது இல்லை. எனவே மத்திய அரசு இந்த முடிவினை திரும்ப பெற வேண்டும். மேலும் மத்திய அரசில் அங்கம் வகிக்கும் தி.மு.க.வின் நிலை என்ன என்பதனை அக்கட்சியின் தலைவர் கருணாநிதி விளக்க வேண்டும்.இவ்வாறு அவர் அவர் கூறினார்.





வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து (50)
ANBE VAA J.P. - madurai,இந்தியா
18-ஜன-201317:14:48 IST Report Abuse
ANBE VAA J.P. நீங்க ஏத்துன ,பால் விலை ,மின்சார கட்டணம் ,கடுமையான பேருந்து கட்டண உயர்வு எல்லாம் மக்கள் மறந்துட்டாங்கங்கிர சந்தோசத்துல்ல இருக்கீங்க போல. ஏத்துனதுக்கெல்லாம் நீங்க என்ன காரணம் சொன்னீங்களோ அதே காரணம் தான் மத்திய அரசும் அதில் உள்ள கூட்டணி கட்சிகளும் சொல்லுவாங்க. கடைசியில் அவதி படுறது உங்களுக்கு வாக்களித்த சாமானிய மக்கள் தான
Rate this:
0 members
0 members
2 members
Share this comment
S.Govindarajan. - chennai ,இந்தியா
19-ஜன-201306:59:18 IST Report Abuse
S.Govindarajan.ஜெயா பஸ் கட்டணத்தை உயர்த்தினார், 2000 புதிய பஸ்களை விட்டார். பால் விலையை உயர்த்தினார். பால் வெண்ணை இன்று தாராளமாகக் கிடைக்கிறது. ஆனால் தானைத் தலைவர் காலத்தில் பால் வளத்துறை , போக்குவரத்துத்துறை போன்ற துறைகளை எல்லாம் நஷ்டத்தில் இயங்க வைத்து மூடும் நிலைக்குக் கொண்டுவந்தார்....
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
ANBE VAA J.P. - madurai,இந்தியா
19-ஜன-201318:15:27 IST Report Abuse
ANBE VAA J.P.பேருந்து கட்டணத்தை உயர்த்திவிட்டு மக்கள் மீது சுமை ஏற்றி புதிய பேருந்து வாங்குவது சிறந்தது கிடையாது. இப்போது மட்டும் போக்குவரத்துக்கு துறை லாபத்தில் இயங்குகிறதா அன்பரே ? ஒவ்வொரு அரசும் பதவி ஏற்றவுடன் பழைய பேருந்துகளை பராமரிக்காமல், இப்படி நட்டத்திலும் அவர்கள் பெயரை ,அவர்களுக்கு சாதகமான கலரை நிலை நாட்ட புதிய பேருந்துகளாக விட்டு மேலும் மேலும் நட்டத்தை ஏற்படுத்தி விட்டு செல்கின்றனர் 5 வருடங்களுக்கு முன்பு விடப்பட்ட பழைய பேருந்துகளின் இன்றைய நிலை ? அடுத்து , பால் வெண்ணை தாரளமாக கிடைப்பது பெரிது அல்ல அதை சாமானிய நடுத்தர ,அன்றாடம் காட்சிகளும் சாதரணமாக வாங்கும் நிலை வேண்டும் இன்று தங்கம் தாரளமாகதான் கிடைக்கின்றது ஆனால் மக்கள் வாங்கும் திறன் வேண்டும்...
Rate this:
0 members
0 members
1 members
Share this comment
tamilindian - alain,ஐக்கிய அரபு நாடுகள்
18-ஜன-201316:17:20 IST Report Abuse
tamilindian அவர்தான் செல்லாத காசு ஆச்சே....பின்ன அவரால என்ன செய்ய முடியும்...........
Rate this:
1 members
0 members
0 members
Share this comment
samivel.s - singapore,சிங்கப்பூர்
18-ஜன-201315:34:45 IST Report Abuse
samivel.s திரு.கருணாநிதி பக்குவப்பட்ட மனிதர். யார் மனசும் நோகாமல் அவருக்கு பேச ,எழுத ,படிக்க தெரியும். அவர் எது சொன்னாலும் தலையாட்ட ஒரு கூட்டம் உண்டு.
Rate this:
0 members
0 members
1 members
Share this comment
Yoga Kannan - Al Buraidh,சவுதி அரேபியா
18-ஜன-201314:44:29 IST Report Abuse
Yoga Kannan அம்மா அவர் பதில் சொல்லுவது அப்புறம் இருக்கட்டும் ,,,, விறகு பஞ்சம் இன்னும் தமிழ் நாட்டுல வரல...அதை பற்றி நீங்க கவலை பட வேண்டாம்.....தஞ்சாவூர் ,நாகை,திருவாரூர் ....ஏமாளி விவசாயிகள் பார்த்து எனக்கு வாக்களிங்க....உங்களுடைய மனநிலையை அறிந்தவள் சொல்லுகின்றேன்.சொன்னது நினைவு இருக்கின்றதா...அவனுடைய இன்றைய நிலைமை உங்களுக்கு தெரியுமா ....?
Rate this:
0 members
0 members
2 members
Share this comment
ramamoorthy - dindigul,இந்தியா
18-ஜன-201311:03:45 IST Report Abuse
ramamoorthy நாளொருமேனி பொழுதொருவண்ணம் விலைவாசி ஏறிக்கொண்டே போகிறது இதை கட்டுபடுத்த எந்த அரசாங்கமாவது நினைக்கிறதா இன்று உள்ள விலை நாளை இல்லை நாளை உள்ள விலை அடுத்தநாள் இல்லை இப்படியே போனால் மக்கள் யாரைத்தான் நம்புவது யாருக்கும் யார்மேலும் பயம் இல்லாமல் போய்விட்டது இந்தியா வாழ்க
Rate this:
0 members
0 members
20 members
Share this comment
surchi - KANCHIPURAM,இந்தியா
18-ஜன-201310:12:23 IST Report Abuse
surchi புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்...........................
Rate this:
3 members
0 members
2 members
Share this comment
sumithran - singapore,சிங்கப்பூர்
18-ஜன-201309:46:59 IST Report Abuse
sumithran முதல்ல போயஸ் கார்டன்ல என்ன விலைக்கு காஸ் வாங்குறீங்கன்னு சொல்லுங்க அம்மா அவர்களே... காஸ் விலை உயர்வு, ரயில் கட்டண உயர்வு, டீசல் விலை உயர்வு இது எல்லாமே காலத்தின் கட்டாயம்... ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் உங்களுக்கு இது நன்றாகவே தெரியும். இருந்தும் ஏன் இந்த அரசியல் நாடகம்?
Rate this:
4 members
0 members
24 members
Share this comment
S.Govindarajan. - chennai ,இந்தியா
18-ஜன-201313:34:35 IST Report Abuse
S.Govindarajan.மத்திய அரசு செய்வதெல்லாம் காலத்தின் கட்டாயமல்ல .காலத்தின் கோலம். கருப்புப்பணம் வெளிவரவில்லை.சுவிட்ச் வங்கி பதுக்கல்களை வெளிக்கொண்டுவரக்காணோம். வசதியைக் குறைத்து விலையை உயர்த்துவது சாதனை ஆகாது....
Rate this:
0 members
0 members
5 members
Share this comment
mathi - covai  ( Posted via: Dinamalar Windows App )
18-ஜன-201308:25:23 IST Report Abuse
mathi என்னையாவா கேட்குறீங்க?எனக்கு தெரியாது!!!!!
Rate this:
0 members
0 members
4 members
Share this comment
m.loga - paramakudi  ( Posted via: Dinamalar Android App )
18-ஜன-201308:22:43 IST Report Abuse
m.loga அந்த பெருசுக்கு கருவேப்பிலை விலை ஊயர்வு மட்டும்தன் கண்ணுக்கு தெரியும்.
Rate this:
3 members
1 members
6 members
Share this comment
Satz - Oman, muscat  ( Posted via: Dinamalar Android App )
18-ஜன-201307:05:42 IST Report Abuse
Satz இந்த முடிவை தி்.மு.க. கசப்புடன் ஏற்றுக்கொள்கிறது னு சொல்லுவார்
Rate this:
1 members
0 members
20 members
Share this comment
KaNaGaRaJ. S... - chennai -33,இந்தியா
18-ஜன-201316:52:53 IST Report Abuse
KaNaGaRaJ. S... இல்லை மக்களை பாதிக்கும் எந்த செயலையும் திமுக ஆதரிக்காது. அதே நேரம் எதிர்ப்போ கண்டனமோ தெரிவிக்காது ( அப்படி மக்களை நன்றாக குழப்பி விட்டேன் ) என்று வால்மார்ட் கருணா கூறுவார். ஆனால் 176000 கோடி ஊழலில் ஈடுபட்டதே என்று நிருபர் கேட்டால் அதில் மக்கள் எங்கே பதிக்க பட்டார்கள் அரசு தானே பாதிக்க பட்டது என்று மழுப்புவார்...
Rate this:
0 members
0 members
0 members
Share this comment

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

அன்புள்ள வாசகர்களே!,

நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.