சென்னை: டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயித்துக்கொள்ள அனுமதி அளித்திருப்பது ஆரோக்கியமான பெருளாதாரத்திற்கு வழிவகுக்காது எனமுதல்வர் ஜெயலலிதா மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இந்த விஷயத்தில் தி.மு.க.தலைவர் கருணாநிதி நிலை என்ன என கேள்வியெழுப்பியுள்ளார்.
சமையல் எரிவாயு சிலிண்டர்கள் எண்ணிக்கையை 9 ஆக உயர்த்தியும், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயித்து கொள்ள அனுமதியளித்தும்மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.இது தொடர்பாக இன்று நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதற்கு நாடு முழுவதும் கடும் கண்டனம் எழுந்துள்ளது.
கருணாநிதி தனது நிலையை விளக்க வேண்டும்
இது குறித்து தமிழக முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள கண்டன அறிக்கை, டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயிப்பதால் விலைவாசி தான் உயரும், மேலும சமையல் எரிவாயு சிலிண்டர் எண்ணிக்கையை 9 ஆக உயர்த்தியதுசரியல்ல. உச்சவரம்பின்றி விநியோகிக்க வேண்டும். இது ஏமாற்றமளிக்கும் செயல், ஆரோக்கியமான பொருளாதாரத்திற்கு வழிவகுப்பது இல்லை. எனவே மத்திய அரசு இந்த முடிவினை திரும்ப பெற வேண்டும். மேலும் மத்திய அரசில் அங்கம் வகிக்கும் தி.மு.க.வின் நிலை என்ன என்பதனை அக்கட்சியின் தலைவர் கருணாநிதி விளக்க வேண்டும்.இவ்வாறு அவர் அவர் கூறினார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
நீங்க ஏத்துன ,பால் விலை ,மின்சார கட்டணம் ,கடுமையான பேருந்து கட்டண உயர்வு எல்லாம் மக்கள் மறந்துட்டாங்கங்கிர சந்தோசத்துல்ல இருக்கீங்க போல. ஏத்துனதுக்கெல்லாம் நீங்க என்ன காரணம் சொன்னீங்களோ அதே காரணம் தான் மத்திய அரசும் அதில் உள்ள கூட்டணி கட்சிகளும் சொல்லுவாங்க. கடைசியில் அவதி படுறது உங்களுக்கு வாக்களித்த சாமானிய மக்கள் தான
பேருந்து கட்டணத்தை உயர்த்திவிட்டு மக்கள் மீது சுமை ஏற்றி புதிய பேருந்து வாங்குவது சிறந்தது கிடையாது. இப்போது மட்டும் போக்குவரத்துக்கு துறை லாபத்தில் இயங்குகிறதா அன்பரே ? ஒவ்வொரு அரசும் பதவி ஏற்றவுடன் பழைய பேருந்துகளை பராமரிக்காமல், இப்படி நட்டத்திலும் அவர்கள் பெயரை ,அவர்களுக்கு சாதகமான கலரை நிலை நாட்ட புதிய பேருந்துகளாக விட்டு மேலும் மேலும் நட்டத்தை ஏற்படுத்தி விட்டு செல்கின்றனர் 5 வருடங்களுக்கு முன்பு விடப்பட்ட பழைய பேருந்துகளின் இன்றைய நிலை ? அடுத்து , பால் வெண்ணை தாரளமாக கிடைப்பது பெரிது அல்ல அதை சாமானிய நடுத்தர ,அன்றாடம் காட்சிகளும் சாதரணமாக வாங்கும் நிலை வேண்டும் இன்று தங்கம் தாரளமாகதான் கிடைக்கின்றது ஆனால் மக்கள் வாங்கும் திறன் வேண்டும்...
அம்மா அவர் பதில் சொல்லுவது அப்புறம் இருக்கட்டும் ,,,, விறகு பஞ்சம் இன்னும் தமிழ் நாட்டுல வரல...அதை பற்றி நீங்க கவலை பட வேண்டாம்.....தஞ்சாவூர் ,நாகை,திருவாரூர் ....ஏமாளி விவசாயிகள் பார்த்து எனக்கு வாக்களிங்க....உங்களுடைய மனநிலையை அறிந்தவள் சொல்லுகின்றேன்.சொன்னது நினைவு இருக்கின்றதா...அவனுடைய இன்றைய நிலைமை உங்களுக்கு தெரியுமா ....?

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.