கோல்கட்டா: டீசல் விலையை உயர்த்தி ஏழைகளின் உழைப்பினை ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு சுரண்டி எடுத்து வருகிறது என மேற்குவங்க முதல்வர் குற்றம்சாட்டியுள்ளார். டீசல் விலை நிர்ணயத்தை எண்ணெய் நிறுவனங்களுக்கு வழங்கி மத்திய அரசு நேற்று உத்தரவிட்டது. இதையடுத்து டீசல் விலை மாதந்தோறும் 50 பைசா உயர உள்ளது. இந்நிலையில் மேற்கு வங்க மாநிலம் ஹாரிங்காதா நகரில் நடந்த அரசு விழாவில் முதல்வர் மம்தா பானர்ஜி கலந்த கொண்டு பேசியதாவது:பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு உயர்த்தும் போது ஒவ்வொருமுறையும் நான் பிரதமருரக்கு கடிதம் எழுதி எனது கண்டனத்தை தெரிவித்தேன். தற்போது கூட்டணியில் இல்லை. டீசல் விலையை உயர்த்தியது மூலம் விலைவாசியும் உயரும் இதனால் ஏழைகள் தான் பாதிக்கப்படுவார்கள். ஏழை மக்களின் ரத்தத்தினை உறிஞ்சி எடுக்கிறது ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு. இவ்வாறு அவர் கூறினார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.