ஹரின்காட்டா: ""ரயில் கட்டணம் அதிகரிக்கப்பட்டதை தொடர்ந்து, டீசல் விலையையும், உயர்த்தியிருப்பதன் மூலம் மத்திய அரசு ஏழைகளை சுரண்டுகிறது,'' என, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம் சாட்டினார். மேற்கு வங்கத்தில், நடந்த அரசு விழா ஒன்றில் பேசிய, மேற்கு வங்க முதல்வரும், திரிணமுல் காங்கிரஸ் தலைவருமான, மம்தா பானர்ஜி கூறியதாவது: ரயில் கட்டண உயர்வு, அதை தொடர்ந்து பெட்ரோல் விலை உயர்வு, தற்போது டீசல் விலையும் உயர்த்தப்பட்டு விட்டது. இதன் காரணமாக, மற்ற பொருட்களின் விலையும் அதிகரித்து, சாதாரண மக்களை பெரிதும் பாதிக்கும்.
விவசாயத்திற்கு, டீசல் மூலம் இயக்கப்படும் பம்புகளை பயன்படுத்தும் ஏழை விவசாயிகள், மிகுந்த வேதனை அடைந்துள்ளனர். ஏற்கனவே, உரங்களின் விலையை மத்திய அரசு தொடர்ந்து உயர்த்தி வந்துள்ளது. இதை எதிர்த்து, பிரதமருக்கு பலமுறை கடிதம் எழுதியும் பதில் இல்லை.இவ்வாறு, அவர் கூறினார்.
மாயாவதி எதிர்ப்பு :
தொடர்ந்து விலைகளை உயர்த்துவதை பார்க்கும் போது, காங்கிரசின் சின்னமான கை, ஏழைகளுடன் கை குலுக்குவதாக தெரியவில்லை. பணக்காரர்களுடனும், முதலாளிகளுடனும்தான் கை குலுக்குவதாக தெரிகிறது. பட்ஜெட் தாக்கலுக்கு பின், அரசை சுமுகமாக நடத்துவது சிரமமாக இருக்கும் என்பதால், லோக்சபா கலைக்கப்படலாம். இவ்வாறு மாயாவதி கூறினார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
டீசல் விலை கூட்டினால் ஏழைகள் பாதிக்க படுவார்கள் என்று நீலி கண்ணீர் வடிப்பவர்கள் , உங்கள் கட்சி காரர்கள் , ஏழைகளுக்காக அரசு நஷ்ட பட்டு மான்யம் கொடுக்கும் டீசலை தங்கள் கார்களுக்கு பயன் படுத்த கூடாது என்று என்றாவது கட்டளை இட்டு உள்ளார்களா .. அல்லது அரசாங்க அதிகாரிகள் பயன் படுத்தும் கார்களில் பெட்ரோல் தான் உபயோகிக்க வேண்டும் என்று கட்டளை இட்டு இருக்கிறீர்களா... இல்லை பணக்காரர்கள் எழைகளுக்கான் டீசலை தங்கள் கார்களில் பயன்படுத்தாதீர்கள் , மான்ய கேஸ் சிலிண்டர்களை உபயோகிக்காதீர்கள் , என்று விழிப்பு உணர்ச்சி பிரசாரமாவது செய்துள்ளீர்களா...நீங்கள் என்றோ ரெயிலில் போகும் ஏழைக்காகவா ஒப்பாரி வைக்கிறீர்கள் , ஒட்டு போடும் வாரத்துக்கு மூணு முறை போகும் பணக்காரர்களுக்கு அல்லாவா கண்ணீர் வடிக்கிறீர்கள் ... ஏமாற்று அரசியலை விடுங்கள் , நாட்டுக்கு நல்லது நடக்கும் அரசியலை கடை பிடியுங்கள்...
இவங்களுக்கு , பஸ்ஸில் போற மற்றும் ரயிலில் போற ஏழைகள் மட்டும்தான் கண்ணில் தெரிகிறது.....பஸ்சிலேயே ஏறாத , ரயிலிலேயே ஏறாத , என் இன்னும் மின்சாரத்தையே ,மின்வெட்டால் அல்ல , இன்னும் வழங்கபடாததால் , பார்க்காத கிராம மக்கள் இருக்கிறார்கள் ... அவர்களை பற்றி எல்லாம் என்றாவது கவலை பட்டு இருக்கிறீர்களா... எம் ஜி ஆர் , சினிமாவில் , இருப்பவனிடம் இருந்து முடியாதவர்களுக்கு கொடுக்கும் பொது கைதட்டுகிறோம்... இங்கு கொடுக்க முடிந்தவனை கொடுக்க வைத்து , அதில் இருந்து கொடுக்க முடியாதவருக்கு கொடுக்க செய்வது தவறா .. இதனால் மிச்ச படும் பணம் இந்த ஏழைகளுக்கு , கல்வி செலவு , சுகாதார செலவு , இவைகளுக்கு பயன் படுத்தலாம் ... படித்தவார்களுக்கு , வேலை செய்ய திறன் உள்ளவர்களுக்கு அரசாங்கம் வேலை வாய்ப்பை பெருக்கி அவர்களுக்கு வாழ்வாதாரத்தை கொடுக்க வேண்டுமே அன்றி , வேலை வாய்ப்பை குறைத்து , இலவசங்கள் கொடுப்பதல்ல , சிறந்த நிர்வாகம் ...

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.