டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு பலனளிக்கும் வகையில், சம்பா பயிர் பாதிப்பிற்கான நிவாரணம் குறித்த அதிரடி அறிவிப்புகள், கவர்னரின் சட்டசபை உரையில் இடம் பெறும் என, தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. காவிரியில் தமிழகத்திற்கு சேர வேண்டிய தண்ணீரை திறந்து விட, பல முறை வற்புறுத்தியும், கர்நாடக மாநிலம் விடாப்பிடியாக மறுத்து வருகிறது.
இது தொடர்பாக, தமிழக அரசின் மனுவை, அவசர வழக்காக எடுத்து விசாரிக்க முடியாது என, சுப்ரீம் @கார்ட் நேற்று மறுத்துள்ளது. மேட்டூர் அணையும் வறண்ட நிலையில், டெல்டா மாவட்டங்களில் சம்பா பயிரை காப்பாற்ற வழியில்லாமல், தமிழக விவசாயிகள் இன்னலுக்கு உள்ளாகியுள்ளனர். விவசாயிகள் துயர் துடைக்க, நிவாரணத் தொகையாக, ஏக்கருக்கு, 13,600 ரூபாய் நிவாரணம் வழங்க, முதல்வர் உத்தரவிட்டார். தொடர்ந்து, நிதியமைச்சர் பன்னீர் செல்வம், உள்ளாட்சித் துறை அமைச்சர் முனுசாமி உள்ளிட்ட அமைச்சர்கள், மற்றும் அதிகாரிகள் அடங்கிய உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டது.
ஜெ., சென்னை திரும்புவார் :
இக்குழுவினர், கடந்த வாரம், டெல்டா பகுதிகளில் ஆய்வு செய்தனர். மீதமுள்ள பகுதிகளில், இன்னும் சில தினங்களில் மீண்டும் ஆய்வு செய்ய உள்ளனர். அதன் பின், இக்குழுவினர் கூடி, பயிர் பாதிப்புள்ள பகுதிகள் குறித்த அறிக்கையை, இம்மாதம், 23ம் தேதி, அரசுக்கு தாக்கல் செய்யவுள்ளனர். கோடநாட்டில் உள்ள முதல்வர் ஜெயலலிதா, 23ம் தேதி அல்லது, 24ம் தேதி, சென்னை திரும்புவார் என தெரிகிறது. உயர்மட்டக் குழு அளிக்கும், பயிர் பாதிப்பு குறித்த அறிக்கை, முதல்வர் ஆய்வுக்குப் பின், நிவாரணம் வழங்குவது குறித்து முடிவு செய்யப்படும்.
இம்மாதம், 25 மற்றும் 26ம் தேதிகள், அரசு விடுமுறை என்பதால், 28ம் தேதி இந்தாண்டிற்கான சட்டசபை கூட்டம், கவர்னர் உரையுடன் துவங்கும் என தெரிகிறது. டெல்டா மாவட்டங்களில் பாதிப்புக்குள்ளான விவசாயிகளுக்கு, ஏக்கருக்கு, 20 ஆயிரம் ரூபாய்வழங்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. கவர்னர் உரையில், டெல்டா விவசாயிகள் பிரச்னையை போக்கும் வகையில், முக்கிய அறிவிப்பு வெளியாகலாம் என தலைமைச் செயலக வட்டாரத்தில் கூறப்படுகிறது.- நமது நிருபர்-
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
விவசாயிகளின் வயலும் வயிறும் காய்ந்து கொண்டேதான் இருக்கிறது. ஒன்பது வருடங்களாக ‘தேமே’ என்று ஒருவர் இருக்கிறார் அவர்தான் பிரதமர்.... கர்நாடகத்தில் ஒரு பிரச்னை என்றால், கர்நாடகாவில் எல்லா கட்சியினரும் சேர்ந்து கும்மியடிக்கிறார்கள். இங்கு ஆளும்கட்சி மட்டும் தனியே போராட வேண்டும் (அது ADMK வோ DMK வோ )... எதிர் கட்சிகள் அதில் பங்கு கொள்ளாது .. (அது ADMK வோ DMK வோ )
எவனும் சாப்புடாம இருக்கவும் வேணாம் ,யாருக்கும் பரிதாபப்படவும் வேணாம், ஒழுங்கா தண்ணிய வாங்கிக் கொடுத்தா விவசாயிகள் நாட்டை காப்பாற்றுவார்கள். பேசாம கவர்னரை கொடநாட்டுக்கு போய் பட்ஜெட்டை தாக்கல் செய்யச்சொல்லுங்க, அப்புறம் அதுக்கும் மத்திய அரசும்,கலைஞரும் காரணம் என சொல்லுவார் ????? உடனே இங்க ஜிங் ஜா சத்தம் அதிகரிக்கும் ,இதெல்லாம் தேவையா ???
அதுதான் மிடாஸ் மம்மி முக்கு சந்து எல்லாம் ஒன்னு விடாம டாஸ்மாக் தொறந்து வச்சு இருக்காங்களே.. அதுதான் தமிழ்நாட்டில் உள்ள எல்லாருக்கும் நிவாரணம்....துன்பம் வந்தா எல்லாரும் ஒரு கட்டிங் வாங்கி சாத்திகிட்டு படுக்க வேண்டியது தான். எதிர்த்து எல்லாம் யாரும் கேள்வி கேட்டு புடாதீங்க...அப்புறம் ஏதாவது ஒரு சட்டத்துல உங்கள... ......அப்புறம் நான் பொறுப்பு கிடையாது சொல்லிபுட்டேன்...

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.