இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் பிரதமர் பெர்வேஸ் அஷ்ரப், மீதான ஊழல் வழக்கை விசாரித்த, லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரி, தற்கொலை செய்து கொண்டார்.பாகிஸ்தானின் தற்போதைய பிரதமர், பெர்வேஸ் அஷ்ரப், மின் துறை அமைச்சராக இருந்த போது, மின் நிலையங்களை வாடகை விட்டதில், ஊழல் நடந்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இதையடுத்து, இந்த ஒப்பந்தங்களை, மார்ச் மாதம் ரத்து செய்து, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது.இந்த பேரத்தில் சம்பந்தப்பட்ட, அஷ்ரப் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்கும் படி, ஊழல் தடுப்பு துறைக்கு, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது.ஆனால், இதுவரை, இந்த ஊழலில் சம்பந்தப்பட்டவர்கள் மீது, ஊழல் தடுப்பு துறை நடவடிக்கை எடுக்கவில்லை.மின் நிலைய வாடகை விவகாரத்தில், ஊழல் நடந்ததற்கான ஆதாரங்கள் இருந்தும், நடவடிக்கை எடுக்காத ஊழல் தடுப்புத் துறையை கண்டித்த சுப்ரீம் கோர்ட், பிரதமர் அஷ்ரப்பை, கைது செய்யும் படி, உத்தரவிட்டுள்ளது. ஊழல் தடுப்புத் துறை தலைவர், பாஷிஷ் புகாரிக்கும் கண்டன நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.இதற்கிடையே, அஷ்ரப் மீதான ஊழல் வழக்கை, பாகிஸ்தான் லஞ்ச ஒழிப்புத் துறையை சேர்ந்த, இரண்டு அதிகாரிகள் விசாரித்தனர். இவர்களில் ஒருவர், லஞ்ச ஒழிப்புத் துறை துணை இயக்குனர், கம்ரான் பைசல். இவர், இஸ்லாமாபாத்தில் உள்ள தன் வீட்டில், நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.இது குறித்து தற்போது போலீசார் விசாரித்து வருகின்றனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.