கோல்கட்டா : 2014 லோக்சபா தேர்தல் குறித்து பேசிய ராஷ்டிய ஜனதா தள கட்சி தலைவர் லாலு பிரசாத், பிரதமர் பதவிக்கு ராகுல் தகுதியானவர் என தெரிவித்துள்ளார். லாலு கூறியதாவது ; 2014 தேர்தலில் எந்த கட்சியும் பெரும்பான்மையை பெறாது; எந்த கட்சியும் கூட்டணியை அடிப்படையாக கொண்டு இல்லை; மதசார்பின்மை மற்றும் வகுப்புவாதம் மட்டுமே உள்ளது; சோனியா பாரதத்தின் மருமகள்; அவர் 2004ம் ஆண்டே பிரதமர் பதவியை தியாகம் செய்தவர்; தற்போது பிரதமர் பதவிக்கு தகுதியானவர் ராகுல் தான்; நீங்கள் சகோதரி என அழைக்கும் மம்தா பிரதமர் பதவிக்கு ஆசைப்படுபவர்; ஜார்க்கண்டில் காங்கிரஸ் அல்லது காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி கட்சி ஆட்சி அமைக்க அம்மாநில கவர்னர் பரிந்துரை செய்யலாம்; பெண்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு அரபு நாடுகளில் உள்ளது போலவோ அல்லது தூக்கு தண்டனையோ வழக்க வேண்டும்; 7 வருட சிறை தண்டனை தேவையற்றது; அது போன்ற குற்றவாளிகளை பொது இடத்தில் வைத்து கல்லால் அடித்து கொல்ல வேண்டும்; அது போன்ற தண்டனைகளை நாம் ஏன் நமது நாட்டில் கொடுப்பதில்லை. இவ்வாறு லாலு தெரிவித்துள்ளார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
அதேபோல் ஊழல் செய்பவர்களையும் கல்லால் அடித்தால் என்ன? இன்னொன்று ராகுல் நாட்டுக்கு என்ன செய்துள்ளார் பிரதமர் பதவிக்கு தகுதியானவர் என்று சொல்ல? அப்படி என்று சொன்னால் இந்த நாட்டுக்காக பல மக்கள் இன்னுயிர் ஈந்துள்ளார்கள் அவர்கள் வாரிசு எல்லாம் தகுதியானவர்தானே? இவரது அப்பா எல்லாம் நன்றாகவே பணம் ஊழல் செய்துள்ளார் அதனால்தான் அவர் தகுதியானவர் என்று சொல்லுகிறாரோ ? அல்லது இவர் ஊழல் வெளிவந்து விடும் என்று பயபடுகிறரோ?

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.