திருநெல்வேலி: இந்திய அணுசக்தி துறை மற்றும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் இணைந்து சிறந்த விஞ்ஞானிகள் என 20க்கும் மேற்பட்டோரை தேர்வு செய்துள்ளது. இதில் கூடங்குளம் அணுமின் நிலைய திட்ட இயக்குநர் பானர்ஜி, வளாக இயக்குநர் ஆர்.எஸ். சுந்தர் ஆகியோரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
அணு மின்சாரம் பிற மின்சார தயாரிப்பு முறைகளிடமிருந்து முற்றிலும் வேறு பட்டது சார், ஒரு அணு உலையின் உற்பத்தி காலம் 30 முதல் 40 ஆண்டுகள் வரை தான். அதன் பிறகு அந்த உலைகளை பல்லாயிரம் ஆண்டுகள் பாது காப்பாக வைக்க வேண்டும், இல்லை எனில் அதிலிருந்து கதிரியகம் வெளிப்பட்டு அதன் சுத்து பகுதி மக்களை பாதிக்கும். எனவே அணு மின்சாரமே வேண்டாம் என்பது தான் எங்கள் வாதம், இந்த அணு அரக்கண் ஒரு முறை பூமியில் வாந்தி விட்டால் இவனை அழிக்க முடியாது.......
உள்ளூர் தேவையை காற்று ஆலை மற்றும் சூரியஒளி மின்சாரம் கலந்த ஒரு சேர்வை மூலம் எளிதாக தீர்த்துவிடலாம். அதிகமாக மின்சாரம் தேவைபடும் நகரங்களுக்கும், தொழில் சாலைகளுக்கும் அனல் மின்நிலையங்கள், நீர் மின்நிலையங்கள் மூலம் தீர்த்து விடலாம். இதன் மூலன் கடந்த 40 ஆண்டுகளாக வெறும் வாய் சவுடால் விட்டுக்கொண்டு,வெறும் 2.6 சதவீத மின்சாரத்தை மட்டும் கொடுத்து, பல லச்சம் கோடிகளை ஏப்பம் விட்டு கொண்டிருக்கும்,மனித குலதிற்கே ஆபத்தாக அமைந்துள்ள அணு உலைகளை நிரந்தரமாக மூடி விடலாம்....
இந்தியாவின் மொத்த மின் உற்பத்தி 172000 MW ..இந்தியாவின் அணு மின் மொத்த உற்பத்தி 4391 MW, 4391 MW மின்சாரம் தயாரிக்க இதுவரை செலவலித்த மொத்த தொகை எவ்வளவு லச்சம் கோடிகள் ? கூடங்குளம் அணு உலைக்கு இதுவரை செலவலித்த தொகை ..13500 கோடியாம்...இன்னும் எத்தனை கோடிகள் செலவாகும் என்று காங்கிரசுக்கே வெளிச்சம்....அணு உலை கழிவுகளை பாதுகாக்க....எத்தனை கோடிகள் செலவாகும் என்று உலக நாடுகள் எல்லாம் தெளிவாக குறிப்பிடுகின்றன.....ஆனால் இந்தியா????...
1987 ஆம் ஆண்டுக்குள் 25,000 மெகாவாட, 2000 ஆம் ஆண்டுக்குள் 45,000 மெகாவாட் என்று திட்டம் தீட்டி பல்லாயிரக்கணக்கான கோடிகளை விழுங்கி விட்டு இன்று வரையிலும் சாதித்த சாதனை 3310 மெகாவாட் மட்டுமே. இப்போது புதிதாக 2032 ஆம் ஆண்டுக்குள் அணுஉலைகள் மூலம் 63,000 மெகாவாட் மின்சாரம் எடுக்க திட்டம் என ஒரு புது கதையை சொல்கிறார்கள், இந்த அணு உலை அதிகாரிகளும்,அரசியல் வாதிகளும்,
இந்த துறையில் முதலீடாக போடப்படும் தொகையை மரபுசார்ந்த மின்சாரத் தேவையில் போட்டுருந்தால் இந்நேரம் இந்தியா மின்சார உற்பத்தியில் தன்னிறைவு அடைந்து மற்ற நாடுகளுக்கு மிச்சத்தை விற்று லாபம் பார்த்திருக்க முடியும்....
மக்களின் மின்சாரத் தேவைக்காக அணுஉலை என்பது பொய். நேர்மையான சமூக நோக்குடைய இந்திய விஞ்ஞானிகளின் கருத்துப்படி மக்களையும், சுற்றுச் சுழலையும் பாதிக்காத நமது நாட்டில் அதிகம் கிடைக்கக் கூடிய சூரியஒளி மூலம் போதுமான மின்சாரம் தயாரிக்க முடியும். இதே போல் காற்று, நீர், கடல்அலை என சுயசார்பு மின் திட்டங்களை உருவாக்கலாம்.
அணு உலைகள் கட்டுவதென்பது பொருளாதார நெருக்கடியில் சிக்கியிருக்கும் அமெரிக்க, ரசிய, ஐரோப்பிய நாடுகளின் அரசுகளுக்கும், பன்னாட்டு நிறுவனங்களுக்கும் பல லட்சம் கோடி மக்கள் வரிப்பணத்தை இந்திய அரசு தாரை வார்ப்பதன மூலம் இந்திய அரசியல் வியாதிகள் கல்லா கட்டும் ஒரு எளிமையான இயர்பாடு தான்,...
வெளிநாடுகளில் வாங்கப்படும் யுரேனியத்தைச் சார்ந்தே இந்திய அணுஉலைகள் செயல்படும் என்ற நிலையில் 2008ல் போடப்பட்ட இந்திய அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தப்படி 36 அணுஉலைகள் அமைக்கப்பட்டு, மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டால் மின்சாரத்தின் விலையும், பெட்ரோல் விலை போல உயரும். மின்சாரத்திற்கு வெளிநாடுகளைச் சார்ந்து இருக்க வேண்டியது வரும். நாட்டின் சுயசார்பு அழியும்....
இந்த அணுமின் நிலையங்களை வெளி நாடுகளில் இருந்து இறக்குமதி செய்வதை நம் அரசியல் வியாதிகள் அவ்வலளு சீக்கிரமாக விட்டு விட மாட்டார்கள். அதில்தான் அவர்களலின் மக்களுக்குச் சொல்லாத உள்குத்து அரசியல் இருக்கிறது. 80 அணுஉலைகளை வாங்குவதற்கு வெளிநாடுகளோடு ஒப்பந்தம் போட்டிருக்கிறது இந்திய அரசு. இதில் கைமாறும் இந்திய பணம் மொத்தம் 8 லட்சம் கோடி. இப்போது தெரிகிறதா இந்த அரசியல்வாதிகள் ஏன் இதில் வெகு ஆர்வமாயிருக்கிறார்கள் என்பது. நம் வரிப்பணம் 8 லட்சம் கோடியைத் தூக்கி அந்நிய நாட்டினருக்குக் கொடுத்துவிட்டு பதிலாக எமனாய் அணுஉலையை நம் தலையில் கட்டுகிறார்கள்.
ஆனால் அவர்களுக்கு கமிசனாக பல கோடிகள் கிடைகிறது, அந்த பணம் இந்திய நாட்டில் பயன் பட்டால் கூட accep பண்ணலாம், ஆனால் அந்த பணம் சுவிஸ் வங்கிகளில் தூங்குவதை தான் நம்மால் accep பண்ணத் முடிய வில்லை.
இதுதான் இவர்களின் தேசபக்தியின் கதை. அணுஉலை மூடப்பட்டால் அணு வியாபாரிகளுக்கும், அரசியல்வாதிகளுக்கும்தான் இழப்பேயொழிய மக்களுக்கு அல்ல....

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.