பெங்களூரு: காவிரி நடுவர் மன்ற இறுதித்தீர்ப்பை அரசிதழில் வெளியிட கர்நாடகா எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
கர்நாடக அமைச்சரவை கூட்டம் பெங்களூருவில், முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் தலைமையில் இன்று நடந்தது. இக்கூட்டத்தில், காவிரி நடுவர் மன்ற இறுதித்தீர்ப்பை அரசிதழில் வெளியிடக்கூடாது என மத்திய அரசை வலியுறுத்துவது என முடிவெடுக்கப்பட்டது.
கூட்டத்திற்குப்பின் நிருபர்களிடம் பேசிய கர்நாடக ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் சுரேஷ் குமார், அமைச்சரவையில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து மத்திய அரசுக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளதாக கூறினார். சமீபத்தில் நடந்த காவிரி கண்காணிப்புக்குழு கூட்டத்தில், காவிரி நடுவர் மன்ற இறுதித்தீர்ப்பை அரசிதழில் வெளியிடுவது குறித்த கர்நாடகத்தின் நிலையை, மத்திய நீர்வளத்துறை செயலர், கர்நாடக அரசின் தலைமைச் செயலாளர் ரங்கநாத்திடம் கேட்டிருந்தார். எனினும் இதுகுறித்து கர்நாடக அமைச்சரவை கூடி முடிவெடுக்க வேண்டும் என்பதால், தன்னால் இதுகுறித்து கூற முடியாது என அவர் மறுத்து விட்டார். இந்நிலையில், கர்நாடக அமைச்சரவை கூடி அரசிதழில் காவிரி நடுவர் மன்ற உத்தரவை வெளியிடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
காவிரி ஆணையம், கண்காணிப்பு குழு, நடுவர் மன்றம், உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம்..பிரதமர்,மத்திய அரசு,இத்தனையும் தெண்டம்.கர்நாடகம் சொன்னதையே திரும்ப சொல்கிறது...கேட்பார் இல்லை.
இதற்கு ஒரே வழி தான் உண்டு..கர்நாடகத்தில் அவசரநிலை பிரகடனம்..ஜனாதிபதி ஆட்சி...இப்படி செய்து வன்முறைக்கும் முற்றுப்புள்ளி வைக்கலாம்.காரியமும் நிறைவேறும்.Rj
இந்தியாவின் ஒருமைப்பாட்டிற்கு குந்தகம் விளைவிக்கின்ற.... ஒரு மாநிலம் கன்னடாவாக தான் இருக்க முடியும் ... மனதில் ஈரமில்லா ஜடங்களே.... வாழுகின்ற போதே மனிதனாக இருக்க பழகி கொள்ளுங்கள் ...மிருகத்திடம் கூட ஈரம் இருப்பதை ஒரு சில நேரங்களில் நிருப்பித்து இருக்கின்றன....ஆனால் மனிதனில் இத்தனை வன்மங்கள் நிறைந்த மனிதர்கள் இந்த உலகத்தில் பார்க்கவே முடியாது... உங்களுக்கு ஆண்டவன் தருகின்ற தீர்ப்பு தான் சரியான தீர்ப்பாகும்.... ஊழி காலத்தின் முடிவில் இப்படியாப்பட்ட ஜன்மங்கள் தாய் நாட்டில் உருவெடுத்துள்ளது .....

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.