திருப்பூர்:வரத்து சரிவடைந்துள்ளதால், திருப்பூர் பூ மார்க்கெட்டில் மல்லிகை விலை கிலோ 500 ரூபாயாகி உள்ளது.திருப்பூர் பூ மார்க்கெட்டுக்கு சத்தியமங்கலம், நிலக்கோட்டை பகுதிகளில் இருந்து மல்லிகை பூ விற்பனைக்கு வருகிறது. நாளொன்றுக்கு சராசரியாக ஐந்து டன் வரை வரத்து இருந்ததால், இரு மாதத்துக்கு முன்பு வரை கிலோ 80 ரூபாய்க்கு விற்கப்பட்டது.கடும் பனிப்பொழிவு காரணமாக, பூ உதிர்தல், அழுகி வீணாவது அதிகரித்ததால், கடந்த டிச., முதல் மார்க்கெட்டுக்கு மல்லிகை பூ வரத்து படிப்படியாக குறையத்துவங்கியது. தற்போது மார்க்கெட்டுக்கு, 500 கிலோ மட்டுமே வரத்தாக உள்ளது. அதனால், ஒரு கிலோ மல்லிகை 500 ரூபாயாக அதிகரித்துள் ளது. வழக்கமாக 15 ரூபாய்க்கு விற்கப்படும் ஒரு முழம் மல்லிகை, 100 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.