சென்னை: "இந்திய- பாகிஸ்தான் எல்லையில் பதற்றம் ஏற்படாமல் இருக்க, மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: இந்திய வீரரின் தலையை துண்டித்து, பாகிஸ்தான் எடுத்துச் சென்றுள்ளது, அனைத்துத் தரப்பினரையும் கொதிப்படையத் செய்துள்ளது. பிரதமர் மன்மோகன், காங்கிரஸ் தலைவர் சோனியா ஆகியோர், பாகிஸ்தானுடன் சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை என கூறியுள்ளனர். எல்லையில் இதுபோன்ற சம்பவங்கள், இனிமேல் நடக்காமல் இருக்க, மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும் என, நம்பிக்கையுள்ளது. ராஜபக்ஷே அரசின் போர்க் குற்றங்களை நியாயப்படுத்தி, ஐ.நா., சபையில் ஆதரவு திரட்டியவரை, இலங்கை சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியாக நியமித்துள்ளனர். ராஜபக்ஷேவின் சர்வாதிகாரத்தை நிலைநிறுத்திக் கொள்ளும் முயற்சியாக, இந்த நியமனம் நடந்துள்ளது. தமிழகத்தில் அரிசி, காய்கறி, அசைவ உணவுகளின் விலை, கடுமையாக உயர்ந்துள்ளது. இதைத் தடுக்க, தமிழக அரசு என்ன செய்யப் போகிறது எனத் தெரியவில்லை. இவ்வாறு, கருணாநிதி கூறியுள்ளார்.
-நமது நிருபர்-
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.