மதுரை: பா.ஜ., மூத்த தலைவர் அத்வானி ரதயாத்திரை செல்லவிருந்த பயணப்பாதையில், மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே தரைப்பாலத்தில் வெடிகுண்டு வைத்த வழக்கில், தலைமறைவாக உள்ள பக்ருதீன் அலி அகமது உட்பட 3 பேருக்கு கோர்ட் பிடிவாரன்ட் பிறப்பித்துள்ளது.
அத்வானி 2011 அக்., 28 ல் ரதயாத்திரை செல்ல திட்டமிட்டிருந்த பயணப் பாதையில், திருமங்கலம் அருகே ஆலம்பட்டி தரைப்பாலத்தில் வெடிகுண்டு கண்டெடுக்கப்பட்டது. திருமங்கலம் தாலுகா போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இவ்வழக்கு சி.பி.சி.ஐ.டி., சிறப்பு புலனாய்வு பிரிவுக்கு மாற்றப்பட்டது. அப்துல்லா (எ) அப்துல் ரகுமான், இஸ்மத், ஹக்கீம் (எ) கருவா ஹக்கீமை போலீசார் கைது செய்தனர். மதுரை முனிச்சாலை பக்ருதீன் அலி அகமது (எ) போலீஸ் பக்ருதீன், பிலால்மாலிக், தென்காசி முகமது ஹனீபா (எ) நாகூர் ஹனீபா உட்பட 6 பேர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. திருமங்கலம் கோர்ட்டில் வழக்கு நிலுவையில் உள்ளது. இவ்வழக்கில் தலைமறைவாக உள்ள பக்ருதீன் அலி அகமது, பிலால் மாலிக், முகமது ஹனீபா மீது ஜாமினில் வெளிவர முடியாத பிடிவாரன்ட்டை, திருமங்கலம் கோர்ட் பிறப்பித்துள்ளது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.