அரசு வழங்கிய, பொங்கல் பரிசு, 100 ரூபாய் ரொக்கத்தை, எட்டு லட்சத்துக்கும் மேற்பட்ட ரேஷன் கார்டுதாரர்கள் வாங்கவில்லை. நிலுவை பணத்தை, அரசு கணக்கில் செலுத்த, உத்தரவிடப்பட்டு உள்ளது. பொங்கலுக்காக, ரேஷன் கார்டுதாரர்களுக்கு, தலா, 1 கிலோ பச்சரிசி, சர்க்கரை மற்றும் 100 ரூபாய் ரொக்கம் வழங்கப்பட்டது. குறுகிய காலத்தில் வழங்கியதால், 1.76 கோடி பேருக்கு வாங்கினர்; மீதமுள்ள, எட்டு லட்சம் கார்டுகளுக்கான தொகை, நிலுவையில் உள்ளது.
இதை, அரசு கணக்கில் செலுத்த உத்தரவிடப்பட்டு உள்ளது. இத்தொகை, கூட்டுறவு அதிகாரிகளால் சேகரிக்கப்பட்டு வருகிறது.
வழங்கல் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், "இலவச பணத்தை, எந்த தலைப்பில் செலுத்த வேண்டும் என்பதை குறிப்பிடவில்லை. பணத்தை, கூட்டுறவுத் துறை அதிகாரிகள் சேகரிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது' என்றார்.
- நமது நிருபர் -
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.