சென்னை: "காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை அரசிதழில் வெளியிட மறுப்பது; பெட்ரோல், டீசல், கேஸ் சிலிண்டர் விலைகளை உயர்த்தி, மக்களை துன்பத்துக்கு உள்ளாக்குவது என, தொடர்ந்து நாட்டை சீர்குலைக்கும் மத்திய அரசை கண்டித்து, இம்மாதம், 24ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்' என, முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை, மத்திய அரசிதழில் வெளியிட, பல முறை வலியுறுத்தியும், சுப்ரீம் கோர்ட்டில் உத்தரவு பெற்றும் கூட, அரசிதழில் வெளியிடாமல், மத்திய அரசு, காலம் தாழ்த்தி வருகிறது. இதற்கு, தி.மு.க., தலைவர் கருணாநிதி கொடுக்கும் நெருக்கடி தான் காரணம் என, தெரிகிறது.
மேலும், அரசு கேபிள் நிறுவனத்துக்கு, டிஜிட்டல் உரிமம் வழங்கவும், மத்திய அரசு மறுத்து வருகிறது. தமிழகத்தின் தேவைகள், உரிமைகள் பற்றி, தேசிய வளர்ச்சிக் குழுக் கூட்டத்தில் பேசுவதற்கும், போதிய கால அவகாசம் வழங்க மறுக்கின்றனர்.
இதற்கிடையே, விஷம் போல் உயரும் விலைவாசியை கட்டுப்படுத்தாமல், பெட்ரோல், டீசல், கேஸ் சிலிண்டர், ரயில்வே கட்டணங்களை, மத்திய அரசு உயர்த்தி வருகிறது. இதனால், மக்கள், சொல்லொண்ணா துன்பத்துக்கு ஆளாகி வருகின்றனர். தமிழகத்தின், உரிமைகளை பறித்தும், கூட்டாட்சி தத்துவத்துக்கு கேடு விளைவிக்கும் மத்திய அரசுக்கும், தமிழகத்துக்கு தொடர்ந்து துரோகம் இழைக்கும், தி.மு.க.,வுக்கும் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழகத்துக்கு கூடுதல் நிதி :
மத்திய அரசு அலுவலகங்கள் முன் நடக்கும் இந்த ஆர்ப்பாட்டத்தில், அண்ணா தொழிற்சங்க பேரவையின் இணைப்பு சங்கங்கள் மற்றும் கட்சியின் முன்னணி தலைவர்கள் பங்கேற்பர்.
இவ்வாறு, ஜெயலலிதா கூறியுள்ளார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
இது மாநில அரசின் வேதனை வெளியீடு,
மாநில அரசு சொல்வதை மத்திய அரசும், மத்திய அரசு சொல்வதை மாநில அரசும் கருத்தில் கொள்ளவேண்டும்,
மத்திய அரசு எல்லா மா நிலங்களுக்கும் சமமாக நடந்து கொள்ளவேண்டும்.
எனவே இந்த செயல் பாடுகள்,
அரசியல் அமைப்பு சட்டத்தில் திருத்தும் தேவை என்பதனை உணர்த்துகின்றது
இதை சட்டம் இயற்றுபவர்கள் உணர்வார்களா..........
இது மத்திய அரசையும், சொக்கத் தங்கம் சோனியாவையும் அவமானப்படுத்தும் செயல் என்று எண்ண வேண்டாம்.. தமிழ்நாட்டில் பால், பேருந்து, மின்சாரம் என்று ஒன்று விடாமல் விலை ஏற்றி மக்களின் முதுகெலும்பை உடைத்த போது, அதை எதிர்த்து சோனியா என்ன டெல்லியில் போராட்டம் நடத்தினார்களா என்று சலனம் வேண்டாம் ?? உங்களின் விலைவாசியை எதிர்த்து குரல் கொடுத்த போது அப்படி பேசியவர்கள் மீது நீங்கள் அவதூறு வழக்கு போட்டது போல சொக்கத் தங்கமும் உங்களின் மேல் அவதூறு வழக்கு போடுவார் என்று பயப்பட வேண்டாம்.. உங்களின் வக்கீல் படையை வைத்து சுப்ரீம் கோர்ட்டில் வாய்தா வாங்கி போராடுங்கள்.. வீர மங்கையே, கொடநாட்டு கோமளவல்லியே...படையெடுங்கள் டெல்லி நோக்கி... பெங்களூரை அப்பாலே கவனிச்சுக்கலாம்..
இதை தான் செய்ய வேண்டும் என்று எதிர் பார்த்தேன் லேட்டாக செய்தாலும் லேட்டசக செய்ய உள்ளீர்கள் . ஏன் என்றால் ஒரு மாநில மக்கள் இருட்டில் தவிக்கும் போது அதுக்கு உதவி செய்ய இயலாத அரசுக்கு இது போன்று போராட்டத்தின் மூலம் எச்சரிக்கை செய்ய வேண்டும். மத்திய அரசால் தமிழகதிற்கு இழைக்க படுகின்ற வஞ்சகத்தை எத்தனையே முறை தாங்கள் எடுத்து உரைத்தும் அதை காதில் வாங்கி கொள்ளாத மத்திய அரசை எதிர்த்து போராடுவது வரவேற்க வேண்டியது ஓன்று. அதை போல் தமிழகத்தின் மத்திய அமைச்சர்களையும் கண்டனம் செய்ய வேண்டும். இந்த போராட்டம் அதிமுக தொழிற் சங்கதிர்க்கனா போராட்டம் அல்ல வஞ்சிக்க படுகின்ற ஒட்டு மொத்த தமிழகத்தின் உரிமை குரல் போராட்டம். இதற்க்கு மக்கள் முழு ஆதரவு அளிக்க வேண்டும் .
இந்த போராட்டம் தி மு க விற்கு வயிற்றில் புளியை கரைக்க வைக்கும் போராட்டம். தி மு க ஒரு தேச துரோக கட்சி. ஒழுங்காக நேர்மையாக ஆட்சி செய்யும் ஜெயலலிதா அம்மையாரை தி மு க முட்டுக்கட்டை போட்டு மக்களுக்கு திரோகம் செய்கிறது. இந்த செயல் தொடருமானால் அது தி மு க விற்கு தானே தற்கொலை செய்ய வழி செய்யும். மக்கள் அத்தனனயும் கவனித்து கொண்டு தான் இருக்கின்றனர். இந்த தீய சக்தி கூடாரத்தை விரட்ட மக்கள் தயார் நிலையில் உள்ளனர்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.