தூத்துக்குடி: தூத்துக்குடியில், குடிபோதையில், 40 அடி உயர தனியார் விளம்பர போர்டில் ஏறி நின்றவர் போலீசாரிடம் சிக்கினார். தூத்துக்குடி அருகேயுள்ள கூட்டாம்புளி, கணபதி மகன் மாடசாமி,45; வாய்பேச இயலாத இவர், கருத்து வேறுபாடு காரணமாக, ஆசிரியையாகவுள்ள மனைவியை பிரிந்து வாழ்கிறார். இந்நிலையில், நேற்றுமாலை, 3:30 மணிக்கு, மாடசாமி, குடிபோதையில், தூத்துக்குடி கலெக்டர் அலுவலகம் எதிரே, 40 அடி உயர தனியார் விளம்பர போர்டில் ஏறி நின்றார். அப்பகுதியினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு வந்த போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர், மாடசாமியை மீட்டு, கீழே இறக்கினர். அவர் எச்சரித்து அனுப்பப்பட்டார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.