அதர்மங்களின் அளவு கடந்த ஆக்கிரமிப்பால், அகில உலகும் அழியும் நிலையில், விரக்தியடைந்து வெகுண்டெழுந்த சிவபெருமான், உலகின் உச்சியில் நின்று, மண்டை ஓடுகளை மாலையாக்கி மார்பில் அணிந்து, கையில் உடுக்கை எடுத்து அடித்து, அடக்க முடியாத ஆக்ரோஷத்துடன் ஆடிய ஆட்டம், ஊழிக்கூத்து. இன்று இந்திய மண்ணில், ஊழலின் உக்கிர தாண்டவம் உச்ச கட்டத்தைத் தொட்டு விட்டது.
ஒவ்வொரு இந்தியனும் சிவபெருமானாகி, உடுக்கையைக் கையிலெடுத்து அடித்து ஊழிக்கூத்தாடி, ஊழலை வதம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டு விட்டது. எங்கும் ஊழல், எதிலும் ஊழல்; ஆதி முதல், அந்தம் வரை, அனைத்திலும் ஊழல். ஊழலின் உச்சக்கட்டத்தில், சகல சட்ட விதிமுறை மீறல்களும் சர்வ சாதாரணமாகி விட்டன.
"ஆம் ஆத்மி- சாமானியன், பாமரன் :
நாட்டின் இரு கண்கள் :
ஆனால் யதார்த்த நிலை என்ன? :
கொள்ளை லாபம் அடிக்க உதவி :
எவ்வகை தர்மம் ? :
காங்கிரஸ் மட்டுமல்ல, முக்கிய எதிர்க்கட்சியான பா.ஜ.,வின் பிரமுகர்களும், ஊழல் புகார்களில் தப்பவில்லை. அரசு அலுவலகங்களிலும், தலைமைச் செயலகங்களிலும் உள்ள பெருவாரியான கோப்புகளில் சிறியதும், பெரியதுமான ஊழல்கள், கோடிக்கணக்கில் கொட்டிக் கிடக்கின்றன. அவைகள் அத்தனையும் இந்நாட்டின் அழிவின் அறிகுறிகள்; அபாயத்தின் அஸ்திரங்கள். பஞ்சாயத்துப் போர்டு முதல், பார்லிமென்ட் வரை, பதவிக்குப் போட்டியிடும் வேட்பாளர் பெரும்பான்மையினர் காட்டும் சொத்துக் கணக்கும், தேர்தல் செலவுக் கணக்கும், பகிரங்கமான பொய் கணக்கு. ஒரு அரசு ஊழியர், ஒரு குற்றத்தைச் செய்துவிட்டால், அவர் உடனடியாக, "சஸ்பெண்ட்' செய்யப்படுவார். அந்தக் குற்றச்சாட்டுப் பற்றிய விசாரணை முடியும் வரை, அவர் பதவியில் தொடர முடியாது. ஆனால், அனேக அரசியல்வாதிகள், நாட்டையே நாசமாக்கும் ஊழல்களைச் செய்து, சிக்கிச் சிறை சென்று ஜாமினில் வெளி வந்து, கூவியழைத்த போதெல்லாம் குற்றவாளிக் கூண்டில் ஏறி நின்று, தன் மீதான குற்றச்சாட்டுகளுக்குப் பதில் சொல்லிக் கொண்டே, பதவிகளில் அமர்ந்து ஆட்சி அதிகாரம் செய்து கொண்டிருப்பது எவ்வகை தர்மம் என்பது புரியவில்லை.
எல்லா கட்சிகளிலும் ஏராளமான தேச பக்தர்களும், திறமையானவர்களும், நல்லவர்களும், நேர்மையானவர்களும் உள்ளனர். ஆனால், தகுதிக்கு மரியாதை இல்லை. விளைவு... வாரிசு அரசியல் வேரூன்றத் துவங்கி வெகுகாலமாகி விட்டது. ஆனால், அது இப்போது விஷ விருட்சமாக வளர்ந்து விழுது விட்டு நிற்கிறது. நேரு குடும்பத்தின் மூன்று தலைமுறையினர், பிரதமர்களாக இருந்து முடிந்த பின், நான்காவது தலைமுறை, அடுத்த பிரதமர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு அமைச்சர் ஜனாதிபதியானார்; அவர் காலி செய்த பார்லிமென்ட் தொகுதி, அவருடைய மகனுக்குப் போகிறது. நாட்டின் பிரதமராகிறார் ஒருவர். சில ஆண்டு கழித்து அவர் மகன் அவருடைய மாநிலத்தில் முதல்வர். இன்னொரு மாநில முதல்வர், ஊழல் புகார் காரணமாக பதவி இழந்தார். ஆனால் அவரோ, அரசியல் அனுபவமே சற்றும் இல்லாமல் அடுப்பங்கரையிலிருந்த அவர் மனைவியை, பெயருக்கு அம்மாநிலத்தின் முதல்வராக்கி விட்டு, அருகிலமர்ந்து மறைமுக ஆட்சி செய்தார்.
மற்றொரு மாநிலத்தில், ஒரு கட்சியின் தலைவர் முதல்வர். முழுமையாக இருந்து முடித்த பின், இப்போது அவருடைய மகன் முதல்வர். அவரும், மருமகளும் பார்லிமென்ட் உறுப்பினர்கள். இன்னொரு மாநிலத்தில் தந்தை மத்திய அமைச்சர். அவருடைய மாநிலத்தில் மகன் முதல்வர்.போன வருடம், ஒரு மாநிலத்தில் தந்தை முதல்வர். மகன் துணை முதல்வர். மற்றொரு மகன் மத்திய அமைச்சர். மற்றொரு மனைவியின் மகள், பார்லிமென்ட் உறுப்பினர். சில ஆண்டுகளுக்கு முன், அவருடைய அக்கா மகன் மத்திய அமைச்சர். அவருடைய மறைவுக்குப் பின், மறைந்த மருமகனின் மகன் மத்திய அமைச்சர்.
இதுதான் இந்தியாவின் ஜனநாயகம்! : சுயநலம், சொந்த பந்தங்கள் நலம், தங்கள் தொழில் நலம், பிரமிக்கத்தக்க வகையில், அசுர வேகத்தில் அசாத்திய சொத்து சேர்த்தல் ஆகியவை தான், இன்றைய அரசியல்வாதிகளின் தலையாய நோக்கம். அந்த நோக்கத்தின் உந்துதலால் கோடிக்கணக்கில் கொட்டிக் கொழிக்கும், கம்பெனிகளின் கைப்பாவைகள் ஆகிவிடுகின்றனர்.
இந்த அரசியல்வாதிகளா, 80 கோடி ஏழை எளிய மக்களை வாழ வைக்கப் போகின்றனர்?சட்டத்தின் ஆட்சி என்பது, மக்களாட்சியின் மாட்சி. ஆனால், அது நம் நாட்டில் கொழுந்து விட்டு எரியும் ஊழல் விளக்கில் வீழ்ந்து விட்ட விட்டில் பூச்சி. வடிகட்டிய சண்டாளனின் இறுதிப் புகலிடம் அரசியல் என, யாரோ ஓர் அறிஞன் சொன்னான். ஆனால், இந்தியாவில் அது தான் அவன் முதல் புகலிடம். இந்தியா அழிகிறது! அதைக் காப்பாற்ற போராடுவோம்.-
என்.கே.வேலு கூடுதல் காவல் துறை கண்காணிப்பாளர் (பணி நிறைவு)
இ-மெயில்: nkveluadsp@gmail.com
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
மக்கள் எதை விரும்புகின்றார்களோ அதுதான் கிடைக்கும். பெரும்பான்மை மக்கள் திறமை தேவையை விட ஒதுக்கீட்டு தேவைதான் சமூகத்தை உயர்த்தும் என்று வாதாடி போராடி பெறுகிறார்கள். மிகப் பெரும்பான்மையோ பிரியாணியும் கைக்காசும் போதும் என்றிருக்கிறார்கள். எவனாவது ஆன்மிகம் என்றால் பொஇக்கெசு போட்டு உள்ளே தள்ளி வேடிக்கை பார்க்கிறார்கள். நிஜ நிஜ கொள்ளையர்கள் குஷாலாக வளைய வர்கிறார்கள். நிச்சயம் புரட்சி வரும். அனால் இன்னும் முற்றவில்லை. 20 ஆண்டுகளாவது ஆகும்.
உங்கள் கூற்று நூற்றுக்கு நூறு உண்மையே. சமிபத்தில் தலைநகரில் ஒரு பெண்ணின் பாலியல் பலாத்காரத்துக்கு எதிராக மக்கள் கிளம்பியது இந்த உலகத்தையே உலுக்கியது. அது என்ன என்று தெரிகிறதா, மக்கள் அடக்கப்படுகிறார்கள் , அந்த மன அழுத்தம் எங்கேனும் தவறு நடக்கும் பொழுது வெகுண்டு எழுகிறது, 500 ஆண்டுகளுக்கு மேலாக அடிமைகளாக இருந்த மக்கள் கடந்த 60 ஆண்டுகளுக்கு மேலாக சுதந்திர சுவாச காற்றை சுவாசித்தவர்களுக்கு சுதந்திரத்தின் மகிமை அடிமனதை சென்று அடைந்து விட்டது. அந்த அடிமனதின் செயல் எல்லாம் அனிச்சை செயல்கள் தான். ஒரு பொறி பறந்தால் போதும். டெல்லியில் நடந்த போது நமக்கும் இங்கே நரம்புகள் முறுக்கேறியதே. நீங்கள் கூறியது போல் மக்களால் ருத்திர தாண்டவம் ஆட வெகு நேரம் ஆகாது. அடுத்தது புரட்சி தான் வெடிக்கும், அதன் வெளிப்பாடே டெல்லி ஆவேசம்.
சொரணை கெட்ட வாக்காளர்கள் மீண்டும் 70% வாக்களிக்க வரிசையில் நிற்ப்பார்கள். மானியம் என்ற பெயரில் அவர்களுக்கும் வங்கி கணக்கில் மாத மாதம் பணம் வரும் , பிரியாணி மற்றும் இதர பானங்கள் கிடைக்கும். ஆனால் மக்கள்புரட்சி வெடிக்கும் போது இவர்களும் இவர்கள் குடும்பத்தை சார்ந்தவர்களும் லட்ச கணக்கான மக்களால் அடி பட்டு மிதி பட்டு முகவரி அற்று மண்ணோடு மண்ணாக படுவார்கள். .....படவேண்டும்.
எல்லாம் சரிதான்.. ஆனால், வாரிசுகளை பதவியில் அமரவைப்பதும் இதே மக்கள்தானே ? தேர்தல் மூலமாகத்தானே வாரிசுகள் வருகிறார்கள்... எனவே , மக்களுக்கும் முதலில் விழிப்புணர்ச்சி தேவைபடுகிறது.. அதற்க்கு கல்வி ஒரு முக்கிய காரணியாகும்... முதலில் அனைவருக்கும் இலவச மற்றும் கட்டாய கல்வி தரும் சட்டம் வரட்டும். எல்லோரும் கல்வி கற்கட்டும். தெளிவு பெறட்டும்.. அதற்குள் நாடு எங்கேயோ போய் இருக்கும் .

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.