தர்மபுரி:
தர்மபுரி மாவட்டத்தில் இன்று (ஜன.,20) 923 மையங்கள் மூலம் போலியோ சொட்டு
மருந்து வழங்கப்படுகிறது.தர்மபுரி மாவட்டத்தில் குழந்தைகளை போலியோ நோய்
தாக்குதலில் இருந்து பாதுகாக்க நாளை போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம்
நடத்தப்படுகிறது. மாவட்டம் முழுவதும், 923 மையங்களிலும், பஸ் ஸ்டாண்ட்,
ரயில்வே ஸ்டேஷன் ஆகிய பகுதிகளில், 24 மொபைல் மையங்களும், மலைகிராமங்கள்
உள்ள குழந்தைகளுக்கு, 22 நடமாடும் குழுக்கள் மூலம் சொட்டு மருந்து வழங்க
நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.சுகாதாரத்துறை துணை இயக்குனர் விஜயலட்சுமி
கூறியதாவது:தர்மபுரி மாவட்டத்தில் இன்று காலை, 7 மணி முதல், மாலை 5 மணி
முதல் மாவட்டத்தில் உள்ள ஐந்து வயதிற்கு உட்பட்ட, ஒரு லட்சத்து, 60 ஆயிரம்
குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்படவுள்ளது.
இரண்டு லட்சம்
குழந்தைகளுக்கு வழங்க தேவையான சொட்டு மருந்து தற்போது பாதுகாப்பாக
வைக்கப்பட்டுள்ளது. சொட்டு மருந்து வழங்குவது குறித்து வாகனங்களில் ஒலி
பெருக்கிகள் மூலம் விளம்பரம் செய்யப்பட்டு வருகிறது. ஒவ்வொரு மையத்திலும்,
தலா, நான்கு பேர் பணிபுரிவார்கள்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.