பள்ளிபாளையம்: தெரு நாய்களின் பெருக்கத்தை கட்டுப்படுத்த, 5.50 லட்சம் ரூபாய் மதிப்பில், பிராணிகள் கருத்தடை மையம் அமைக்க, பள்ளிபாளையம் நகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.பள்ளிபாளையம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில், தெரு நாய்கள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதனால், பொதுமக்கள் பீதியில் சென்று வரும் அவலம் நீடித்து வருகிறது. இது குறித்து, நகராட்சி நிர்வாகத்திடம், புகார் செய்யப்பட்டது. அதை தொடர்ந்து, தெரு நாய்களின் பெருக்கத்தை கட்டுப்படுத்த, அவற்றை பிடித்து குடும்ப கட்டுப்பாடு செய்ய முடிவு செய்யப்பட்டது.நகராட்சிக்கு சொந்தமான பிராணிகள் கருத்தடை மையம், சின்னாக்கவுண்டம்பாளையத்தில், 5.50 லட்சம் ரூபாய் மதிப்பில் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.அதற்கான பணிகள், விரைவில் துவங்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. தெரு நாய்களின் தொல்லையை கட்டுப்படுத்த, நகராட்சி நிர்வாகம் எடுத்துள்ள முடிவை, பொதுமக்கள் வரவேற்றுள்ளனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.