லண்டன் :அன்பானவர்களை கட்டிப்பிடிப்பதன் மூலம், ரத்தக் கொதிப்புகுறைவதோடு, நினைவாற்றல்அதிகரிக்கும் என, ஆய்வில் தெரியவந்துள்ளது.
ஐரோப்பிய நாடான ஆஸ்திரியாவில் உள்ள, வியன்னா பல்கலைகழக விஞ்ஞானிகள் நமது உடலில்,பிட்யூட்டரி சுரப்பியால் உருவாக்கப்படும் ஹார்மோனான, ஆக்சிடாக்சினை பரிசோதித்து வந்தனர். அதில், நண்பர்கள், சகோதரர்கள், உறவினர்கள், காதலன் அல்லது காதலி, என நம்மை நேசிக்கும்அன்பானவர்களை நாம் கட்டிப்பிடித் தால், "ஆக்சிடாக்சின்' வெளிப்பட்டு, ரத்தக் கொதிப்பு குறைகிறதுஎன்பதை கண்டறிந்துள்ளனர்.மேலும், இதன் மூலம், நினைவாற்றல் மேம்படுவதும் தெரியவந்துள்ளது.ஆனால், நமக்கு முன்பின்அறிமுகம் இல்லாதவர்கள், நம்மை நேசிக்காதவர்கள் ஆகியோரை,கட்டிப்பிடிக்கும்போது, இந்த ஹார்மோன் அதிகம் சுரக்காமல், எதிர் விளைவுகள் ஏற்படுவதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து, வியன்னா பல்கலைகழக நரம்பியல் விஞ்ஞானி சாண்ட் குக்லர் கூறியதாவது: பெற்றோர், குழந்தைகளைகட்டிப்பிடிக்கும்போதும், தம்பதியினர் கட்டிப்பிடிக்கும்போதும், ஆக்சிடாக்சின் அதிகளவு சுரப்பது தெரியவந்துள்ளது.பரஸ்பரம் நம்பிக்கையுடன் உள்ளவர்களை கட்டிப்பிடிக்கும்போது மட்டும் தான், ரத்தக்கொதிப்பு குறைவதும், நினைவாற்றல் அதிகரிப்பதும் நடக்கிறது.இவ்வாறு அவர் கூறினார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
அன்பானவர்களை கட்டிபிடித்தால் அறிவு மற்றும் நினைவாற்றல் வளரும் ஐரோபிய ஆய்வில் கண்டுபிடிப்பு-செய்தி.யாரை கட்டிபிடிகின்றோம் யாரை எப்போது கட்டிபிடித்தோம் நினைவு வைத்து கட்டிபிடிக்கவேண்டியவர்கள் ஐரோபியார்கள்தான். “கட்டிபிடி வைத்தியத்தை” ஐரோப்பியர்கள் கண்டுபிக்கும் முன்னர் நம்ம கமல் ஏற்க்கனவே கண்டுபிடித்து உலகுக்கு சொல்லிவிட்டார்.கமலுக்கு அறிவும் நினைவாற்றலும் ரொம்ப ஜாஸ்த்திதான்.
ஏற்கனவே நம்ம ஊருல நிலைமை ரொம்ப மோசமா போயிட்டிருக்கு. இது இந்த ஆராய்ச்சி முடிவு வேற அவங்களுக்கு தோதா இருக்கும் போல தெரியுது. தவறான புரிதல் உள்ள சிலரால் இந்த செய்தியின்பால் அருமையான விளக்கம் கொடுக்கப்பட்டு நம்ம ஊரு மேலும் சிறப்பு பெற்றால் மகிழ்ச்சியே. எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க நம்மாளுங்கன்னு சீக்கிரமே தெரியும்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.