Advertisement
கேரளா, ஆந்திராவில் வெளியானது விஸ்வரூபம்
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
Bookmark and Share  
ஆல்பம்
பதிவு செய்த நாள் : ஜனவரி 25,2013,23:24 IST

கமல் இயக்கி, நடித்துள்ள, "விஸ்வரூபம்' படம், கேரளா, கர்நாடகா, ஆந்திராவிலும், வெளிநாடுகளிலும் நேற்று வெளியிடப்பட்டது. ஆந்திராவில் நேற்று காலை படம் வெளியாகி, பாதி படம் ஓடிக்கொண்டிருந்த போது, திடீரென நிறுத்தப்பட்டதால், ரசிகர்களிடையே பரபரப்பு ஏற்பட்டது.ஆந்திர மாநிலம் முழுவதும், தெலுங்கு மொழியில், நேற்று, விஸ்வரூபம் படம் வெளியானது. ஐதராபாத்தில், 22 தியேட்டர்களில் படம் வெளியானது. மீலாது நபியையொட்டி, நேற்று மட்டும் படத்தை நிறுத்தி வைக்க போலீசார் கேட்டுக் கொண்டதால், படம் நிறுத்தி வைக்கப்பட்டது.
திருப்பதியில் மூன்று தியேட்டர்களில் வெளியான விஸ்வரூபத்தை, தமிழகத்திலிருந்து கமல் ரசிகர்கள் சென்று பார்த்தனர். கர்நாடகாவில் பெங்களூரில், 15 தியேட்டர்கள் உட்பட, பல்வேறு நகரங்களில், 26 தியேட்டர்களில் திரையிடப்பட்டன.தமிழகத்தில், "விஸ்வரூபம்' படத்தை வெளியிட, இம்மாதம், 28ம் தேதி வரை, ஐகோர்ட் தடை விதித்துள்ளது. இதனால், தமிழகத்தில் நேற்று, "விஸ்வரூபம்' வெளியிடப்படவில்லை. புதுச்சேரி மற்றும் இலங்கையிலும் படத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
கேரளாவில் வெளியீடு
இதற்கிடையே, கேரளா, கர்நாடகா மற்றும் ஆந்திராவில், விஸ்வரூபம் படம் நேற்று வெளியிடப்பட்டது. கேரளாவில், 71 தியேட்டர்களில் படம் வெளியானது. பாலக்காடு, எர்ணாகுளம், மலப்புரம், , கஞ்சிக்கோடு, திருவனந்தபுரம் பகுதிகளில் உள்ள தியேட்டர்களில் படம் பார்க்க, தமிழக ரசிகர்கள் அதிகளவில் சென்றிருந்தனர்.வெளிநாடுகளில்
அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா, மலேசியா நாடுகள் உட்பட, எட்டு நாடுகளில் நேற்று, விஸ்வரூபம் வெளியானது. தியேட்டர்கள் அனைத்திலும், நான்கு தினங்களுக்கு, முழுவதுமாக முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாக, அங்குள்ள கமல் ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். மலேசியாவில் தடை விதிக்கப்பட்டதாக தகவல் வெளியானது; ஆனால், அங்கு பல தியேட்டர்களில், படம் திரையிடப்பட்டதாக செய்திகள் வந்துள்ளன. வெளிநாடுகளில் விஸ்வரூபம் வெளியாகியுள்ள நிலையில், திருட்டு வி.சி.டி., சென்னை வழியாக, மற்ற நகரங்களுக்கு அனுப்பப்பட வாய்ப்புள்ளது. இதை தடுக்க, கமல் ரசிகர்கள் களமிறங்கியுள்ளனர்.ரஜினி வேண்டுகோள் கமலுக்கு ஆதரவாக ரஜினி வெளியிட்டுள்ள அறிக்கையில், "விஸ்வரூபம் படத்தை, முழுமையாக தடை செய்யவேண்டும் என்ற கருத்திலிருந்து இஸ்லாமியர்கள் மாறவேண்டும். கமலுடன் பேசி, கதைக்கு பாதிப்பு வராத வகையில் சரி செய்து, படத்தை வெளியிட உறுதுணையாக இருக்கவேண்டும்' என தெரிவித்துள்ளார். - நமது நிருபர் -




வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து (118)
YAMAHA ANAND - chennai,இந்தியா
27-ஜன-201302:04:58 IST Report Abuse
YAMAHA ANAND இது கமலை யார் காலிலோ விழ வைக்கும் முயற்சியாக ,சிலரது சுய விளம்பரத்துகாக செய்வது போல தோன்றுகிறது உண்மையான பொது நலம் இல்லை.
Rate this:
1 members
0 members
6 members
Share this comment
Abdul Razak Samusdeen - Madurai,இந்தியா
27-ஜன-201302:04:29 IST Report Abuse
Abdul Razak Samusdeen குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை...
Rate this:
0 members
0 members
6 members
Share this comment
Sahayam - cHENNAI,இந்தியா
26-ஜன-201323:38:12 IST Report Abuse
Sahayam பொத்தி பொத்தி எல்லா விசயதியும் வைத்து இந்த இஸ்லாமிய சமுகம் வளர பார்கிறது.. இது gulf நாடுகளில் சாத்திய படலாம். ஆனால் இந்தியாவில் ரொம்ப கஷ்டம். ஒருவர் படத்தில் போடுவதால் எல்லா இஸ்லாமியரையும் தீவிரவாதிகளாக யாரும் பார்க்க மாட்டார்கள். இவர்கள் ஏன பயபடுகிரர்கள் என தெரியவில்லை
Rate this:
0 members
0 members
8 members
Share this comment
pichu - kallakurichi,இந்தியா
26-ஜன-201322:48:42 IST Report Abuse
pichu இஸ்லாமிய நண்பர்களின் போராட்டம் தேவை இல்லாதது, சினிமாவை பொழுது போக்கு ஊடகமாக மட்டுமே பார்க்க வேண்டும்.
Rate this:
1 members
0 members
4 members
Share this comment
Raju - chennai,இந்தியா
26-ஜன-201322:33:37 IST Report Abuse
Raju தமிழக முஸ்லிம்களுக்கு,கமலை விடவும் உண்மையான, சிறந்த நண்பர், தேவைப்படும்போது தைரியமாக முஸ்லிம்களுக்குத் துணை நிற்பவர் வேறு யாரும் கிடையாது. அவரை நம்புங்கள், இந்தத் தேவையற்ற சர்ச்சைக்கு உடனே முற்றுப்புள்ளி வையுங்கள்.
Rate this:
1 members
1 members
4 members
Share this comment
Raj - Chennai,இந்தியா
26-ஜன-201322:14:29 IST Report Abuse
Raj ஒரு தமிழனுக்கு தமிழ்நாட்டை தவிர மற்ற மாநிலத்தில் மரியாதை கிடைக்கிறது வெட்கப்படவேண்டிய விஷயம். எங்கே போயிற்று மத நல்லிணக்கம், சகிப்புத்தன்மை, சகோதரத்துவம் எல்லாம்? இதற்க்கு அரசாங்கம் வேறு ஆதரவு
Rate this:
1 members
0 members
4 members
Share this comment
என்னுயிர்தமிழகமே - hyderabad,இந்தியா
26-ஜன-201321:05:02 IST Report Abuse
என்னுயிர்தமிழகமே என்னனு சொல்றது, இன்னைக்கு படத்துக்கு போகலாம்னு புக் பண்ணுனா ஹைதராபாத்துல கேன்சல் அப்படீன்னு சொல்லிட்டாங்க, முஸ்லிம் சகோதரர்களே, இங்க ஒரு கருத்து ஓடிகிட்டு இருக்கு தெரியுமா? நீங்க உங்களது மதத்தை தீவிரவாதி அப்படீன்னு முத்திரை குத்துவதை வருத்த படுகிறீர்கள், எனது சக பணியாளர் சார்மினார் பகுதியில் தலைமுறையாய் வாழ்பவர், அவர் முதல் காட்சி பார்த்து வந்து சொன்ன செய்தி இது, எவ்ளவு தூரம் உண்மைன்னு விசாரியுங்க, "இது தமிழக சினிமாத்துறையும், கலைஞர்களையும் குறிவைத்து வெளிநாட்டுல தங்கியிருக்குற கடத்தல் மன்னன் நடத்தும் ப்ளாக் மெயில் விளையாட்டு ", இதற்கு பிறகு வெளிவரும் படங்கள் எல்லாம் அவர்களின் கண்ட்ரோலில் வரும்படி செய்வதற்கு என்று போட்டுடைத்தார், கொஞ்சம் விசாரிச்சு தான் சொல்லுங்களேன்.
Rate this:
0 members
0 members
4 members
Share this comment
vijayaragavan - chidambaram,இந்தியா
26-ஜன-201320:26:34 IST Report Abuse
vijayaragavan இன்று படம் ஆந்திராவில் பார்த்தேன். கமல் முஸ்லிம் மதமாகவே மாறி namaz செய்கிறார். Hard nut to crack I have to see one more time to clearly understand the movie.But the film is full of dialogues of English and Arabic. This great artist may dub the movie in English and he may get the proper renumeration/recognition for his work.
Rate this:
0 members
0 members
2 members
Share this comment
Mohamed Nawaz - Sakaka,சவுதி அரேபியா
26-ஜன-201319:56:54 IST Report Abuse
Mohamed Nawaz இங்கே கருத்து சொல்லியுள்ள பல முஸ்லிமல்லாத நண்பர்கள் முஸ்லிம்கள் அந்நிய நாட்டவர்கள் போலவும் அவர்கள் மட்டுமே இந்தியர்கள் போலவும் கருத்துகளை தெரிவித்துள்ளனர். தேவர் மகன் படத்திற்கு தேவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனரே மறந்து விட்டதா? ஒட்டகத்திற்கு கூடாரத்தில் இடம் கொடுத்த கதை என்று ஒரு நண்பர் எழுதியுள்ளார், தீவிரவாதம் என்பது இஸ்லாமியர்களின் பொது உடைமையல்ல. மாலேகானில் தீவிரவாதம் செய்தது இஸ்லாமியர்களா? இவரது படங்கள் அதிகம் சர்ச்சைகுள்ளாவது எதனால்? மதங்களுக்கு அப்பாற்பட்டு படம் எடுக்க முடியாதா? சமுதாயம் நேர் வழி பெற ஊடகங்கள் உபயோகப்படுத்தப்பட வேண்டும். அதில்லாமல் பிரிவினை உண்டாக்கும் சர்ச்சைக்குரிய படங்களை மட்டுமே எடுப்பேன் என்று அடம்பிடிப்பது எதனால்? ஆப்கானிச்த்தானில் நடப்பது போன்று எடுப்பதில் எங்களுக்கு ஆட்சேபனை இல்லை. ஆனால் மதுரையிலும் கோவையிலும் முல்லா உமர் பயிற்சி கொடுத்ததாக சித்தரிக்கபடுவதும் குரான் ஓதிவிட்டு குண்டு வைக்க செல்வது போல காட்டப்பட்டிருப்பதுமே எதிர்க்க படுகிறது.
Rate this:
8 members
0 members
1 members
Share this comment
Susil - dubai,ஐக்கிய அரபு நாடுகள்
26-ஜன-201319:54:20 IST Report Abuse
Susil யோவ் அமானுல்லாஹ் , இங்கேதான் படம் வரவே இல்லையே , நீ மட்டும் எப்படி பார்த்தே
Rate this:
0 members
0 members
3 members
Share this comment

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

அன்புள்ள வாசகர்களே!,

நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.