வழக்கு தொடர திட்டம்:
சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கூறுகையில், "கோவையில் உள்ள குளங்களை அழகுபடுத்தப் போகிறோம் என கூறி, பொதுப்பணித்துறையிடம் இருந்து குளங்களை மாநகராட்சி கைப்பற்றியது. எந்த குளங்களையும் அழகுப்படுத்த வேண்டிய அவசியம் இல்லை. இருக்கும் குளங்களை, பாதுகாப்பாக பராமரித்தாலே போதுமானது. கோவை மாநகர் மற்றும் புறநகரில் உள்ள பல குளங்கள் இன்று கழிவுநீர் குட்டைகளாக மாறி வருகின்றன. குறிச்சி குளத்தின் ஒரு பகுதியை மூடி, பஸ் நிலையமாக மாற்றும் முயற்சி கண்டிக்கத்தக்கது. மாநகராட்சியின் நடவடிக்கைக்கு எதிராக, கோர்ட்டில் வழக்கு தொடர, நடவடிக்கை எடுத்து வருகிறோம்' என்றனர்.வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
தமிழக அரசு ஒரு பக்கம் தண்ணீர்க்காக கோர்ட் படிகளில் தினமும் ஏறி இறங்குகிறது . மறுபக்கம் இருக்கும் நீர் நிலைகளை பராமரிக்காமல் அலட்சியபடுத்துகிறது . தன்னார்வ அமைப்புகள் ஆர்வம் காட்டினாலும் தங்களின் வருமானம் பாதிக்கப்படுமோ என்று மாநகராட்சி உறுப்பினர்கள் உள்ளனர் . இனி கோர்ட்தான் நம் கோவையை காப்பாற்ற வேண்டும்
மழை இல்லாமல் மக்கள் வாடினால் வறட்சி நிவாரண நிதி,மழை வெள்ளம் வந்தால் வெள்ள நிவாரண நிதி கேட்பதற்க்காகவே நீர் நிலைகள் மூடபடுவதாக தெரிகிறது. நமது முன்னோர்கள் நமக்கு அளித்த மிகப்பெரிய சொத்து நீர் நிலைகள்.அதனை போன்ற ஒரு இயற்கையான நீர் ஆதார அமைப்பை உருவாக்க முடியாது ....அழிக்காமல் இருக்கலாம். ஒரு சிறிய குளத்தை உருவாக்க சுமார் பத்து லக்ஷம் செலவாகும்.....பல நூறு ஏக்கர் பரப்பளவில் ஏரி போன்ற அமைப்பை உருவாக எவ்வளவு கோடிகள் தேவைப்படும்??. தூர் வாரும் செலவே பல கோடிகள் கணக்கு காட்டபடுகிறது. நீர் நிலைகளை நீதி மன்றத்தின் கண்காணிப்பில் விட்டுவிடுவது நல்லது. நீர் நிலைகளை மூடி அரசு அடுக்குமாடி கட்டுவது மிகவும் மோசமான செயலாகும். மதுரை உயர் நீதி மன்றமே ஒரு கண்மாயை மூடி கட்டப்பட்டது என்றால் யாரிடம் போய் முறையிடுவது??. நீர் வழித்தடங்களை அதன் போக்கை மாற்றினால் நம் கண்களில் கண்ணீரை பார்க்கும் நாள் வெகு தொலைவில் இல்லை.
எனக்கு தெரிந்து கடந்த 10 வருடங்களாக இந்த குட்டி குறிச்சி குளத்தில் சுத்தமான நீர் இருந்து அதை மக்கள் use செய்தோ பார்த்ததில்லை. அதை அந்த பகுதி மக்கள் காலை கடமைகளை கழிக்க வே உபயோக படுத்துகின்றனர். இப்போது இந்த இடத்தை மண் போட்டு மூடினால் அடுத்தது அவர்கள் குறிச்சி பெரிய குளத்தை உபயோக படுத்துவர். அதேபோல் குறிச்சி குளத்தை தூர்வார சிறு துளி அமைப்பு முவந்ததும் அதை கிடப்பில் போட்டது 100% உண்மை. மேலும் குறிச்சி குளம் அருகே இருப்பது மிகவும் சிறிய சாலை அதில் இருபுறமும் மதில் சுவர் கிடையாது அனால் நம்ம தனியார் பொள்ளாச்சி பேருந்து ஓட்டுனர்கள் செய்யும் அக்குருமம் இருக்கே சொல்லி மாளாது. எனக்கு தெரிந்து குறிச்சி குளத்தை இரு சார்பினர் மிகவும் நன்றாக உபயோக படுத்துகின்றனர் ஒன்று மீன் பிடிப்பவர்கள் மற்றொன்று அரசியல் வாதிகள். இருவருமே குட்டையை கலைத்து மீன் பிடிப்பதில் வல்லவர்கள்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.