கோவை,ஆசிரியர்கள் வெறும் வரலாறுகளை போதிக்காமல், தற்போது காணப்படும் சவால்களையும், போட்டிகளையும் எதிர்கொள்ளும் வகையில் மாணவர் சமுதாயத்தை உருவாக்க வேண்டும்,'' என, தமிழருவி மணியன் பேசினார்.
முன்னாள் மாணவர்கள் சங்கம் சார்பில் பொன்விழா ஆண்டு நிறைவு விழா(1962-2012), ஒண்டிப்புதூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நேற்று நடந்தது. முன்னாள் மாணவர்கள் சங்க தலைவர் பாலகிருஷ்ணன் வரவேற்றார். பள்ளி தலைமையாசிரியை லோகநாயகம் தலைமை வகித்தார்.
காந்திய மக்கள் இயக்க தலைவர் தமிழருவி மணியன் பேசியதாவது:
மாணவர்கள் தியானம் செய்யும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்வது அவசியம். நாம் செய்யும் செயலின் எண்ணம் சிதறாமல், குறிக்கோளுடன் செய்ய வேண்டும். சிந்தனை வளம் பெருகவும், ஞாபக சக்தி அதிகரிக்கவும் தியானம் முக்கியம். ஆசிரியரையும், பெற்றோரையும் மதித்து நடக்க வேண்டும்.
மது, புகைபிடித்தல் போன்ற தீய பழக்கங்களுக்கு ஆளாகக்கூடாது. ஆசிரியர்கள் வெறும் வரலாறுகளை போதிக்காமல், தற்போது காணப்படும் சவால்களையும், போட்டிகளையும் எதிர்கொள்ளும் வகையில் மாணவர் சமுதாயத்தை உருவாக்க வேண்டும்.
இவ்வாறு, அவர் பேசினார். முன்னாள் மாணவர் சங்க பொருளாளர் லோகநாதன் நன்றி கூறினார்.
முன்னதாக, தீய பழக்கங்களுக்கு ஆளாகாமல் இருக்கும் உறுதிமொழியை மாணவர்கள் ஏற்றனர். முன்னாள் தலைமையாசிரியர்
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.