ஆனைமலை:வால்பாறையில் ஏற்படும் மனித-வன உயிரின மோதலை தடுப்பது பற்றிய ஆலோசனைக்கூட்டம் பொள்ளாச்சி வனத்துறை அலுவலகத்தில் நடந்தது.
ஆனைமலை புலிகள் காப்பக தலைமை வனப்பாதுகாவலர் ராஜீவ் கே ஸ்ரீ வஸ்தவா தலைமை வகித்தார். மாவட்ட வன அலுவலர் வேலுச்சாமி முன்னிலை வகித்தார். வால்பாறை வனச்சரக அலுவலர் கிருஷ்ணசாமி, மானாம்பள்ளி வனச்சரக அலுவலர் முகமது அலி, பொள்ளாச்சி வனச்சரக அலுவலர் கணேஷ்ராமும், வால்பாறை சுற்றுப்பகுதியில் எஸ்டேட் நிர்வாகிகள், சமூக ஆர்வலர்களும் கலந்துகொண்டனர்.
வால்பாறையில் வன உயிரினங்களின் தாக்குதலை தடுக்க வனத்துறை பல்வேறு வகையில் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
இரவு நேரத்தில் ரோந்து தனியாக வாகனங்கள் வழங்கப்பட்டு வேட்டை தடுப்பு காவலர்கள் மூலம் ரோந்து செல்லும் பணியும் நடந்து வருகிறது. யானைகள் ரேஷன் கடைகளை உடைப்பதும், வீடுகளை சேதப்படுத்துவதும் தொடர்கிறது. வனத்துறையிடம் பொதுமக்கள் சார்பில் மோதலை தடுக்க பல்வேறு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளன.
இந்த கோரிக்கை நிறைவேற்ற வனத்துறையும் தீவிர முயற்சி எடுத்து வருகிறது. ஆலோசனை கூட்டத்தில், இதில் வனத்துறையினருடன் எஸ்டேட் நிர்வாகிகள் ஒருங்கிணைந்து செயல்பட ஒத்துழைப்பு தருவதாக தெரிவித்தனர்.
எஸ்டேட் பகுதிகளில் இறைச்சிகடைகள் தடை செய்வது, ரேஷன் கடைகளை குறைத்து மக்களுக்கு ஆங்காங்கே வீடுகளில் ரேஷன் பொருட்களை வழங்குவது குறித்து ஆலோசனை செய்யப்பட்டது.
வால்பாறை மக்கள் வன உயிரினங்களிடம் இருந்து காப்பாற்ற வனத்துறையின் அனைத்து ஒத்துழைப்பும் அழிக்கப்படும் என தலைமை வனப்பாதுகாவலர் ராஜீவ் கே ஸ்ரீ வஸ்தவா தெரிவித்துள்ளார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.