Advertisement
தே.ஜ., கூட்டணி பிரதமர் வேட்பாளராக சுஷ்மாவை அறிவிக்க சிவசேனா ஆதரவு
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
Bookmark and Share  
ஆல்பம்
பதிவு செய்த நாள் : ஜனவரி 29,2013,22:59 IST

மும்பை: "தே.ஜ., கூட்டணியின் பிரதமர் வேட்பாளருக்கு, லோக்சபா எதிர்க்கட்சி தலைவர், சுஷ்மா சுவராஜ் பொருத்தமானவர்' என, சிவசேனா ஆதரவு தெரிவித்துள்ளது."பா.ஜ., பிரதமர் வேட்பாளராக, குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை அறிவிக்க வேண்டும்' என, அந்தக் கட்சியின் மூத்த தலைவர் யஷ்வந்த் சின்கா குரல் கொடுத்திருந்தார். இதற்கு, கூட்டணி கட்சியான, ஐக்கிய ஜனதா தளம் எதிர்ப்புத் தெரிவித்ததோடு, சர்ச்சையையும் கிளப்பியுள்ளது.இந்நிலையில், பா.ஜ.,வின் மற்றொரு கூட்டணி கட்சியான, சிவசேனா, "லோக்சபா எதிர்க்கட்சித் தலைவராக உள்ள சுஷ்மா சுவராஜை,பிரதமர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும்' எனக்கூறி, பரபரப்பைஏற்படுத்தியுள்ளது.சிவசேனாவின் செய்தி தொடர்பாளரும், எம்.பி.,யுமான, சஞ்சய் ராவத் நேற்று நிருபர்களிடம் கூறுகையில், "" பிரதமர் வேட்பாளருக்கு, சுஷ்மா சுவராஜ் பொருத்தமானவர். பா.ஜ., தலைமையிலான, தே.ஜ., கூட்டணிக்கு பிரதமர் வேட்பாளராக சுஷ்மா சுவராஜ் இருக்க வேண்டும் என, மறைந்த சிவசேனா தலைவர் பால்தாக்கரே கருத்து தெரிவித்து இருந்தார்,'' என்றார். குஜராத், ராஜ்கோட்டில், பாகிஸ்தான் கிரிக்கெட் அணி விளையாடுவதற்கு, குஜராத் முதல்வர் நரேந்திர மோடி அனுமதி அளித்ததற்கு சிவசேனா கடும் கண்டனம் தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையில், சின்காவை தொடர்ந்து, மற்றொரு பா.ஜ., மூத்த தலைவர், ராம்ஜெத்மலானி மோடிக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். டில்லியில், நிருபர்களிடம் பேசிய ராம்ஜெத்மலானி கூறுகையில்,"" மோடி, 100 சதவீதம் மதச்சார்பற்ற சிந்தனை கொண்டவர்; பிரதமர் பதவிக்கு சிறந்த வேட்பாளராக அவர் இருப்பார். பா.ஜ.,வின் பிரதமர் வேட்பாளராக மோடியை அறிவிக்க வேண்டும் என, ஒரு மாதத்திற்கு முன், தெரிவித்து விட்டேன். என் கருத்துக்கு ஆதரவாக, சின்கா பேசியுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது,'' என்றார்.




வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து (1)
பொன்மலை ராஜா - திருச்சி, ,இந்தியா
30-ஜன-201301:17:33 IST Report Abuse
பொன்மலை ராஜா தமிழர்களைப் பொருத்தவரை சோனியாவும் சுஷ்மாவும் ஒன்றுதான். தமிழர் நலனில் அக்கறை கொண்ட பா.ஜ.க. தலைவர் ராம் ஜெத்மலானி அடையாளம் காட்டும் ஒருவர் பிரதமராவது நிச்சயம் நாட்டிற்கு நல்லது.
Rate this:
0 members
0 members
6 members
Share this comment

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

அன்புள்ள வாசகர்களே!,

நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.