Advertisement
மலேசியாவில் குள்ள யானைகள் பலி விஷம் வைத்து கொல்லப்பட்டதா?
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
ஆல்பம்
பதிவு செய்த நாள் : ஜனவரி 29,2013,23:43 IST
மாற்றம் செய்த நாள் : ஜனவரி 30,2013,05:42 IST

கோலாலம்பூர்: அபூர்வ இனத்தைச் சேர்ந்த குள்ள யானைகள், அடுத்தடுத்து பலியானது குறித்து, மலேசிய வனத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.மலேசியா, போர்னியோ தீவில், சாம்பா மாகாணத்தில், குங்யங் ராரா வனப்பகுதி உள்ளது. இங்கு, அபூர்வ வகை குள்ள யானைகள் காணப்படுகின்றன.உலகில், இவ்வகையை சேர்ந்த, 1,500 யானைகள் மட்டுமே உள்ளன. இந்நிலையில், குங்யங் ராரா வனப்பகுதியில், சமீபத்தில், 10 யானைகள் மர்மமான முறையில் இறந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த யானைகளை, யாரும் சுட்டுக் கொன்று தந்தங்களை திருடியதாக தெரியவில்லை.இந்த யானைகளுக்கு, விஷம் வைத்து கொன்றிருக்கலாம் என, வனத் துறையினர் சந்தேகிக்கின்றனர். இறந்துள்ள யானைகள், 4 முதல், 20 வயதுக்குட்பட்டவை. இவ்வாறு இறந்த தாய் யானையை, அதன் குட்டி யானை எழுப்ப முயன்றதையும், அதை சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருந்ததையும், வேதனையுடன் வனத் துறையினர் பார்க்க நேரிட்டது.மருத்துவ ஆய்வுக்குப் பின்னரே, யானைகள் இறப்பு குறித்த விவரம் தெரியவரும்.




வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து (4)
maravan - dublin,அயர்லாந்து
30-ஜன-201318:53:26 IST Report Abuse
maravan அந்த குழந்தை யானை அம்மா யானை தூங்குவதாக நினைத்து எழுப்புகிறது...தாய் அன்புக்கு நிகர் வேறேது..
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
தமிழ் குடிமகன் - போயஸ்கார்டன் ,இத்தாலி
30-ஜன-201316:03:46 IST Report Abuse
தமிழ் குடிமகன் தாயை இழந்த தனயனை யார் காப்பது ,,,,,,,,,,,,,,,,,
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Thamilan - Durban S A  ( Posted via: Dinamalar Android App )
30-ஜன-201308:00:17 IST Report Abuse
Thamilan உலகம் முழுவதும் வனவிலங்குகளை வேட்டையாடி வருகிறது வனங்களை சூறையாடுகிறது இப்படி செய்யும் மனிதகுல விரோதி்களுக்கு எதி்ராக கடுமையான சட்டங்கள் வேண்டும்
Rate this:
0 members
0 members
4 members
Share this comment
Guru - Batam,இந்தோனேசியா
30-ஜன-201306:57:09 IST Report Abuse
Guru நடத்துவதை அறியாத மழலை.. காணும்போதே நெஜ்ஜம் கனக்கிறது
Rate this:
0 members
0 members
15 members
Share this comment

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

அன்புள்ள வாசகர்களே!,

நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.