கோலாலம்பூர்: அபூர்வ இனத்தைச் சேர்ந்த குள்ள யானைகள், அடுத்தடுத்து பலியானது குறித்து, மலேசிய வனத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.மலேசியா, போர்னியோ தீவில், சாம்பா மாகாணத்தில், குங்யங் ராரா வனப்பகுதி உள்ளது. இங்கு, அபூர்வ வகை குள்ள யானைகள் காணப்படுகின்றன.உலகில், இவ்வகையை சேர்ந்த, 1,500 யானைகள் மட்டுமே உள்ளன. இந்நிலையில், குங்யங் ராரா வனப்பகுதியில், சமீபத்தில், 10 யானைகள் மர்மமான முறையில் இறந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த யானைகளை, யாரும் சுட்டுக் கொன்று தந்தங்களை திருடியதாக தெரியவில்லை.இந்த யானைகளுக்கு, விஷம் வைத்து கொன்றிருக்கலாம் என, வனத் துறையினர் சந்தேகிக்கின்றனர். இறந்துள்ள யானைகள், 4 முதல், 20 வயதுக்குட்பட்டவை. இவ்வாறு இறந்த தாய் யானையை, அதன் குட்டி யானை எழுப்ப முயன்றதையும், அதை சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருந்ததையும், வேதனையுடன் வனத் துறையினர் பார்க்க நேரிட்டது.மருத்துவ ஆய்வுக்குப் பின்னரே, யானைகள் இறப்பு குறித்த விவரம் தெரியவரும்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.