மத்திய அமைச்சர் அழகிரியின் பிறந்த தினத்தை ஒட்டி, அவரை நேரில் சந்தித்து வாழ்த்து சொல்வதற்கு, தி.மு.க., தலைவர் கருணாநிதி, பொருளாளர் ஸ்டாலின் ஆகியோர் மதுரைக்கு செல்லவில்லை என, அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மதுரையில், இன்று மத்திய அமைச்சர் அழகிரியின் பிறந்ததினத்தை ஒட்டி, ஏழைகளுக்கு, பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன. தென் மண்டல, தி.மு.க., தொண்டர்களிடம், அழகிரி வாழ்த்துக்களை பெறுகிறார்.தி.மு.க., தலைவர் கருணாநிதி மற்றும் பொருளார் ஸ்டாலின் ஆகியோர் மதுரை சென்று, அழகிரிக்கு வாழ்த்து தெரிவிப்பர் என்ற எதிர்பார்ப்பு கட்சியினர் மத்தியில் எழுந்திருந்தது.இந்நிலையில், தி.மு.க., பொருளாளர் ஸ்டாலினை விமர்சித்து, அழகிரி ஆதரவாளர்கள் பரபரப்பான, "பஞ்ச்' வசனங்கள் கொண்ட போஸ்டர்களை, சென்னையில் ஒட்டியது, கருணாநிதிக்கு அதிருப்தியை அளித்துள்ளது. இதனால், இன்று மதுரையில் நடக்கும் அழகிரி பிறந்த தினவிழாவிற்கு, கருணாநிதி செல்லவில்லை எனக் கூறப்படுகிறது.
அதேபோல், நேற்று முன்தினம் டில்லியிலிருந்து, சென்னைக்கு திரும்ப இருந்த ஸ்டாலினின் பயண திட்டம், கடைசி நேரத்தில் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. அவர், டில்லியில் கூடுதலாக இரு நாட்கள் தங்கியிருந்து, "டெசோ' தீர்மானங்களை, ஐ.நா., சபை உறுப்பு நாடுகளின் தூதர்களிடம் வழங்க திட்டமிட்டுள்ளார். ஸ்டாலின் இன்று காலை டில்லியில் இருப்பதால், அழகிரியின் பிறந்த தின விழாவிற்கு அவரும் செல்லவில்லை. மதுரையில் உள்ள ஸ்டாலின் ஆதரவாளர்களும், அழகிரியின் முன்னாள் ஆதரவாளர்கள் சிலர், ரகசியமாக கூட்டம் நடத்தி, அழகிரி பிறந்த தின விழாவை, புறக்கணிக்க முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
- நமது நிருபர் -
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.