Advertisement
" மைனரையும் தூக்கிலிட வேண்டும்!' : மருத்துவ மாணவியின் தந்தை ஆவேசம்
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
ஆல்பம்
பதிவு செய்த நாள் : ஜனவரி 30,2013,00:00 IST
மாற்றம் செய்த நாள் : ஜனவரி 30,2013,01:02 IST

லக்னோ:""என் மகளை, பாலியல் பலாத்காரம் செய்த ஆறு பேரில் ஒருவன், மைனர் என்பதால், அவனுக்கு குறைந்தபட்ச தண்டனை வழங்க கூடாது; அவனையும் தூக்கில் போட வேண்டும்,'' என, பாலியல் பலாத்காரத்தால் உயிரிழந்த, டில்லி மாணவியின் தந்தை, ஆவேசமாக தெரிவித்துள்ளார்.

டில்லியில், பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, கொல்லப்பட்ட, மருத்துவ மாணவியின் தந்தை கூறியதாவது:என் மகளை, பாலியல் பலாத்காரம் செய்து, கொலை செய்தவர்களில் ஒருவன், மைனர் என, சிறார் நீதி வாரியம் அறிவித்துள்ளது. இதனால், குற்றம் நிரூபிக்கப்பட்டால், மூன்று ஆண்டு மட்டுமே, அவனுக்கு தண்டனை கிடைக்கும்.கோர்ட்டின் இந்த அறிவிப்பு, துரதிருஷ்டவசமானது. அந்த நபர், வயதில் சிறுவனாக இருந்தாலும், மிக கொடிய குற்றத்தை செய்துள் ளான். வயதை அடிப்படையாக வைத்து, அவனுக்கு கருணை காட்டக் கூடாது. அதிகபட்ச தண்டனையாக, அவனுக்கு, தூக்கு தண்டனை வழங்க வேண்டும்.

தூக்கு தண்டனைக்கு குறைந்து, அவனுக்கு, வேறு எந்த தண்டனை கொடுத்தாலும், அதை எதிர்ப்போம். இந்த வழக்கில் தொடர்புடைய, மற்ற குற்றவாளிகளுக்கு என்ன தண்டனை கொடுக்கப்படுகிறதோ, அதே தண்டனையைத் தான், இவனுக்கும் கொடுக்க வேண்டும்.சிறார் நீதி வாரிய உத்தரவை எதிர்த்து, விரைவில், மேல் முறையீடு செய்யவுள்ளோம். இதற்காக, சட்ட நிபுணர்களுடன் ஆலோசித்து வருகிறோம். சிறார் வயது வரம்பை குறைக்க, சட்ட திருத்தம் செய்ய வேண்டும். இதற்கு மத்திய அரசு, நடவடிக்கை எடுக்க வேண்டும்.பள்ளிச் சான்றிதழில் குறிப்பிட்ட பிறந்த தேதியின் அடிப்படையில், அவனை, மைனராக, சிறார் கோர்ட் அறிவித்துள்ளது. பள்ளிச் சான்றிதழில், மோசடி செய்ய, வாய்ப்புள்ளது அல்லவா?இவ்வாறு அவர் கூறினார்.




வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து (13)
krithiga - piscataway,யூ.எஸ்.ஏ
30-ஜன-201307:56:43 IST Report Abuse
krithiga absolutely correct.that guy should get hanging death sentence
Rate this:
2 members
0 members
13 members
Share this comment
ஆரூர் ரங - chennai,இந்தியா
30-ஜன-201307:28:38 IST Report Abuse
ஆரூர் ரங மைனர்களை வைத்து பயங்கரவாத செயல்கள் புரிவதும் அதிகரித்து வருகிறது. இதற்காக அவர்கள் மத பாடசாலைகளில் மூளைச் சலவை செய்யப்பட்டு தயார் செய்யப்படுகிறார்கள் இந்தப் பள்ளிகளை மூடும்வரை மைனர்களை தவறாகப் பயன்படுத்துவதும் குறையப் போவதில்லை .மைனர்கள் என்பதால் மாட்டிக்கொண்டாலும் சில நாள் சீர்திருத்தப்பள்ளி வாசத்துக்குப்பிறகு, அவர்களை மீண்டும் பிற தீவீரவாத சிறுவர்களுக்கு பயிற்சி கொடுக்கப் பயன்படுத்துகின்றனர். எனவே பயங்கரவாதத்தில் ஈடுபடும் சிறார்களை நிர்ந்தரமாக தனிமை சிறையிலடைக்கவேண்டும்
Rate this:
8 members
1 members
47 members
Share this comment
mangai - madurai,இந்தியா
30-ஜன-201306:53:18 IST Report Abuse
mangai மற்ற 5 பேருக்கு தூக்கு கிடைக்குதா என்று பாப்போம்.. இப்போது உள்ள சட்டத்தின் ஓட்டை படி அதுவே கஷ்டம் தான்..
Rate this:
2 members
1 members
40 members
Share this comment
Karuthu kanappuran - Chennai,இந்தியா
30-ஜன-201305:55:54 IST Report Abuse
Karuthu kanappuran அவர் கூறுவது முற்றிலும் ஏற்றுகொள்ளகூடியது, அவனை அப்பொழுதே நான்கு முனை சந்தியில் வைத்து நறுக்கிருக்க வேண்டும், வயதை பார்க்காமல் கொடிய குற்றம் செய்துள்ளான் அதை பாருங்கள்.
Rate this:
1 members
0 members
40 members
Share this comment
N.Purush Bharatwaj - Cuddalore,இந்தியா
30-ஜன-201305:31:52 IST Report Abuse
N.Purush Bharatwaj காமக்கொடூரனுக்கெல்லாம் மைனர் ,மேஜர்ன்னு சொல்லி கடும் தண்டனையிலிருந்து தப்பிக்க வைக்க கூடாது....
Rate this:
0 members
0 members
42 members
Share this comment
Natchammai Mahesh - canton,யூ.எஸ்.ஏ
30-ஜன-201305:20:45 IST Report Abuse
Natchammai Mahesh அவன் என்ன சிறுவர்கள் செய்யும் குற்றமா செய்திருக்கிறான், எல்லா குற்றவாளிகளுக்கும் கொடுக்கப்படும் தண்டனைதான் அவனுக்கும் தரப்பட வேண்டும். இதெல்லாம் பிஞ்சுலேயே பழுத்தது, இதெல்லாம் உயிரோட இருந்து என்ன செய்ய, தூக்கு தண்டனைதான் சரி.
Rate this:
0 members
0 members
44 members
Share this comment
Baskaran Kasimani - Singapore,சிங்கப்பூர்
30-ஜன-201305:10:05 IST Report Abuse
Baskaran Kasimani "சிறுவன்" என்ற அடைமொழி சரியாகாது. சிறுவன் செய்கிற காரியமா செய்தான் அவன்?
Rate this:
1 members
1 members
32 members
Share this comment
Sincere Sigamani - Los Angeles,யூ.எஸ்.ஏ
30-ஜன-201304:51:11 IST Report Abuse
Sincere Sigamani ஒரு பெண்ணை கொஞ்சம் கூட மதிக்காமல் குப்பைபோல் மிதித்துவிட்டு இன்று சிறுவன் என்று தப்ப பார்க்கிறான். அதிகபட்ச தண்டனை தான் சரியான தீர்ப்பு.
Rate this:
1 members
0 members
50 members
Share this comment
vasu - hyderabad,இந்தியா
30-ஜன-201302:49:05 IST Report Abuse
vasu முதலில் சட்டத்தை மாற்றுங்கள். இவ்வளவு எதிர்ப்பு, போராட்டம் இருந்தும் அந்த வெறியனுக்கு என்ன சிறுவன் என்ற பட்டம். முதலில் இவனை தான் தூக்கில் தொங்க விடணும்.
Rate this:
1 members
0 members
35 members
Share this comment
navaneethan - பெங்களூரு,இந்தியா
30-ஜன-201302:46:04 IST Report Abuse
navaneethan சிறிய செடியாக இருந்தாலும், முள் செடி முள் செடிதான்.. அதில் ரோஜாபூ பூக்காது. வளந்துட்டா வெட்டுறது சிரமம். சிறுவர் சீர்திருத்த பள்ளியில் சேர்த்தால் அவன் நல்லவன் ஆகி விடுவானா? இன்னும் "தொழிலை" நன்றாக கற்றுக்கொண்டு வெளியே வருவான். அதனால், இந்த மைனர் குஞ்சை சுட்டுவிடவும்.
Rate this:
1 members
0 members
53 members
Share this comment

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

அன்புள்ள வாசகர்களே!,

நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.