மேச்சேரி: மேச்சேரி பட்டாசு ஆலை விபத்தில், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிறுவன், நேற்று உயிரிழந்தான்; இதையடுத்து, பலி எண்ணிக்கை, 13 ஆக உயர்ந்தது. சேலம் மாவட்டம், மேச்சேரி அடுத்த செங்காட்டூரில் சாந்தி என்பவர், பட்டாசு ஆலை நடத்தி வந்தார். கடந்த, டிச., 25ல் நடந்த பயங்கர வெடி விபத்தில், உரிமையாளர் சாந்தி, அவரது மகன் சூர்யா, தொழிலாளிகள் மூவர் என, ஐந்து பேர், சம்பவ இடத்தில் உடல் சிதறி பலியாயினர்.
ஆபத்தான நிலையில், சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மூவர், அதே நாளில் உயிரிழந்ததை அடுத்து, பலி எண்ணிக்கை, எட்டாக உயர்ந்தது. அடுத்தடுத்து, நான்கு பேர் பலியாயினர். தனியார் மருத்துவமனையில், ஒரு மாதத்துக்கும் மேலாக அனுமதிக்கப்பட்டிருந்த, மனோஜ்குமார் என்ற, 12 வயது சிறுவன், நேற்று பரிதாபமாக இறந்தான். இதையடுத்து, பலி எண்ணிக்கை, 13 ஆக உயர்ந்தது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.