ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்ட மறுவாழ்வு அலுவலகத்தில் தொழில் பயிற்சிக்கு வந்த மாற்றுத்திறனாளியை டீ, வடை, தண்ணீர் பாட்டில் வாங்க, அலைகழிக்கும் கொடுமை அரங்கேறி வருகிறது. கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள இந்த அலுவலகத்தில், 30க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள்,"பினாயில்' தயாரிப்பு, தையல் பயிற்சி பெறுகின்றனர். பேச இயலாத நபர்களிடம், துண்டுத் தாளில் "டீ, வடை, தண்ணீர் பாட்டில்' என, எழுதிக் கொடுத்து அனுப்புகின்றனர்.
நேற்று, டீ கடைக்கு சென்ற மாற்றுத்திறனாளி குணசேகரபாண்டி கூறுகையில், ""புல்லங்குடியில் இருந்து, பயிற்சிக்காக வருகிறேன். அலுவலகத்தில் டீ, பிஸ்கட் வாங்கி வர, கடைக்கு அனுப்பினர்,'' என்றார்.
மாவட்ட மறுவாழ்வு அலுவலர் ராமகிருஷ்ணன் கூறியதாவது: ஊழியர்கள் யாரும், மாற்றுத்திறனாளிகளை கடைக்கு அனுப்புவது கிடையாது. பயிற்சிக்கு வந்தவர்கள், சொந்த தேவைக்காக, டீ வாங்க சென்றிருக்கலாம், என்றார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.