நாகப்பட்டினம்: நீலம் புயல் ,மழையால் பாதித்தோருக்கு, நிவாரணம் வழங்காததை கண்டித்து, நாகை அருகே கிழக்கு கடற்கரை சாலையில், மக்கள் மறியலில் ஈடுபட்டதால், ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கடந்த ஆண்டு அக்., மாதம், தமிழகத்தை தாக்கிய நீலம் புயலால், நாகை மாவட்டத்தில் கன மழை கொட்டியது. இதில், தண்ணீரால் சூழப்பட்ட, கீழையூர் ஒன்றியம் சிந்தாமணி கிராமத்தைச் சேர்ந்த, 475 குடும்பத்தினர் தலைஞாயிறு அரசு மேல்நிலைப்பள்ளியில் மூன்று நாட்கள் தங்க வைக்கப்பட்டனர். கனமழையால் பாதித்த, பகுதி சேதமடைந்த குடிசை வீடுகளுக்கு ,2,500 ரூபாய் அரசு சுõர்பில் நிவாரணம் அறிவித்து, வழங்கப்பட்டது. நிவாரணத் தொகை, தங்கள் கிராமத்திற்கு வழங்கவில்லை. நிவாரணத் தொகையை உடன் வழங்க கோரி, சிந்தாமணி கிராமத்தைச் சேர்ந்த, 60 பெண்கள் உட்பட 200 பேர், நேற்று காலை 10:00 மணிக்கு, நாகை-தூத்துக்குடி இ.சி.ஆர்.,சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
சம்பவ இடத்திற்கு வந்த பி.டி.ஓ.,ரவிச்சந்திரன், நிவாரணம் கிடைப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததால், கிராம மக்கள் மறியலை காலை 11:00 மணிக்கு விலக்கிக் கொண்டனர். ஒரு மணி நேரம் நடந்த மறியலால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.