சென்னை: "நடிகர் கமல் நடித்துள்ள, "விஸ்வரூபம்' படத்துக்கு, தடை விதிக்க முடியாது' என, சென்னை ஐகோர்ட் நேற்று உத்தரவு பிறப்பித்தது. "விஸ்வரூபம்' படத்தை, தமிழக தியேட்டர்களில் திரையிட, 15 நாட்களுக்குத் தடை விதித்து, மாவட்ட கலெக்டர்கள் உத்தரவிட்டிருந்தனர். இதை எதிர்த்து, "ராஜ்கமல் பிலிம்ஸ்' சார்பில், சென்னை ஐகோர்ட்டில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு, நீதிபதி வெங்கட்ராமன் முன், நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில், மூத்த வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் ஆஜரானார். அரசு சார்பில், அட்வகேட்-ஜெனரல் நவநீதகிருஷ்ணன் வாதாடினார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, வெங்கட்ராமன், இரவு, 10:15 மணியளவில் பிறப்பித்த உத்தரவில், "விஸ்வரூபம்' படத்திற்கு, தமிழக அரசு விதித்திருந்த, இரண்டு வார தடை நீக்கப்படுகிறது. தமிழகம் முழுவதும் படத்தை திரையிட எந்த தடையும் இல்லை' என தெரிவித்தார். முஸ்லிம் அமைப்புகள் சார்பில், வழக்கறிஞர் சங்கரசுப்பு ஆஜரானார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
நேற்றிரவு ஒரு தொலைக்காட்சி பேட்டியில், கமலஹாசன் என்ற தனி மனிதர் என்று அட்வகேட் ஜெனெரல் குறிப்பிட்டிருந்தார். உயர்நீதிமன்ற தீர்ப்பு எதுவாயினும் மக்கள் மனதில் குடிகொண்டிருக்கும் எண்ணம் / உண்மை நிலை என்னவென்றால், களத்தூர் கண்ணம்மாவில் அந்த சிறுவன் மேல் ஏற்பட்ட அனுதாபமும், அக்காலகட்டத்தில் சினிமா தியேட்டர்களில் அம்மாவும் நீயே பாடல் காட்சியை கண்டு கண்ணீர் விட்டவர்களும் கமல் மேல் உள்ள அனுதாபத்தை மாற்றிக்கொள்ள மாட்டார்கள். இன்றளவும் அது மக்கள் மனதில் பதிந்து விட்டது, கமல் அனைவரின் அன்பிற்கு உரியவரே தவிர, தவறிழைப்பவர் அல்லவென்று.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.