சிவகங்கை: சிவகங்கையில், பட்டா மாற்றித்தர, 300 ரூபாய் லஞ்சம் பெற்றதாக, கைது செய்யப்பட்ட, சர்வேயருக்கு, 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து, சிவகங்கை கோர்ட் உத்தரவிட்டது. சிவகங்கை, மீனாட்சி நகர் சாஸ்திரி தெருவை சேர்ந்தவர் தட்சிணாமூர்த்தி. மேல வாணியங்குடியில் இடம் வாங்கியுள்ளார். அந்த இடத்திற்கு, பட்டா மாறுதல் கேட்டு, 2000 டிச.,5 ல், சிவகங்கை தாசில்தாரிடம் விண்ணப்பித்தார். சர்வேயர் கிருஷ்ணமேனனுக்கு, தாசில்தார் பரிந்துரைத்தார். இந்நிலையில், பட்டா மாறுதல் செய்ய 800 ரூபாய் லஞ்சம் கேட்டார். டிச.,7 ல், சிவகங்கை லஞ்ச ஒழிப்பு போலீசில், தட்சிணாமூர்த்தி புகார் செய்தார். லஞ்சம் பெற்ற சர்வேயரை, இன்ஸ்பெக்டர் முகமதுயாசின் தலைமையிலான போலீசார் கைது செய்தனர். வழக்கு விசாரணை, தலைமை குற்றவியல் கோர்ட்டில் நடந்தது. கிருஷ்ணமேனனுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை, 3,000 ரூபாய் அபராதம் விதித்து, நீதிபதி கருப்பையா உத்தரவிட்டார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.