Advertisement
எலி பிரியாணி: பக்தர்களுக்கு வழங்கியது ரயில்வே நிர்வாகம்
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
ஆல்பம்
பதிவு செய்த நாள் : ஜனவரி 30,2013,03:00 IST
மாற்றம் செய்த நாள் : ஜனவரி 30,2013,10:37 IST

அகமதாபாத்: காஷ்மீர் மாநிலத்தில் உள்ள வைஷ்ணவி தேவி கோவிலுக்கு சென்று திரும்பிய பக்தர்களுக்கு ரயிலில், எலி பிரியாணியை வழங்கியது ரயில்வே நிர்வாகம்.

குஜராத் மாநிலத்தை சேர்ந்த ஆசிரியர் நிலேஷ்படேல் தனது மனைவி வீணா மற்றும் இரண்டு மகன்களுடன் வைஷ்ணவி தேவி கோவிலுக்கு சென்று விட்டு சொந்த ஊருக்கு சர்வோதயா ரயிலில் திரும்பிக் கொண்டிருந்தார்.
ரயிலில் உள்ள உணவகத்தில் மூன்று வெஜ் பிரியாணிக்கு ஆர்டர் செய்திருந்தார், ஒரு பார்சலை பிரித்து உண்ண தயாரான போது அதில் எலி ஒன்று இருந்ததை கண்டு அதிர்‌ச்சியடைந்தார். இதனையடுத்து மீண்டும் வேறு ஒரு பார்சலுக்கு ஆர்டர் தந்தார். ஆனால் அதற்குள் விஷயம் கேள்விப்பட்ட மற்ற பயணிகள் கோபத்துடன் தங்கள் செல்போனில் ‌எலி கிடந்த பார்சலை சாட்சியாக படமெடுத்து வைத்து கொண்டனர். தொடர்ந்து ரயில்வே ஊழியர்களுக்கும் பயணிகளுக்கும் இடையே ஏற்பட்ட தகராறை அடுத்து ரயில்வே போலீசார் இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தினர்.
பின்னர் ரயில் புதுடில்லிக்கு வந்து சேர்ந்த போது ரயில்வே உணவக மேலாளருக்கு முறைப்படி புகார் மனு அளித்தார் நிலேஷ்படேல். தொடர்ந்து உணவக மேலாளர் பயணிகளுக்கு ஏதேனும் உடல் நல குறைவு ஏற்பட்டால் அதற்கு தான் பொறுப்பேற்று ‌கொள்வதாக மன்னிப்பு கடிதம் எழுதி தந்‌ததையடுத்து பிரச்னை முடிவுக்கு வந்தது.




வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து (1)
Guru - Batam,இந்தோனேசியா
30-ஜன-201306:35:43 IST Report Abuse
Guru ரயில் சமையல் அறைகளை அதிகரிக்க ஒருதிட்டமும், ரயில் உணவின் விலையேற்றத்தை பற்றிய செய்தியும் சமிபத்தில் படித்த நியாபகம்
Rate this:
0 members
0 members
15 members
Share this comment

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

அன்புள்ள வாசகர்களே!,

நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.