மெல்போர்ன் : ஆஸ்திரேலியாவின் உயரிய விருதான ஆடர் ஆப் ஆஸ்திரேலியா மெடல்(ஓஏஎம்) என்ற விருதினை இந்த ஆண்டு பெறுபவர்களின் பட்டியலை அந்நாட்டு நிர்வாகம் வெளியிட்டுள்ளது. இதில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கிருஷ்ணா அரோரா(85) இடம் பெற்றுள்ளார். இந்திய சமூகத்தினருக்காக அவர் புரிந்த சமூக தொண்டிற்காக இந்த விருது அவருக்கு வழங்கப்பட உள்ளது. டில்லியில் உள்ள கேட்ரிங் கல்லூரி ஒன்றில் முதல்வராக பணியாற்றிய அரோரா, ஆஸ்திரலியாவிற்கு தான் முதல் முறையாக வந்த போது தனிமையை உணர்ந்ததாகவும், ஆஸ்திரேலியர்களின் பொழுதுபோக்கு சமூக தொண்டு என்பதை தெரிந்து தானும் அதனை செய்ய முடிவு செய்ததாகவும் தெரிவித்தார். தொலைபேசி மூலம் சமையல் குறிப்புக்கள் உள்ளிட்ட உதவிகளை வழங்கி வரும் இவர் அனைவராலும் ஆன்டிஜி என்றே அழைக்கப்படுகிறார். இவர் கடந்த 2 ஆண்டுகளாக ஆஸ்திரேலியர்களுக்கு ஆசிய சமையல் குறித்து பயிற்சி அளித்து வருகிறார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.