மதுரை: கமல் தமிழகத்தை விட்டு வெளியேறினால் தங்களது ரேஷன் கார்டை அரசிடம் ஒப்படைப்போம் என கமல் ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக மதுரையில் கமல் ரசிகர்கள் கூறுகையில், "நடிகர் கமல் விஸ்வரூபம் படத்தை அதிக பொருட்செலவில் தயாரித்துள்ளார். இதை முஸ்லிம்கள் சிலர் எதிர்த்து வருகின்றனர். அவர்களும் படம் பார்த்தால் எதிர்ப்பு தெரிவிக்க மாட்டார்கள். விஸ்வரூபம் படம் தொடர்பாக இன்று பேட்டியளித்த கமல், தமிழகத்தை விட்டு வெளியேறப் போவதாக தெரிவித்துள்ளார். அவர் தமிழகத்தை விட்டு வெளியேறும் பட்சத்தில் நாங்கள் எங்கள் ரேஷன் கார்டை அரசிடம் ஒப்படைப்போம்" என்று தெரிவித்தனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.