Advertisement
காற்றில் பறந்ததா ரயில்வே பட்ஜெட் அறிவிப்புகள்?
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
ஆல்பம்
பதிவு செய்த நாள் : ஜனவரி 30,2013,23:53 IST
மாற்றம் செய்த நாள் : பிப்ரவரி 01,2013,00:22 IST

மத்திய ரயில்வே பட்ஜெட்டில், கடந்தாண்டு அறிவிக்கப்பட்ட, சென்னை சென்ட்ரல் - பெங்களூரு இரண்டடுக்கு, "ஏசி' ரயில் உட்பட, முக்கிய நகரங்கள் இடையே, மூன்று எக்ஸ்பிரஸ் ரயில்கள் மற்றும் 14 பாசஞ்சர் ரயில்கள், இன்னும் இயக்கப்படவில்லை.

நிறைவேற்றப்படுமா?


அடுத்த ரயில்வே பட்ஜெட், அடுத்த மாதம், 26ம் தேதி தாக்கலாக உள்ள நிலையில், பழைய அறிவிப்புகள் நிறைவேற்றப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.கடந்தாண்டு ரயில்வே பட்ஜெட்டில், சென்னை சென்ட்ரல் - பெங்களூரு இடையே, இரண்டு அடுக்கு "ஏசி' எக்ஸ்பிரஸ் ரயில் (டபுள் டெக்கர்) இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த ரயிலுக்கான பெட்டிகள் தயாரிப்பு தாமதமாகியுள்ளதால், பட்ஜெட்டுக்கு முன், இந்த ரயிலை இயக்க வா#ப்பில்லை என, கூறப்படுகிறது.

பாசஞ்சர் ரயில்கள்:


மதுரையிலிருந்து, ஆந்திராவில் உள்ள காச்சிக்குடாவிற்கு, வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயிலும், கர்நாடக மாநிலம் யஷ்வந்த்பூரிலிருந்து, கேரள மாநிலம் கொச்சுவேலிக்கு, "ஏசி' எக்ஸ்பிரஸ் ரயிலும் இயக்கப்படும் என, தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த ரயில்கள் இன்னும் இயக்கப்படவில்லை. விழுப்புரம் - காட்பாடி, மயிலாடுதுறை - திருவாரூர், திருநெல்வேலி - செங்கோட்டை இடையே, தினசரி தலா, இரண்டு ஜோடி பாசஞ்சர் ரயில்கள், விழுப்புரம் - மயிலாடுதுறை இடையே, ஒரு ஜோடி பாசஞ்சர் ரயில்களும் இயக்கப்படும் என, ரயில்வே பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது.கேரள மாநிலத்தில், திருச்சூர் - எர்ணாகுளம் மற்றும் பாலக்காடு - ஈரோடு இடையே, தலா ஒரு ஜோடி பாசஞ்சர் ரயில்கள் இயக்கப்படும் என்ற அறிவிப்பும் நிறைவேறவில்லை.

நீட்டிக்கப்படாத ரயில்கள்:


சென்னை - டேராடூன், வாராந்திர எக்ஸ்பிரஸ், மதுரை வரை நீட்டிக்கப்படும் எனவும், கன்னியாகுமரி - புதுடில்லி இடையே இயக்கப்படும் வாராந்திர, திருக்குறள் எக்ஸ்பிரஸ் இரண்டு நாட்கள் இயக்கப்படும் எனவும், பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது.திருவனந்தபுரம் - பெங்களூரு இடையே, வாரத்தில் மூன்று நாட்கள் இயக்கப்படும் எக்ஸ்பிரஸ், தினசரி ரயிலாக மாற்றப்படும் என, தெரிவிக்கப்பட்டிருந்தது. இவையும், அறிப்பாகவே உள்ளது.

இந்த ஆண்டிலாவது?


விழுப்புரம் - கோரக்பூர் இடையே, வாரத்தில் ஒரு நாள் இயக்கப்படும் எக்ஸ்பிரஸ், இரண்டு நாட்கள் இயக்கப்படும் என, அறிவிக்கப்பட்டிருந்தும், இரண்டு நாட்களாக இன்னும் மாற்றப்படவில்லை.கடந்த ஆண்டு ரயில்வே பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட ரயில்கள் இயக்கம், தாமதமாகி உள்ள நிலையில், இந்த ஆண்டு ரயில்வே பட்ஜெட்டில் தமிழகத்திற்கு உரிய முக்கியத்துவம் கிடைக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

- நமது நிருபர் -




வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து (9)
K SRINIVASAN - chennai,இந்தியா
31-ஜன-201314:37:22 IST Report Abuse
K SRINIVASAN ஒத்தையடி பாதையை போல சிங்கள் லைன் வைத்துகொண்டு எப்படி சார் இத்தனை ரயில் விட முடியும்.எப்போது டபுள் லைன் வருதோ அப்பதான் நமக்குM விடிவுகாலம்.
Rate this:
0 members
0 members
2 members
Share this comment
பட்டிகாட்டான் - சென்னை ,இந்தியா
31-ஜன-201311:24:25 IST Report Abuse
பட்டிகாட்டான்   நாங்க சொல்றத செய்ய மாட்டோம் .......... செய்யறத சொல்ல மாட்டோம் ....... எப்புடி
Rate this:
0 members
0 members
3 members
Share this comment
Sanghimangi - Mumbai,இந்தியா
31-ஜன-201311:00:45 IST Report Abuse
Sanghimangi மும்பை (தாதர்) - திருநெல்வேலி, 22629/22630 வண்டியும் கடந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு இன்னமும் இயக்கப்படவில்லை. இடையில் சிறிது காலம் சிறப்பு வண்டியாக புது பெட்டிகளுடன் இது சென்று வந்தது. இதை வழக்கமான ரயிலாக இயக்க மூன்று அடுக்கு குளிர்சாதன பெட்டி ஒன்று இல்லை என்ற காரணத்தால் தாமதம் செய்து வந்தனர். தற்போதோ, இந்த சிறப்பு ரயிலும் காணாமல் போய் விட்டது. எல்லாம் எவனுக்கு தெரியும்?
Rate this:
0 members
0 members
4 members
Share this comment
Raj - Chennai,இந்தியா
31-ஜன-201307:42:19 IST Report Abuse
Raj இப்பவும் சொல்றேன் அறிவிக்கப்பட்ட ரயில்கள் இயக்கப்படும் சொன்ன சொல் மாரமாட்டோம்ல
Rate this:
0 members
0 members
4 members
Share this comment
கோமனத்தாண்டி - கோயமுத்தூரு,இந்தியா
31-ஜன-201307:27:27 IST Report Abuse
கோமனத்தாண்டி வேட்டி,,சேலையோ தெரியாது, தமிழன் பிரதமர் ஆனால் நடக்கும்
Rate this:
1 members
0 members
7 members
Share this comment
villupuram jeevithan - villupuram,இந்தியா
31-ஜன-201309:55:17 IST Report Abuse
villupuram jeevithanவேட்டி வந்தால் நடக்காது. தமிழகத்தின் நலன் மீது அக்கறை இருக்காது, இப்போது போலத்தான். ...
Rate this:
2 members
0 members
7 members
Share this comment
Loganathan - Madurai,இந்தியா
31-ஜன-201304:11:10 IST Report Abuse
Loganathan தமிழகத்தில் இரட்டை பாதை பணிகள் முடிந்தபிறகு இயக்கப்படும் என்று அறிவித்திருக்கலாம்
Rate this:
0 members
0 members
1 members
Share this comment
செந்தமிழ் கார்த்திக் - NamakkaL to ChennaI,இந்தியா
31-ஜன-201300:35:17 IST Report Abuse
செந்தமிழ் கார்த்திக் கனவு காணுங்கள் என்று கலாம் சொன்னது ரொம்ப தப்பா போச்சி... . ரயில்வே பட்ஜெட் பேப்பர் ??? எல்லாம் இந்நேரம் பழைய பேப்பருக்கு :P
Rate this:
0 members
0 members
15 members
Share this comment
Nagarajan.Su - Chennai,இந்தியா
31-ஜன-201307:31:02 IST Report Abuse
Nagarajan.Su கனவு காணுங்கள் என்று திரு அப்துல் கலாம் சொன்னது சரியே. தமிழக ரயில்வே திட்டங்களும் அறிவிப்புகளும் வெறும் கனவாகவே ஆகிறது. நிஜமாகவில்லையே...
Rate this:
0 members
0 members
8 members
Share this comment

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

அன்புள்ள வாசகர்களே!,

நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.