சென்னை: ஒரு முதல்வராக சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதே தனது முன்னுரிமை என்றும், தனக்கு நடிகர் கமல் மீது தனிப்பட்ட வெறுப்பு ஏதுமில்லை என்றும் முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
நடிகர் கமல் நடித்துள்ள விஸ்வரூபம் திரைப்படம் கடந்த 25ம் தேதி திரையிடப்படுவதாக இருந்தது. ஆனால் இத்திரைப்படம் வெளியானால் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படும் எனக்கூறி, படத்திற்கு தமிழகம் முழுவதும் மாவட்ட கலெக்டர்கள் 15 நாள் தடை விதித்து உத்தரவிட்டனர். இதை எதிர்த்து கமல் தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து தனி நீதிபதி வெங்கட்ராமன் திரைப்படத்தை பார்வையிட்டு, மாவட்ட கலெக்டர்களின் தடையுத்தரவிற்கு தடை விதித்தார். இதையடுத்து விஸ்வரூபம் திரையிடப்படும் என கமல் ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சியடைந்தனர். எனினும் சென்னை ஐகோர்ட்டில் தமிழக அரசு மேல் முறையீடு செய்தது. இதை நேற்று விசாரித்த தலைமை நீதிபதி (பொறுப்பு) எலிபி தர்மாராவ் மற்றும் அருணா ஜெகதீசன் அடங்கிய பெஞ்ச், படத்திற்கு மீண்டும் தடை விதித்து உத்தரவிட்டனர்.
இதனிடையே, சில முஸ்லிம் அமைப்புகள் நேற்று நடிகர் கமலை சந்தித்து பேசினர். அப்போது விஸ்வரூபம் படத்தில் உள்ள சில ஆட்சேபகரமான காட்சிகளை நீக்க கமல் ஒப்புக்கொண்டார். இதையடுத்து தனக்கும், தனது முஸ்லிம் நண்பர்களுக்கும் இடையே எந்த பிரச்னையும் இல்லை என தெரிவித்தார். படத்தின் சில காட்சிகளை நீக்க கமல் ஒப்புக்கொண்டதை வரவேற்ற மற்ற முஸ்லிம் அமைப்புகள், எந்த காட்சிகள் நீக்கப்படவுள்ளன என்பது குறித்து தங்களுடன் ஆலோசிக்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளன.
விஸ்வரூபம் திரைப்படம் தொடர்பாக பல்வேறு முஸ்லிம் அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்தும், நடிகர் கமல் ஒரு காட்சியைக் கூட நீக்க தயாராக இல்லை. சமரசத்துக்கும் கமல் முன்வரவில்லை. கமல் பெரிய முதலீட்டில் படம் எடுத்திருந்தாலும், அதற்கு அவரே பொறுப்பேற்க வேண்டும். படத்துக்கு அனுமதி அளித்து பெரிய கலவரம் ஏற்பட்டிருந்தால் அப்போதும் மீடியாக்கள் என்னை விமர்சித்திருக்கும். அரசு எல்லாவற்றிற்கும் பொறுப்பேற்க முடியாது. இருதரப்பும் சுமூகமாக பேசி இப்பிரச்னையை தீர்த்துக் கொள்ள முன்வந்தால், தமிழக அரசு அதற்கு உறுதுணையாக இருக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
Karunanidhi behaves like a third rated politician.. His statement and guidance to Kamal Hasan is also responsible for making the issue big.It is high time Karunanidhi should shut his mouth in this kind of sensitive issues which could even cost lives in due course. Karunanidhi "s attempt to turn the people support once again exposed and proving to be a failure..A leader who has been a CM for five times of the state talks in such a unjustifiable manner and even after totally got routed in the last election behaves like a "Koothula Komaali" ..( a street commedian)
ஜெயலலிதா எடுத்த முடிவு மிகவும் சரியானது. யார்யாரெல்லாம் கடந்த 2-3 நாட்களாக முட்டாள்தனமாக அறிவுகட்டதனமாக பேச தகுதி இல்லாத அரடிக்க்கட் எல்லோரும் இப்பொழுது சிந்தித்து பதில் கூரிஆகவெண்டும்.. மக்கள் தான் முக்கியம். அப்படி மக்களுக்கு ஆபத்து வந்தால் கலவரம் வெடித்து கமல் தன் விரலை கூட ஆட்டமுடியாது.. ஜெயலலிதா அம்மையார் கடந்த தேர்தலில் மக்கள் தேர்டு எடுத்தது அவருடைய சிறப்பான சட்டம் ஒழுங்கு தான் ஒரு முக்கிய காரணம். இந்த விசயத்தில் எந்த ஒரு தலைவருக்கும் துப்பு இல்லை. உண்மையை சொல்லபோனால் இந்த கேடுகெட்ட கருணாநிதி ஒரு கலவரத்தை ஏற்படுத்த சூழ்ச்சி செய்துள்ளார். கருணாநிதியால் மக்களுக்கு உபகாரம் இல்லாவிட்டாலும் உபுத்ரம் செய்யாமல் ஒரு பெட்டி பாம்பை போல் ஒரு மூலையில் இருப்பது நல்லது..
நெஞ்சு பொறுக்குதில்லையே - இந்த
நிலை கெட்ட மனிதரை நினைத்துவிட்டால்
கொஞ்சமோ பிரிவினைகள்
ஒரு கோடி என்றால் அது பொய்யாமோ ?
அஞ்சு தலை பாம்பென்பான் அப்பன்
ஆறு தலை யென்றுமகன் சொல்லிவிட்டால்
நெஞ்சு பிரிந்திடுவார்
நெடுநாள் இருவரும் பகைத்திருப்பார்.
நெஞ்சு பொறுக்குதில்லையே - இந்த
நிலை கெட்ட மனிதரை நினைத்துவிட்டால்
முதல்வரின் இந்த பத்திருக்கையாளர் சந்திப்பு பல விஷயங்களை வெளிச்சம் போட்டு காட்டியிருக்கிறது.
1. முஸ்லீம்கள் நேர்மையாகவும், சட்டப்படியும் தங்களின் எதிர்ப்பை காட்டியிருக்கிறார்கள்.
2. தமிழர்களுக்கு உள்ள சினிமா மோகம். ஆகவே இத்தகைய பலம் வாய்ந்த ஊடகத்தை திரைப்பட துறையினர் எப்படி சமூகப் பொறுப்போடு கையாள வேண்டும் என்ற உண்மை.
3. எல்லா துறைகளையும் போல் தணிக்கை துறையிலும் எப்படி உழல் மலிந்துள்ளது என்ற உண்மை.
4. முஸ்லீம்களின் இந்த போராட்டம் பல்வேறு மொழி, நம்பிக்கைகள், கலாச்சாரங்களை கொண்ட நம் நாட்டில் கருத்து சுதந்திரம் எவ்வாறு இருக்கவேண்டும் என்ற கருத்தை மறு ஆய்வுக்கு உட்படுத்தியுள்ளது. அதனால் நம் ஜனநாயகம் முதிரவும் மற்ற நாடுகளுக்கு இது வழிகாட்டியகவும் அமையும்.
5. இந்த போராட்டத்தை இந்து முஸ்லீம் பிரச்சனையாக ஆக்க முயன்று அதில் குளிர்காய நினைத்த சமூக விரோதிகளுக்குத் தான் பின்னடைவு.
முதலில் இந்த விவகாரத்தில் முதல்வரின் போக்கு சரியல்ல என்று நான் நினைத்தேன். ஆனால் இன்று முதல்வர் கொடுத்த நீண்ட விளக்கம், அனைவரின் எல்லாக் கேள்விகளுக்கும் பதில் கொண்டுள்ளது. கமல் தரப்பு நீதிமன்றம் செல்லும் முன்பு, அரசிடம் ஒரு பேச்சுவார்த்தை நடத்திருந்தால் கூட நல்லதுதான். இப்பொழுதாவது பிரச்சனை முடிவுக்கு வந்ததால் சரி.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.