Advertisement
பதிவு செய்த நாள் : ஜனவரி 31,2013,22:59 IST
கருத்துகள் (15)
திண்டிவனம்: ஆள் மாறாட்டம் செய்து, 10ம் வகுப்பு தேர்வு எழுதியதாக தொடரப்பட்ட வழக்கில், புதுச்சேரி முன்னாள் கல்வி அமைச்சர் கல்யாணசுந்தரம் உள்ளிட்ட மூவருக்கு, இரு சட்டப் பிரிவுகளில் தலா, இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, திண்டிவனம் மாஜிஸ்திரேட் தீர்ப்பளித்தார்.புதுச்சேரி கருவடிக்குப்பத்தைச் சேர்ந்தவர் கல்யாணசுந்தரம். கடந்த சட்டசபை தேர்தலில், புதிதாக உருவாக்கப்பட்ட, காலாப்பட்டு தொகுதியில், என்.ஆர்.காங்., கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியின் அமைச்சரவையில், கல்யாணசுந்தரத்திற்கு கல்வித் துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. இவர், 2011ம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடந்த, 10ம் வகுப்பு தனித் தேர்வில், அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடங்களில் தேர்வு எழுத, திண்டிவனம் கல்வி மாவட்டத்தில் விண்ணப்பித்திருந்தார்.
திண்டிவனம் ஜெயபுரம் பகுதியில் உள்ள, தாகூர் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளி மையத்தில் தேர்வு எழுத, அவருக்கு அனுமதிக்கப்பட்டது. கல்யாணசுந்தரம், செப்., 29ம் தேதி அறிவியல் தேர்வை எழுதியதாகவும், 30ம் தேதி சமூக அறிவியல் தேர்வு எழுத வரவில்லை எனவும் புகார் எழுந்தது.
ஆனால், 29ம் தேதி கல்யாணசுந்தரம் தேர்வு எழுதவில்லை; ஆள் மாறாட்டம் செய்து, வேறு ஒருவர் தேர்வு எழுதியதாக பரபரப்பான குற்றச்சாட்டு எழுப்பப்பட்டது. அரசு உத்தரவுப்படி, ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி தலைமையிலான குழு, விசாரணை நடத்தியது.இதில், கல்யாணசுந்தரம் போலி முகவரி கொடுத்து, அடையாளச் சான்று பெற்றது தெரிய வந்தது. அந்த முகவரியில், சிங்கனூர் அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் ஆதவன் வசிப்பதும், ஆதவன், பள்ளி தலைமை ஆசிரியரிடம் விடுப்பு பெறாமல், கல்யாணசுந்தரம் தேர்வு எழுதிய அறை கண்காணிப்பாளராக பணிபுரிந்தார் என்பதும் தெரிய வந்தது.இதையடுத்து, அப்போதைய விழுப்புரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் குப்புசாமி, மாவட்ட குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் கொடுத்தார். அதில், கல்யாணசுந்தரம், ஆசிரியர் ஆதவன் மற்றும் திண்டிவனம் கல்வி மாவட்ட அலுவலக ஊழியர் ரஜினிகாந்த் ஆகிய மூவர் மீதும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இருந்தார்.அதன் பேரில், கல்யாணசுந்தரம் உள்ளிட்ட, மூன்று பேர் மீதும், எட்டு பிரிவுகளில்
போலீசில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. கல்யாணசுந்தரத்தை விசாரணைக்கு ஆஜராகும்படி, போலீசார் தரப்பில் இரண்டு முறை சம்மன் கொடுத்தும் அவர் வரவில்லை.இதையடுத்து, திண்டிவனம் முதலாவது குற்றவியல் நடுவர்நீதிமன்றம் மூலம் சம்மன் அனுப்பினர். இதன் பின், கல்யாணசுந்தரம், கோர்ட்டில் ஆஜராக உத்தரவிடப்பட்டது.இந்நிலையில், கல்யாணசுந்தரம், முதல்வர் ரங்கசாமியின் அமைச்சரவையிலிருந்து நீக்கப்பட்டார்.

மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விசாரணையில், கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்தார் கல்யாணசுந்தரம். இதைத் தொடர்ந்து, குற்றப்பிரிவு போலீசார் சார்பில், திண்டிவனம் முதலாவது மாஜிஸ்திரேட் கோர்ட்டில், குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. 2012ம் ஆண்டு செப், 5ம் தேதி முதல், சாட்சிகளிடம் விசாரணை துவங்கியது.
மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் குப்புசாமி, திண்டிவனம் கல்வி மாவட்ட அலுவலர் சண்முகம், தேர்வுத் துறை இயக்குனர் வசுந்தராதேவி, வழக்கு விசாரணை அதிகாரியான, மாவட்ட குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் சங்கர் உள்ளிட்ட, 57 பேர், அரசு தரப்பில் சாட்சியம் அளித்தனர்.

வழக்கு விவரங்கள் குறித்து, மாஜிஸ்திரேட்டிற்கு எழுந்த சந்தேகங்களுக்கு, கல்யாணசுந்தரம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் விவரங்களை அளித்தனர். இறுதியாக நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது.
Advertisement
நேற்று, காலை 10 மணிக்கு முன்பாக கல்யாணசுந்தரம் தரப்பினர் வந்திருந்தனர். எனினும் மாலை 3 மணிக்கு கோர்ட் ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் மாலை 4.30 மணிக்கு அனைவரும் அழைக்கப்பட்டனர்.மாலை 5.30 மணிக்கு, மாஜிஸ்திரேட் சரிதா, வழக்கின் தீர்ப்பை வாசித்தார்.தீர்ப்பு விவரம்: கல்யாணசுந்தரம், ஆசிரியர் ஆதவன், ரஜினிகாந்த் ஆகிய மூவருக்கும், கூட்டுச்சதி, போலியானஆவணங்களை தயாரித்தல், போலி ஆவணங்களை பயன்படுத்துதல், குற்றம் செய்ய தூண்டுதல் ஆகிய, நான்கு பிரிவுகளின் கீழ் தண்டனை அளிக்கப்பட்டுள்ளது. கல்யாணசுந்தரம், ரஜினிகாந்த், ஆதவன் ஆகிய மூன்று பேரும், இரு சட்டப்பிரிவுகளில் தலா இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும். மூவரும் தலா, 5000 ரூபாய் அபராதமும் செலுத்தவேண்டும். அபராத தொகையை கட்டத்தவறினால் கூடுதலாக மூன்று மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும்.இவ்வாறு மாஜிஸ்திரேட் சரிதா தனது தீர்ப்பில் கூறியிருந்தார். அரசு வழக்கறிஞர் அம்ஜத்அலி ஆஜராகி இருந்தார். கல்யாண சுந்தரம் மீது ஆள்மாறாட்டம் செய்ததாக கூறப்பட்ட புகார் நீக்கப்பட்டது.

தீர்ப்பை அடுத்து, மூவரும்,தலா ரூ.10,000க்கு சொந்தஜாமினும், ரூ.5,000க்கு தனி நபர்ஜாமினும் கேட்டு, மனு செய்தனர்.அவர்களை ஜாமினில் விடுவித்தநீதிபதி, மேல் முறையீடு செய்ய,பிப்., 20ம் தேதி வரை காலஅவகாசம் கொடுத்து, அதுதொடர்பான விவரங்களை,கோர்ட்டில் பதிவு செய்யுமாறுஉத்தரவிட்டார்.



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து (15)
balagiri - Chennai,இந்தியா
01-பிப்-201320:51:50 IST Report Abuse
balagiri பாவம் சரியான அப்பாவி, நோக்கம் சரி. ஆனால் பாதை தவறு.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
chakkrapani - Vellore,இந்தியா
01-பிப்-201313:54:54 IST Report Abuse
chakkrapani 10 -ம் வகுப்பு படிப்பே சுயமாக எழுத முடியாத இவர் எப்படி மக்களுக்கு சிறப்பான ஆட்சி தர முடியும் ?
Rate this:
0 members
0 members
4 members
Share this comment
Rajasekaran Palaniswamy - georgia,யூ.எஸ்.ஏ
01-பிப்-201313:16:49 IST Report Abuse
Rajasekaran Palaniswamy ஒரு மாநில கல்வி அமைச்சர் வளரும் இளைய தலைமுறையினருக்கு இப்படித்தான் ஒரு எடுத்துக்காட்டாக விளங்கவேண்டும். இதைவிடுத்து நமது மதிப்பிற்குரிய முன்னாள் ஜனாதிபதி கனவு காணுங்கள், படியுங்கள், சிந்தனை செய்யுங்கள் என்று அர்த்தமில்லாமல் பெசிக்கொண்டுள்ளார். சரியான நபரை சரியான இடத்தில் தேர்ந்தெடுத்து வைக்காத அரசனும் முட்டாள்தான்.
Rate this:
0 members
0 members
7 members
Share this comment
Guru - Batam,இந்தோனேசியா
01-பிப்-201311:31:52 IST Report Abuse
Guru 10 வகுப்பு கூட தேராதவர்களை கல்வித்துறை அமைச்சராக்கியது யார் குற்றம்
Rate this:
1 members
0 members
17 members
Share this comment
KaNaGaRaJ. S... - chennai -33,இந்தியா
01-பிப்-201321:15:43 IST Report Abuse
KaNaGaRaJ. S... பத்தாம் வகுப்பில் தவறியவர் முதல்வர் ஆகும் போது கல்வி அமைச்சர் ஆக கூடாதா ?...
Rate this:
2 members
0 members
5 members
Share this comment
Asokaraj - Doha,கத்தார்
01-பிப்-201310:40:37 IST Report Abuse
Asokaraj அதெல்லாம் மேல்முறையீடு செய்தே 80/90 வருஷம் ஓட்டிடலாம். வாழ்க நமது அரசியல் சாசனமும் அம்பேத்காரும்.
Rate this:
1 members
0 members
16 members
Share this comment
v.sundaravadivelu - Tiruppur,இந்தியா
01-பிப்-201309:25:59 IST Report Abuse
v.sundaravadivelu இதெல்லாம் சகஜம்பா.. விடுங்க. எதுக்கு பிரச்னை..ஹிஹிஹிஹ்.
Rate this:
2 members
0 members
1 members
Share this comment
Raj - Chennai,இந்தியா
01-பிப்-201308:41:05 IST Report Abuse
Raj எனக்கு தெரிந்து பல பேர் டிகிரி சேர்டிபிகட் விலை கொடுத்து வாங்கி தேர்தலில் கூட போட்டியிட்டுள்ளார்கள்
Rate this:
2 members
0 members
12 members
Share this comment
01-பிப்-201305:37:24 IST Report Abuse
அறிவாலயம் c / o போயஸ் கல்யாணப் பத்திரிக்கையில் தான ஒரு BA பட்டதாரின்னு போட்டுக்கிட்டிருந்தார் இது எப்படி உயிருக்கு? தப்பே இல்லை ஜெயிலில் இருந்தபடியே அந்த நேரடி BA வை முடிக்கலாம். பின் எவனாவது குறை சொல்வானா? ( அடுத்த ஆள் மாறாட்டத்துக்கு சிறை அதிகாரிகள் சரிப்பட மாட்டார்கள்)
Rate this:
0 members
0 members
9 members
Share this comment
Pannadai Pandian - wuxi,சீனா
01-பிப்-201305:32:27 IST Report Abuse
Pannadai Pandian புதுச்சேரி முன்னாள் கல்வி அமைச்சர் கல்யாணசுந்தரம் அரசியலில் கத்துக்குட்டி போல. உடனே அம்மாவிடம் சரண்டர் ஆயிருக்கலாம் அதை செய்யவில்லை. இரண்டாவது தலித் சீட்டை உபயோகப்படுத்தி இருக்கலாம் அதையும் செய்யவில்லை. மூன்றாவதாக தமிழகம் பாண்டியை வஞ்சிக்கிறது என்று ஒரு போடு போட்டிருக்கலாம். அதுவும் இவர் மேல் மாடியில் உதிக்கவில்லை. உடனே மீரா குமார் கால்ல விழுந்துட்டா விமோச்சனம் கிடைக்கும்.
Rate this:
106 members
0 members
20 members
Share this comment
Ha Ha Ha Siripu Varuthu - Coimbatore,இந்தியா
01-பிப்-201302:22:16 IST Report Abuse
Ha Ha Ha Siripu Varuthu அரசியல்வாதிகளுக்கு பல்கலை கழகங்களில் எளிதாக கௌரவ டாக்டர் பட்டம் கிடைக்குமே. அதை விட்டுட்டு 10 ம் வகுப்பு பரிட்சைக்கு போன நீங்க ரொம்ப நல்லவர இருக்கீங்களே சார்.
Rate this:
0 members
0 members
40 members
Share this comment

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

அன்புள்ள வாசகர்களே!,

நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.