கரீம்நகர்: "தெலுங்கானா மாநிலம் அமைக்கப்படும் என கூறிய காங்கிரஸ் தலைவர், சோனியா உறுதிமொழியை காப்பாற்ற தவறிவிட்டார்' என தெரிவித்து, தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சியை சேர்ந்தவர், புகார் செய்துள்ளார்.
அந்த கட்சியை சேர்ந்த, சர்தார் ரவீந்தர் சிங் என்பவர், ஆந்திர மாநிலம், கரீம்நகர் போலீஸ் ஸ்டேஷனில், காங்கிரஸ் தலைவர் சோனியாவுக்கு எதிராக புகார் அளித்துள்ளார். அதில், அவர் கூறியிருப்பதாவது:ஐ.மு., கூட்டணியின் தலைவரான சோனியா, கடந்த, 2004, 2009ம் ஆண்டு பொது தேர்தல் பிரசாரத்தின்போது, தெலுங்கானா மாநிலம் அமைக்கப்படும் என, உறுதியளித்தார். ஆனால், பத்தாண்டுகள் ஆகியும், உறுதி மொழியை காப்பாற்றவில்லை.கரீம் நகரில் நடந்த பொதுக்கூட்டத்தில் தான் இந்த உறுதிமொழியை அளித்தார். ஆனால், தனி மாநிலம் அமைக்கப்படவில்லை. இந்த பிரச்னைக்காக, 800க்கும் மேற்பட்டோர் தற்கொலை செய்துள்ளனர்.காங்கிரஸ் தேர்தல் அறிக்கையிலும் உறுதியளிக்கப்பட்டு இருந்தது; சோனியா நடவடிக்கை எடுக்காததால் தான், இத்தனை பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.இது தொடர்பாக, போலீசார் புகாரை பதிவு செய்து, சோனியா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் குறிப்பிட்டு உள்ளார். இது குறித்து, கரீம்நகர் போலீஸ் இன்ஸ்பெக்ட்ர் கூறுகையில், ""புகாரை பதிவு செய்வது குறித்து, அரசு வக்கீலின் கருத்துக்கு அனுப்பியுள்ளோம். அவரிடம் இருந்து பதில் கிடைத்த பின்,
நடவடிக்கை எடுப்போம்,'' என்றார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.