கம்பம்: ஜப்பான் உதவியுடன் துவக்கப்பட்ட காடு வளர்ப்பு திட்டத்தில், நடவு செய்யப்பட்ட மரங்கள் பராமரிப்பு இல்லாததால், பல இடங்களில் காணாமல் போய்விட்டன. தமிழகத்தில் காடுகளின் பரப்பு 19 சதவீதம். இது குறித்து வேறுபட்ட தகவல்கள் வெளியான போதும், காடுகளின் பரப்பை அதிகரிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. ஜப்பான் உதவியுடன், 2005-06 முதல் 2012-13 வரை காடுகளில் மரக்கன்றுகளை நடவு செய்யவும், காடுகளை சார்ந்துள்ள பழங்குடியினர், தொழில்கள் செய்து வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவும், முடிவு செய்யப்பட்டது. தமிழகம் முழுவதும் 950 கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டன. 150 கிராமங்களில் மாநில அரசால் திட்டத்தை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டு, 1 லட்சத்து 18 ஆயிரம் ஏக்கரில் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டன. இவற்றை தொடர்ந்து கண்காணித்து பராமரிக்க நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் நடவு செய்த மரக்கன்றுகள் பல இடங்களில் காணாமல் போய்விட்டன.
வனத்துறையினர் கூறியதாவது: காடுகள் பரப்பை அதிகரிக்க பல திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. தனியார் நிலங்களில் மரங்கள் வளர்ப்பு, மரத்தோட்டம் அமைத்தல் உள்ளிட்ட பல திட்டங்களில் காடுகளின் பரப்பை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. காடு வளர்ப்பு திட்டத்தில் வளர்க்கப்பட்ட மரக்கன்றுகள் பராமரிப்பு செய்யப்படாததால், வீணாகிவிட்டது உண்மை தான். சமீபத்தில்தான் பராமரிப்பு நிதி ஒதுக்கப்பட்டது. மரக்கன்றுகளை, பராமரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நடவு செய்த மரங்களை காப்பாற்றி, காடுகளின் பரப்பு அதிகரிக்கப்படும், என்றனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.