தூத்துக்குடி: திருச்செந்தூர் முருகன் கோயிலில், நேற்று, மூலவர் பிரதிஷ்டை தின வருஷாபிஷேகம் நடந்தது. திருச்செந்தூர் கோயில் மூலவர் சுப்பிரமணியர், தை மாதம் உத்திர நட்சத்திரத்தில், பிரதிஷ்டை செய்யப்பட்டார். நேற்று, தை உத்திரத்தை முன்னிட்டு, மூலவர் பிரதிஷ்டை தின வருஷாபிஷேகம் நடந்தது. கோயில்நடை, அதிகாலை 5 மணிக்கு திறக்கப்பட்டு, சுவாமிக்கு, 5:30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 6 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம் நடந்தது. காலை 7:30 மணிக்கு, கும்ப கலச பூஜை நடந்தது. காலை 9:15 மணிக்கு, மூலவர், உற்சவர், பெருமாள், விமான கலசங்களுக்கு, கும்ப புனித நீரால் அபிஷேகம் செய்தனர். ஏராளமான பக்தர்கள் தரிசித்தனர். மாலையில், சுவாமி குமரவிடங்கப்பெருமான், அம்பாளுடன், தங்கமயில் வாகனத்தில் எழுந்தருளினார். இரவு 7 மணிக்கு, மூலவருக்கு புஷ்பாஞ்சலி நடந்தது. தக்கார் கோட்டை மணிகண்டன், இணை ஆணையர் சுதர்சன், அதிகாரிகள் ஏற்பாடுகளை செய்தனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.