Advertisement
டெல்டாவில் ஏகபோக கொள்முதல் தடுக்க வர்த்தக சங்கம் ஆர்ப்பாட்டம்
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள் : பிப்ரவரி 01,2013,02:02 IST

கும்பகோணம்: டெல்டா மாவட்டங்களில் ஏகபோக நெல், அரிசி கொள்முதலை தடை செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.
டெல்டா மாவட்டங்களில் ஏகபோக நெல், அரிசி கொள்முதலை தடை செய்ய வலியுறுத்தி, கும்பகோணம் காந்தி பார்க் முன் வர்த்தக சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில், தஞ்சை மாவட்ட நெல் அரிசி வியாபாரிகள் சங்க செயலாளர் சேகர் தலைமை வகித்து பேசியதாவது:
காவிரி டெல்டா மாவட்டங்களான தஞ்சை, நாகை, திருவாரூர், அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில், பாசனத்துக்கு உரிய காலத்தில் தண்ணீர் இல்லாதபோதும், மழை இல்லாத நிலையிலும், மும்முனை மின்சாரம் இல்லாமல் கடுமையான போராட்டத்துக்கு இடையே, விவசாயிகள் பம்புசெட்கள் மூலம் சம்பா நெல் சாகுபடி செய்துள்ளனர். முன்பட்ட சம்பா அறுவடை நடந்து வரும் நிலையில், பல இடங்களில் லாரிகளை கொண்டு வந்து, நேரடி நெல் கொள்முதல் செய்ய துவங்கிவிட்டனர். வியாபாரிகள், விவசாயிகளிடம் இருந்து நேரிடையாக, ரிலையன்ஸ் நிறுவனம் ஏகபோக கொள்முதல் செய்து, நெல்லை பதுக்கி வைக்க திட்டமிட்டுள்ளனர்.
இதன் மூலம் செயற்கையான அரிசி தட்டுப்பாடும், விலை ஏற்றமும் நடந்து வருகிறது. எனவே ஏகபோக நெல், அரிசி கொள்முதல், அளவுக்கு அதிகமாக பதுக்கி வைப்பதை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
வணிகர் சங்க பேரவை மாவட்ட தலைவர் கணேசன், செயலாளர் முருகேசன் முன்னிலை வகித்தனர். தொகுதி செயலாளர் முத்துராஜா, இந்திய மனித உரிமைகள் பாதுகாப்பு கழக மாநில பொறுப்பாளர் திருவேங்கடம் மற்றும் வர்த்தக சங்க பொறுப்பாளர்கள் பங்கேற்றனர். துணைத்தலைவர் சத்தியமூர்த்தி நன்றி கூறினார்.
அன்னிய நேரடி முதலீட்டை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும், உணவு தர நிர்ணய சட்டத்தை முறைப்படுத்த வேண்டும், வால்மார்ட் நிறுவனம் சென்னையில் கட்டடங்கள் கட்டுவதை நிறுத்த வேண்டும், அரிசி விலை ஏற்றத்துக்கு மிக முக்கிய காரணமான, ஏகபோக கொள்முதலை தடுக்க வேண்டுமென வலியுறுத்திம் ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டது.




வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து (1)
venkat Iyer - nagai,இந்தியா
01-பிப்-201316:58:46 IST Report Abuse
venkat Iyer தனியார் வியாபாரிகள் தன்னுடைய பொழப்பதான் பார்க்கராங்க.விவசாயிகளுக்கா ஆதாயம் தேடராங்க.போட்டி இருந்தா,விவசாயிகளுக்கு நல்லது.இல்லாட்டி,உங்க கும்பல் சங்கம் அமைத்து விலைய படு மட்டத்துக்கு குரைச்சுடுவாங்க.இனிமே,விவசாயியும் சும்மா இருக்க மாட்டான்.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

அன்புள்ள வாசகர்களே!,

நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.