ஈரோடு: ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் அதிகாரிகள் குறட்டைவிட்டு தூங்கிய சம்பவம் அங்கு வந்த விவசாயிகளை வெறுப்பேற்ற வைத்தது.
நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் கூடியது. கூட்டத்தில் நாட்டில் மழை இல்லை, விவசாயம் இல்லை. வெட்டிய கரும்புக்கு நியாயமான விலை கிடைக்கவில்லை. ஊரெல்லாம் சாயக்கழிவால் நல்ல குடிநீர் இல்லாமல் திண்டாடி போய் உள்ளனர். விவசாயிகள் வாங்கியில் வாங்கிய கடனுக்கு வட்டி கட்ட முடியாமல் தற்கொலை செய்து கொள்கின்றனர் ... என மூச்சிறைக்க ஒரு விவசாயி ஆவேசமாக பேசினார், ஆனால் கூட்டத்தில் கலந்து கொண்ட அரசு அதிகாரிகள்"பொறுப்பாக' கூட்டத்தை கவனிப்பார்கள் என பார்த்தால் ஏமாற்றமே மிஞ்சியது. மேலே ஓடிய மின்விசிறியின் காற்றில் தங்களை மறந்து ஒவ்வொரு அதிகாரிகளும் ஒவ்வொரு கோணத்தில் ஆழ்ந்த நித்திரையில் குறட்டை விட்டு கூட்டத்தை கவனித்தனர். இதனை அங்கு வந்திருந்த விவசாயிகள் பார்த்து வெறுப்படைந்தனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
Lack of self discipline, addiction to liquor/late night movies or TV shows saps the energy and keep the (Unaccoun)Govt staffs always tried. Also they lack basic human attitude and insensitive to take care of the poor and the needy. If one is willing to pay the bribe they demand, govt. staffs may (are willing to) work. They think their salary is always meant for them to att office. To make them work they need EXTRA.... As they see the corrupt politicians in close quarters they justify their action.. India need real freedom from the clutches of these corrupt Bureaucrats and the politicians

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.