வத்திராயிருப்பு: வத்திராயிருப்பு வட்டார விவசாயிகளுக்கு மானியவிலையில் விவசாய கருவிகள், பயறு, பருத்தி விதைகள் வழங்கப்படுகின்றன.தற்போது காலமுறைக்கான நெல்அறுவடை பணிகள் முடிந்துள்ளன. அடுத்து கோடைகாலம் நெருங்குவதால் நீர் தேவை குறைவாக உள்ள பருத்தி, பயறு வகைகளை விவசாயிகள் பயிரிடுவது வழக்கம். இதை முன்னிட்டு வத்திராயிருப்பு வேளாண்மை விரிவாக்க மையத்தில் மானியவிலையில் பருத்தி, மற்றும் பல்வகை பயறுகளுக்கான விதைகள் அவற்றிற்கான இடுபொருட்கள் அரசு மானியத்துடன் வழங்கப்படுகின்றன. இது குறித்து வேளாண்மை உதவி இயக்குனர் பாண்டித்துரை கூறுகையில், ""நீர்வள நிலவள திட்டத்தின் கீழ் மக்காச்சோளம் செயல்விளக்க திடல்கள் அமைக்கப்படவுள்ளன. பயறுவகை பயிர்களில் விவசாயிகள் வரிசை நடவு மேற்கொள்ள பயறு விதைக்கும் கருவிகள், களைக்கருவிகள், 50 சதவீத மானியத்துடன் வழங்கப்படுகிறது. சில்பானின் பைகளில் மண்புழு உரம் தயாரிக்க தொழில்நுட்ப பயிற்சியும் வழங்கப்படுகிறது,'' என்றார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.