புதுடில்லி: தெலுங்கானா விவகாரத்தினை தாமதப்படுத்தினால் ஆபத்து தான் என மத்திய அமைச்சர் சரத்பவார் கூறினார். ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் அங்கம் வகிக்கும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவரும், மத்திய அமைச்சருமான சரத்பவார், நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தெலுங்கானா மாநிலம் உருவாக்கப்பட வேண்டும்.இந்த விவகாரத்தில் மத்திய அரசு இனிமேலும் தாமதப்படுத்தக்கூடாது. அது பின்னாளில் ஆபத்தை விளைவிக்கும். தெலுங்கானா பகுதியில் தற்போது ஓய்.எஸ்.ஆர்.காங்.கட்சி செல்வாக்குடன் வளர்ந்து வருகிறது. இதனை காங்கிரஸ் நன்கு புரிந்து கொள்ள வேண்டும். ஏழு ஆண்டுகளுக்கு முன்பு தெலுங்கானா பகுதியில் ,தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சியின் பேரணியில் கலந்து கொண்டபோது தெலுங்கானாவை ஆதரித்தேன். எனவே இப்போதும் தனித்தெலுங்கானாவை ஆதரிக்கிறேன்.இவ்வாறு சரத்பவார் கூறினார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
இந்த தெலங்கானா விஷயத்தை பார்த்தால் சிரிப்புதான் வருது. எந்த மொக்க பாண்டியோ நாட்டை ஆளும்போது பக்கத்து மாநிலங்களுக்கெல்லாம் நம் தமிழ் நாட்டை பங்கு போட்டு கொடுத்து விட்டார்கள். இப்போ நாம் அவர்களிடமே நம் சொத்துக்களையே பிச்சை எடுத்துக்கொண்டு இருக்கிறோம். நம்மளே பிரிவினை பத்தி யோசிக்கலே. இவனுங்களுக்கு என்ன.. இதெல்லாம் பொழப்புக் கேட்ட அரசியல்.
இந்த தெலங்கானா விஷயத்தை பார்த்தால் சிரிப்புதான் வருது. எந்த மொக்க பாண்டியோ நாட்டை ஆளும்போது பக்கத்து மாநிலங்களுக்கெல்லாம் நம் தமிழ் நாட்டை பங்கு போட்டு கொடுத்து விட்டார்கள். இப்போ நாம் அவர்களிடமே நம் சொத்துக்களையே பிச்சை எடுத்துக்கொண்டு இருக்கிறோம். நம்மளே பிரிவினை பத்தி யோசிக்கலே. இவனுங்களுக்கு என்ன..

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.