Advertisement
தண்டவாளத்தில் விரிசல்: சிறுவனின் சமயோசிதத்தால் ரயில் விபத்து தவிர்ப்பு
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
ஆல்பம்
பதிவு செய்த நாள் : பிப்ரவரி 02,2013,00:02 IST
மாற்றம் செய்த நாள் : பிப்ரவரி 02,2013,17:26 IST

நகரி: தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசல் குறித்து, சிறுவன் ஒருவன் குறித்த நேரத்தில் தகவல் தெரிவித்ததால், சப்தகிரி விரைவு ரயில் தண்டவாளத்தில் விபத்தில் இருந்து தப்பியது.

சப்தகிரி விரைவு ரயில், நேற்று மதியம், சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்பட்டு சென்றது. ஆந்திர எல்லையை ஒட்டி உள்ள, பொன்பாடி - தடுக்குபேட்டை ரயில் நிலையகளுங்களுக்கு இடையே, மாலை, 4:00 மணிக்கு வந்து கொண்டிருந்தது.சப்தகிரி விரைவு ரயில் வருவதற்கு சில நிமிடங்கள் முன்பாக, அவ்வழியாக சரக்கு ரயில் ஒன்று சென்றது. அந்த ரயிலின் கடைசி பெட்டி, மேற்கண்ட இரு ரயில் நிலையங்களுக்கு இடையே கடந்து சென்றதும், தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டு பயங்கர சத்தம் கேட்டது.

இதை அப்பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த சிரஞ்சீவி என்ற சிறுவன் கவனித்தான். உடனே, அருகில் இருந்த, ரயில்வே கடவுபாதையில், பணியில் இருந்த ஊழியரிடம், விஷயத்தைக் கூறினான். அவர் இதுகுறித்து, ரயில் நிலைய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார்.அவர்கள் துரிதமாக செயல்பட்டு, அவ்வழியாக வந்து கொண்டிருந்த சப்தகிரி விரைவு ரயிலை நிறுத்தினர். தகவல் அறிந்து, ரயில்வே ஊழியர்கள் விரைந்து வந்து, தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்ட இடத்தை சரி செய்தனர்.

இதையடுத்து, சப்தகிரி ரயில் ஒன்றரை மணி நேரம் காலதாமதமாக புறப்பட்டு சென்றது. சிறுவன் சமயோசித புத்தியால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. ரயில்வே அதிகாரிகளும், பயணிகளும் சிறுவனை பாராட்டினர்.




வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து (18)
parvathy murali - melbourne,ஆஸ்திரேலியா
05-பிப்-201306:51:33 IST Report Abuse
parvathy murali சிறுவன் சிரஞ்சீவிக்கு வாழ்த்துக்கள் அரசு அவனுக்கு மெடல் குடுத்து பாராட்ட வேண்டும்
Rate this:
0 members
0 members
1 members
Share this comment
B.Vigneshkumar - Jeddah,சவுதி அரேபியா
02-பிப்-201315:50:36 IST Report Abuse
B.Vigneshkumar dutch boy & dyke .... Indian boy with Rail
Rate this:
1 members
0 members
5 members
Share this comment
LAX - Trichy,இந்தியா
02-பிப்-201314:49:20 IST Report Abuse
LAX சிறுவனுக்கு பாராட்டுக்கள். வாழ்க வளமுடன்.
Rate this:
0 members
0 members
7 members
Share this comment
sundar iyer - chennai,இந்தியா
02-பிப்-201313:25:38 IST Report Abuse
sundar iyer ஒரு சிறுவனுக்கு இருக்கும் அக்கறை கூட ரயில்வேயில் பணிபுரியும் ஊழியர்களுக்கு இல்லை என்றால் இதை விட வெட்கம் வேறு எதுவும் இல்லை. இந்த லட்சணத்தில் ரயில்வே சங்கங்களின் வாழ்த்து போஸ்டர்கள் கண்ட கண்ட ஆர்ப்பாட்டங்கள் என்று தேவை இல்லாமல் சுவற்றை அசிங்கப்படுத்தும் இவர்களை என்ன செய்வது?
Rate this:
1 members
0 members
6 members
Share this comment
Dhanabal - Thoothukudi,இந்தியா
02-பிப்-201312:07:42 IST Report Abuse
Dhanabal ஓடும் ரயிலுக்கு குண்டு வைத்து அப்பாவி உயிர்களை பலி வாங்கும் நாசகார மனிதர்கள் வாழும் நாட்டில் ,ரயில் பாதையில் ஏற்பட்ட விரிசலை கண்டு பிடித்த நீ, சிரஞ்சீவி அல்ல சமய சஞ்சீவி. பாராட்டுக்கள் உரித்தாகுக....
Rate this:
0 members
0 members
13 members
Share this comment
Pa. Saravanan - Kovai,இந்தியா
02-பிப்-201311:29:48 IST Report Abuse
Pa. Saravanan பையன் பேர் ரஞ்சித்தா சிரஞ்சீவியா? எதுவானாலும் பாராட்டப்படவேண்டியவனே. வாழ்த்துகள் மற்றும் நன்றிகள் நண்பா.
Rate this:
0 members
0 members
12 members
Share this comment
K.Balasubramanian - Reading RG5 1DG ,யுனைடெட் கிங்டம்
02-பிப்-201310:36:29 IST Report Abuse
K.Balasubramanian சிரஞ்சீவி என்றும் சிரஞ்சீவியாக வாழ வாழ்த்துகிறேன் .ரயில்வே இவர் போன்றவர்களால் பாதுகாக்க படுகிறது .
Rate this:
0 members
0 members
7 members
Share this comment
B.Madhavan, - chennai ,இந்தியா
02-பிப்-201310:24:19 IST Report Abuse
B.Madhavan, விபத்திலிருந்து மத்திய அரசின் உரிமையான ரயிலை விபத்திலிருந்து காப்பாற்றியதுடன் அள்ளாமல் அதில் பயணம் செய்த அனைத்து உயிர்களையும் காப்பற்றியிருக்கிறான். அவருக்கு சம்பந்தப்பட்ட அரசுகள் தக்க சன்மானத்தை கொடுப்பதுடன் அள்ளாமல், அந்த பணிகளை செய்ய சம்பந்தப்பட்ட நிர்வாகம் நியமிக்கப்பட்ட ஊழியர்களை(அவர்களின் பணிகளை சரிவர செய்யாததற்கு) தண்டிக்கவும் செய்யவேண்டும் என்பது எனது கருத்து.
Rate this:
4 members
0 members
6 members
Share this comment
sabari - Theni,இந்தியா
02-பிப்-201309:52:26 IST Report Abuse
sabari சிறுவன் பெயர் சிரஞ்சீவியா? ரஞ்சித்தா?
Rate this:
0 members
0 members
8 members
Share this comment
VENKATESWARAN V - coimbatore,இந்தியா
02-பிப்-201309:19:58 IST Report Abuse
VENKATESWARAN V பாராட்டப்படவேண்டிய விஷயம் மட்டுமல்ல மத்திய அரசு தகுந்த சன்மானம் அளித்து அந்த சிறுவனை கவுரவிக்க வேண்டும். மேலும் மீடியாக்கள் இந்த விஷயத்தை பெரிதுபடுத்த வேண்டும். பல நேரங்களில் இத்தகைய சிறப்பான செயல்கள் பலருக்கு தெரியாமலே போய்விடுகின்றன.
Rate this:
0 members
0 members
29 members
Share this comment

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

அன்புள்ள வாசகர்களே!,

நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.